முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கு கூட அறிவு உண்டு பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?

Subbiahpatturajan

புண்ணாக்கு திண்ணும் மாட்டுக் கூட அறிவு உண்டு. பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?

மாட்டுக்கு கூட அறிவு உண்டு பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?

இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை பணியமர்த்துவதில் இனி மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாதாம்!  
மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை மத்திய அரசாங்கமே பணி அமர்த்துமாம்!
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவாரா இருப்பாங்க! 
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் பல்வேறு துறைகளின் செயலர்களாக இருப்பாங்க! 
இந்தி பேசாத மக்கள் வாழும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படும்! 

தமிழ் தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டால் மக்களும் பாதிக்கபபடுவார்கள்! 

மத்திய அரசின் கொத்தடிமைகளாக் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் ஆக்கப்படுவார்கள்! 
I AM Indian I Don't Speak Hindi


மத்திய அரசு இடும் கட்டளைகளை மாநில அரசுகளின், மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள்!
தனது கன்றின் குரலைக் கேட்டால் தான் கன்றைத் தேடி மாடு ஓடி வரும். குரலும் மொழியும் வெறும் ஒலி மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் நமது மாநிலத்தில் நமது மொழி தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே நம்முடைய மக்களின் சிக்கல்களைக் கேட்டறிந்து புரிந்துகொண்டு செயல்பட முடியும்! 
ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள ஆட்சி நிர்வாக முறைச் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்து அறிந்து இயற்றப்பட்டவை. 
இந்தி பேசாத மாநிலங்களின் ஆட்சியாளர்களையும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக ஆட்சி நிர்வாகச் சட்டங்களை மாற்றுவது இந்திய ஒன்றியத்தை உடைக்கவே வழி செய்யும்!

ஹிந்தியை ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...