Subbiahpatturajan
உணர்வும் வாழ்வும்.
கீழ்த்தரமான உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். அவ்வாறு இடம் கொடுத்தால் மேன்மையான நிலையை அடையமுடியாது.
புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். புத்தகம் படிப்பதால் படிப்பவரின் ஆளுமையும் வளரும் இலக்கியமும் வளரும் தமிழும் வளரும்.
ஆறுதல் கூற வந்து ஆறாத புதிய ரணங்களைப் பரிசாகத் தருவார்கள் சிலர். நம்மை வேடிக்கை பார்த்து அகம் மகிழ்பவர்கள் சிலர்.
சோகங்களையும் துயரங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடையும் மனிதன். தனிமையில் உண்மையான ஆறுதலை தனகுதானே தேடிக்கொள்ளுகிறான்.
பார்க்கும் கோணம் மாறுபட்டால் கோபத்தில் கூட நேர்த்தி இருக்கும். பார்க்கும் கோணம் வேறுபட்டால் புன்னகை கூட துரோகமிழைப்பதற்கு முன்னோட்டமாகத் தென்படும்.
துக்கமான சூழலில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது மீண்டும் உங்களைத்த் துக்கத்தில் தான் கொண்டு போய் விடும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்துக் கொள்ளுங்கள். அது போன்ற நேரங்களில் அமைதியாகத் தியானம் செய்யுங்கள். மனம் அமைதி கொள்ளும் வரையில்..!!
நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது நமக்குள் இருக்கும் சக்தியை ஒவ்வொரு சொல்லிலும் உணரலாம்.
எதையும் சாத்தியமாக்கும் சக்தி நமக்குள் உள்ளது.
சந்தேகத்தைக் குறைத்து தன்னம்பிக்கையைத் தூண்ட வேண்டும்.
வாழ்க்கையில் மனிதநேயத்துடன் நீங்கள் நீங்களாக இருக்கும் வரை மட்டுமே மகிழ்ச்சி உங்களுடையதாக ஆக இருக்கும்._
நாம் செல்லும் பாதையில் ,, மேடு, பள்ளம்,, இருப்பதைப் போன்று,, நம் வாழ்விலும் ,, இன்பம், துன்பம்,, இரண்டும் கலந்தே இருக்கும்,,
கருத்துகள்