Subbiahpatturajan
ஆம் இது மத வெறி பிடித்த மனநோயாளிகளுக்கான பதிவு மட்டுமே!?
15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் ஆளும் கட்சி ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
ஆளும் கட்சி இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.
ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.
மசூதியை இடித்து கோவில் கட்டுவதால் , இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
இனியும் இடிப்போம்! என கூறும் மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா?
உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
அதாவது நமக்கு நன்மையில்லா விட்டாலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்க படுவதில் சுகம் காணும் மனோவியாதி தான் அது!
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோ வியாதி தான் அது !!!.
ஆளும் கட்சியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பிரதமரின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!.
ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
இது இந்த நாட்டின் அரசியலை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.
கருத்துகள்
பிறப்பில் இருந்து இறப்பு வரை