Subbiahpatturajan
அன்பை விதைத்து
நமது வாழ்க்கையில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரையும் குற்றம் சொல்ல முடியாது!
நல்ல மனிதர்கள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவார்கள்
கெட்ட மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை தருவார்கள்
மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.
கெட்ட மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை தருவார்கள்
மிக மோசமான மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல பாடங்களைத் கற்றுத்தருவார்கள்.
மிக சிறந்த மனிதர்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஞாபகங்களைத் தருவார்கள்
நம்மிடம்எதிர்பார்த்ததை நாம் கொடுக்காத போது..
எதிர்ப்பாக மாறுகிறது எதிர்பார்ப்பு!
யாரை விமர்சித்தாலும் சற்று நாவடக்கம் கொள்..
கர்மம் காத்திருந்து கருவறுக்கும் என்பதை நினைவில் வைத்து கொள் ..!!
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ..
அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு புரிந்து போகிறது..
வாழ்க்கையின் நிதர்சனம்
ஒருவன் தனியாவே இருந்தா அதுக்கு பேரு சுயநலம் இல்ல..
யாரையும் காயப்படுத்தாம வாழனும்கிற பொதுநலமாவும் இருக்கலாம்!
தடம்மாறி விழுந்த விதை முளைக்கும் போது..
தடுமாறி விழுந்த நாம்
தடம்பதிக்க முடியாதா என்ன?
தூசி தட்டி எழுந்து முன்னேறுவோம் நம்பிக்கையுடன்!
அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும் முடிந்து போகும்
அது வரை....
கருத்துகள்