Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
புண்ணாக்கு திண்ணும் மாட்டுக் கூட அறிவு உண்டு. பாலும் நெய்யும் கலந்து சோறு தின்னும் மனுசனுக்கு வேண்டாமா?
இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை பணியமர்த்துவதில் இனி மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாதாம்!
மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமலேயே இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகளை மத்திய அரசாங்கமே பணி அமர்த்துமாம்!
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவாரா இருப்பாங்க!
தமிழ்நாட்டில் இனி தமிழே தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் பல்வேறு துறைகளின் செயலர்களாக இருப்பாங்க!
இந்தி பேசாத மக்கள் வாழும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் ஆட்சி நிர்வாகம் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படும்!
தமிழ் தெரியாத இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டால் மக்களும் பாதிக்கபபடுவார்கள்!
மத்திய அரசின் கொத்தடிமைகளாக் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரிகள் ஆக்கப்படுவார்கள்!
மத்திய அரசு இடும் கட்டளைகளை மாநில அரசுகளின், மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள்!
தனது கன்றின் குரலைக் கேட்டால் தான் கன்றைத் தேடி மாடு ஓடி வரும். குரலும் மொழியும் வெறும் ஒலி மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் நமது மாநிலத்தில் நமது மொழி தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே நம்முடைய மக்களின் சிக்கல்களைக் கேட்டறிந்து புரிந்துகொண்டு செயல்பட முடியும்!
ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள ஆட்சி நிர்வாக முறைச் சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்து அறிந்து இயற்றப்பட்டவை.
இந்தி பேசாத மாநிலங்களின் ஆட்சியாளர்களையும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக ஆட்சி நிர்வாகச் சட்டங்களை மாற்றுவது இந்திய ஒன்றியத்தை உடைக்கவே வழி செய்யும்!
கருத்துகள்