உங்கள் சொந்த இடத்தை பொது நடைபாதையாக யாரும் உபயோகித்தால்...?
உங்களுக்கு சொந்தமான,உங்களது பட்டா இடத்தில் நீங்கள் உங்களை மீறி சிலர் செயல்பட விட்டது தவறு.
நீங்கள் உங்கள் உரிமையை அதில் காட்டி இருக்க வேண்டும்.இருபுறமும் வழி யை சில நாட்கள் சங்கிலி கொண்டு அடைத்து அது தனிப்பட்ட வர் இடம் என்பதை அறிவித்து இருக்க வேண்டும்.
இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.
பஞ்சாயத்தை எதிர் மனுதாரராக போட்டு தங்கள் இடத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள் என வழக்கு பதியுங்கள்.
இருபுறமும் சுவர் எழுப்புங்கள்.
எவரும் தடுத்தால் தடையாணை பெறுங்கள்.
(தங்களுக்கு நல்ல முரட்டு வக்கீல் கிடைத்தால்)
ஒரே நாளில் இரவோடு இரவாக பொக்லைன் வைத்து பெயர்த்து எடுத்து பல மைல் தூரம் கொண்டு போய் போட்டு விடுங்கள்.. முடிந்தால் விற்று விடுங்கள். Erace the trace.) பஞ்சாயத்தின் மேலும் சம்பந்தப்பட்ட வர்கள் மேலும் கேவியட் மனு ஒன்றை போடுங்கள்.
சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதி செலவாகும்.(வக்கீலுக்கு)
இடத்தை கவனிக்காது போட்டதற்கான புத்தி கொள்முதல் கணக்கில் செலவெழுதி கொள்ள வேண்டியது தான்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டா என்பது உரிமைப் பத்திரம் அல்ல ! "Patta is not title deed". பத்திரம் தான் முக்கியம். பத்திரம் இல்லையென்றால் பட்டாவே தேவையில்லை. பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கு ஆதாரம். பத்திரத்தின் அடிப்படையில் தான் பட்டா வழங்கப்படுகிறது. இது சம்பந்தமாக நிறைய உத்தரவுகளை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளது. கூகிளைசொடுக்கி பார்க்கவும்.
யாராவது நீங்கள் வீடு கட்டி உள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்தால் வீட்டை இடிக்க கூட முடியும்.
இதனை நீங்கள் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் அல்லது உங்களது கிராம பஞ்சாயத்தில் இது குறித்து முறையீடும் செய்யலாம் அப்படியும் இல்லாத பட்சத்தில் காவல்துறையின் உதவியையும் நாடலாம்
ஆனால் உண்மையில் உங்களிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை கறந்துவிடுவார்கள் காவல்துறையினர்...
கிரையத்தின் படி வரப்பெற்ற நிலத்தின் கிரைய பத்திரம், வில்லங்க சான்று, விண்ணப்பதாரர் விபரம் ஆகியவற்றுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவில் உரிய விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வரிசைப்படி நில அளவையர் அளந்து தங்களது எல்லைகள் பிரித்து, அவற்றுக்கான தனிப்பட்டா வட்டாட்சியர் அவர்களால் வழங்கப்படும்.
கருத்துகள்