Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"Google Pay PhonePe Paytm support numbers"How to contact. Here are some steps.

Subbiahpatturajan Google Pay, PhonePe, மற்றும் Paytm ஆகியவற்றின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள, பின்வரும் வழிகளையும் தொலைபேசி எண்களையும் எப்படி பயன்படுத்தலாம்.  இவை இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளாகும்: 1. Google Payதொலைபேசி எண்:  1800-419-0157 (கட்டணமில்லா எண், 24/7 கிடைக்கும்). தொடர்பு கொள்ளும் முறை: Google Pay ஆப்-ஐ திறந்து, "Help & Feedback" என்ற பகுதிக்குச் செல்லவும். அங்கு சாட் ஆதரவு (8 AM - 12 AM IST) அல்லது மின்னஞ்சல் வழியாக உதவி பெறலாம்.மேலே குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைத்து, பிரச்சினையை விளக்கி தீர்வு கேட்கலாம். குறிப்பு: பயன்பாட்டில் உள்ள "Help" பகுதியில் பிரச்சினையை பதிவு செய்தால், விரைவாக பதில் கிடைக்கும். 2. PhonePeதொலைபேசி எண்:  080-6872-7374 (வாடிக்கையாளர் ஆதரவு) அல்லது 022-6872-7374 (மாற்று எண்).தொடர்பு கொள்ளும் முறை: PhonePe ஆப்-ஐ திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "?" (கேள்விக்குறி) ஐகானை கிளிக் செய்யவும்."Contact Us" என்ற பகுதியில் உங்கள் பிரச்சினையை தேர்ந்தெடுத்து, சாட் அல்லது மின்னஞ்சல்...

வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்க வேண்டாம்

Subbiahpatturajan வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கவேண்டாம் ஆன்லைன் மூலம் லோன் வாங்குபவர்களா...? எச்சரிக்கை. ஆன்லைன் லோன் வாங்குவதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.._ பான் கார்டு, ஆதார் அட்டை இருந்தால்  போதும்..._ 3000 முதல் 10000 லோன் வரும் ஆப் விளம்பரங்கள் மூலம்  கடன் பெற்று* .. திருப்பி தரவில்லை என்றாலோ, அல்லது_ கால தாமதம் ஆனாலோ பெரும் மானப்பிரச்சனை தான்..._ லோன் கொடுக்கும் போதே அவர்கள்  செயலிகள் மூலம்..*_  உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தொடர்பு எண்கள், படங்கள், வீடியோக்கள் எடுத்து கொள்வார்கள் ... இவை யெல்லாம் ஒரே ஒரு டிக்( I  Agree)மூலம் தான்..._ கடன் தவணை தவறும் பட்சத்தில் உங்களுடைய அதே பான் கார்டு மற்றும்  ஆதார் அடையாள அட்டை கொண்டு..._ இன்னாருக்கு எய்ட்ஸ் வந்து விட்டது எனவும் வாங்கி கடனை அடைக்க இவருக்கு உதவுங்கள் என ... இன்னும் ஆபாசமாகவும்..*_ உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பிலும் அனுப்புகிறார்கள்..._ வீணாக வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்க வேண்டாம்.. ஒரு நாளைக்கு 20  மேற்பட்ட புகார்கள் வருகிறதாம்..._ ஆகையால்...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்?

Subbiahpatturajan பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை நடிகர்களின் ரசிக குஞ்சுகளுக்கு... வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை, இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள்.  மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா? அங்கோர்வாட் கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் க...

இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.

Subbiahpatturajan நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில், கஷ்டப் படுவதற்கு என்ன காரணம், என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!  இது கூடவா,  ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,  அந்த காரணம் என்ன?  தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?  என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். *எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் #அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,*  அவர்களுக்கு #நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் *கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.*   இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.  *சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?* #எந்த கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் பார்த்துவிடலாம்.# *உங்களுடைய #அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,*  அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,  உங்களுக்கு திருமணம் தள்...

மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.

Subbiahpatturajan  நமது வாழ்க்கையில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் குற்றம் சொல்ல முடியாது! நல்ல மனிதர்கள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார்கள்  கெட்ட மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை தருவார்கள்  மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.    மிக சிறந்த மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஞாபகங்களைத் தருவார்கள்  நம்மிடம்எதிர்பார்த்ததை  நாம் கொடுக்காத போது.. எதிர்ப்பாக மாறுகிறது எதிர்பார்ப்பு! யாரை விமர்சித்தாலும் சற்று நாவடக்கம் கொள்.. கர்மம் காத்திருந்து கருவறுக்கும் என்பதை நினைவில் வைத்து கொள் ..!! எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ.. அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு புரிந்து போகிறது.. வாழ்க்கையின் நிதர்சனம் ஒருவன் தனியாவே இருந்தா அதுக்கு பேரு சுயநலம் இல்ல.. யாரையும் காயப்படுத்தாம வாழனும்கிற பொதுநலமாவும் இருக்கலாம்! தடம்மாறி விழுந்த விதை முளைக்கும் போது.. தடுமாறி விழுந்த நாம் தடம்பதிக்க முடியாதா என்ன? தூசி தட்டி எழுந்து முன்னேறுவோம் நம்பிக்கையுடன்! அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் ஆச்ச...

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Subbiahpatturajan   அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி!  தமிழ் இலக்கியத்தில் செம்பரத்தை இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று. செம்பருத்தி என்று ஏன் அழைக்கிறோம்   சப்பாத்துச் செடி , ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.  செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர்.  ‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க செம்பருத்தி அடையாளம்:  பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது.  செம்பருத்திப் பூவின் தோற்றம் இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு.  செம்பருத்தியின் ஆங்கில பெயர் செம்பரத்தையின் தாவரவியல்  பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும்.  குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – x...

தூய நம்பிக்கை எப்போதும் பரிபூரணமாக கிடைக்கும் இடம் இரண்டு ஏங்கே உங்களுக்கு தெரியுமா?!

Subbiahpatturajan ஒரு சின்ன கதை...படித்ததில் மனதை நெருடிய வரிகள் உங்கள் பார்வைக்கு ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை  காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை.  ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு  சிறப்புத்தன்மையும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், " முன்னேற்ற அறிக்க...

ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது

Subbiahpatturajan முன்பு கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த இந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின்  எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர். ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர். வட நாட்டவர்களால் என்ன பாதகம்.    வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.      வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு.          இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....??     தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே.நம் தமிழர்களுக்கு நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம்,...

சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்போர் நெடுந்தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இதை படித்து பயன் பெறுங்கள்.

Subbiahpatturajan இந்தியாவில்  சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படாமல் இருக்க 10 முக்கியமான டிப்ஸ்  கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள். விபத்துகள் ஏற்ப்பட காரணங்கள் விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகளே. இதற்க்கு காரணம். 1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலால் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது இல்லை 2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது. 3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்கேயாவது போய் மோதி விடுகிறார்கள். 4. காரை அடிக்கடி பயன்பாட்டில் வைக்காத காரணத்தால் சில நேரங்களில் பிரேக...

நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை சரியாகப் பயன்படுத்துவதே இல்லை.!?

Subbiahpatturajan ஒரு சின்ன கற்பனை. விருப்பமுடன் படியுங்கள். தினம் ரூபாய் 86400/-. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.   இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை – 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் ” உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்ற முடியாது. 3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4) ஒவ்வொரு நாளும் விடியும் போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும் 5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம். 6) வங்கி “ முடிந்தது கணக்கு ” என்று சொன்னால் அவ்வளவு தான்.வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்குப் பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களு...

ZOMATO SWIGGY Online Order செய்து சாப்பிடும் பழக்கம் இருந்தால் இது உங்களுக்கு தான்?!

Subbiahpatturajan *அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்* *வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ? *1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.* *சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.* *அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,* * கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.* *அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.* *சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.* *சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.* *சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.* *1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகி...

மாட்டுக்கு கூட அறிவு உண்டு பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?

Subbiahpatturajan புண்ணாக்கு திண்ணும் மாட்டுக் கூட அறிவு உண்டு. பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?  இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை பணியமர்த்துவதில் இனி மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாதாம்!    மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை மத்திய அரசாங்கமே பணி அமர்த்துமாம்!  தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவாரா இருப்பாங்க!   தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் பல்வேறு துறைகளின் செயலர்களாக இருப்பாங்க!   இந்தி பேசாத மக்கள் வாழும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படும்!   தமிழ் தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டால் மக்களும் பாதிக்கபபடுவார்கள்!   மத்திய அரசின் கொத்தடிமைகளாக் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் ஆக்கப்படுவார்கள்!   மத்திய அரசு இடும் கட்டளைகளை மாநில அரசுகளின், மாநில மக்களின் ஒப்புதல...

தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்க போகிறது.

Subbiahpatturajan தென் தமிழக மாவட்டங்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும்  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மன்னார்வளைகுடா தென் தமிழக கடல் பகுதி வழியாக குமரி கடல் நோக்கி நகரும். இந்த காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில்  அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.    தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் சில இடங்களில் மிக கனமழையும் மாஞ்சோலை போன்ற மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் கோவை திருப்பூர் நீலகிரி வரை உள்ள மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் கனமழை பெய்யும். ஈரோடு சிவகங்கை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். இன்று தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.  ப...

உங்கள் மீது அக்கறை கொள்பவர்களின் மீது அலட்சியமாக நடந்து கொள்ளாதீர்கள்.

Subbiahpatturajan *படிங்க ரொம்ப பிடிக்கும்!...* *அந்த வீட்டு ஆண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....* *ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து  சுற்றுலா  போகிறேன்" .... என்று அந்த ஆணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....* *மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....* *மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....* *குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கி...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

பாத்ரூம் கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம்...!?

Subbiahpatturajan 60/65 வயதிற்கு மேற்பட்ட  இருபால் அன்பர்களுக்கும் சில முக்கியமான டிப்ஸ்:- 1.பாத்ரும் செல்லும் பொழுது(வீட்டில்) கதவை சும்மா சாத்தி வைங்க, தாழ் போடவேண்டாம். 2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்கவேண்டாம். 3.ஸ்டூல்,நாற்காலி,பெஞ்ச் போன்றவற்றின் ‌.மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம் செய்வது, துணிகளை காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும். 4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 5.மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.. 6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். 7.வங்கிக்கு பணம் எடுக்கச்சென்றால் தனியாகச்செல்ல வேண்டாம்.துணையுடன்செல்லவும். 8.வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை தவிர்க்கவும்.அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும். 9.கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும். 10.சைக்கிள் முதல் கார் ...

உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️

Subbiahpatturajan விவசாயிகள் மட்டுமின்றி,  உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள் இதோ..⁉️ 1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..?? 2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..? 3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..?? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும். 4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..?? 5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..?? 6️⃣ PDS system  என்னாவது ..?? 7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..?? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் சந்தேகம் உள்ளதா ..?? 8️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களால் மாநில இளநிலை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வது அவ்வளவு கடினமா ..?? 9️⃣ ஒரு நாட்டில் உழவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி மன்றம் செல்லமுடியாது என்பது உண்மையில்...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

முன்னொரு காலத்தில் பெண் சுதந்திரம் என்பது

Subbiahpatturajan #பெண்சுதந்திரம் காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமம் தான் நான் வளர்ந்தது. என் வீட்டில் எல்லாம்  எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது ஆனா அக்கம் பக்கத்து வீடுகளில் பெண்களோட அடிப்படை உரிமைகள் கூட அவங்க பெற்றோர்களாலேயே பறிக்கப்படுவதை நேரில் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிறேன். பொட்ட புள்ளைங்க விளையாடக்கூடாது. பூமி அதிர நடக்கக்கூடாது.வாய்விட்டு சிரிக்க கூடாது . சமையல்கட்டு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் . ஆனால் இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளை பசங்களுக்கு கிடையாது .அதை விட கொடுமை சாப்பாடு விஷயம் தான். ஆண்பிள்ளை பசங்களுக்கு நிறைய சாப்பாடு போடுவாங்க பொம்பளை பசங்களுக்கு கம்மிதான் சொந்த அம்மா அப்பாவே இதை பண்ணா எப்படி இருக்கும் ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும் வயிறு ஒன்றுதானே . அப்பவே எங்க அம்மாகிட்ட ஏம்மா இப்படி பண்றாங்கன்னு சண்டை போட்டு இருக்கேன். அதுல எங்க அம்மா நம்ம வீட்டில இப்படி இல்லை மத்தவங்க வீட்ல நடக்கிற தான் நாம எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுவாங்க. நீங்களும் அந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கீங்களா...? அந்த சமயத்துல அம்மா அப்பாவை எதிர்த்து ஒன்றும் பண்ண...

ஆப்பிள் இந்தியா வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு...!!? Do you know the history of Apple India ... !!?

Subbiahpatturajan மெல்ல அழிந்த #இயற்கை உணவுகள்..!! ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா?.. இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்...  குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்.. தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது.. அரேபிய #பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது.. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி. #ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது.. மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது.. இங்கு வெள்ளையன்  வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான்... வந்...

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே...???

Subbiahpatturajan ஏன்? எதற்கு? என, சிந்தித்துண்டா? தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட் டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே  நல்ல வேலைக்கு போகவா? ஆங்கிலம் சரளமாக பேசவா? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? ஏன்? எதற்கு? என்று சிந்தித்ததுண்டா?? 11TO12 200000 லட்சம் ஆக மொத்தம் Pre kg 25000 ல் துவங்குகிறது  Lkg 40000 Ukg 50000 1st.60000 2ND 70000 3D. 80000 4TH 90000 5TH 100000 6TO8 1.20000 9TO10. 150000 9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க. சரி! இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.?  ஒன்றை நினைவில் வையுங்க...