Subbiahpatturajan
*நான் அம்பேத்கார் பேசுகிறேன்*.........|
தனித்தொகுதியில் வென்றதற்கு பூஜை செய்ய சென்றவனே ...........|
நான் போராடி பெற்றுத்தந்த வரலாற்றையே மறந்துபோனாய்..............|
அரசு வேலை கிடைத்தவுடன்
*தீ மிதிக்கச்சென்றவனே*
நானில்லை என்றால் வேலை மட்டுமல்ல கல்வித்தகுதி கூட
உனக்கு கைநாட்டுதான்..............|
சேரியிலே பிறந்திருந்தும் ஆடையகம் வைத்திருப்பது உனக்கு தெறியுமா....?
நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான்
பணம் கொஞ்சம் வந்தவுடன பழசையெல்லாம் மறந்தவனே
நீ சேரித்தாண்டி நடப்பதற்கு
என் ஆயுளையே கரைத்தவன் நான்.........|
படித்து பட்டம்வாங்கி சொத்தில் பங்குகேட்டு
வழக்கில் வென்றதற்கு
கடவுளுக்கு நன்றிசொல்லும் கண்ணான *பெண்ணிணமே...
உனக்குத்தெரியுமா..........?
கடவுளினூடாகத்தான்
*நீ அடுப்படிக்கும்* *அந்தப்புரத்தற்கும்*
மட்டுமே என அச்சடித்து சொல்லப்பட்டாய் .........|
சொந்த வீடு கட்டியவுடன் பூஜையறை வைத்தவனே உனக்குத்தெரியுமா......?
எல்லாக்கடவுளும் இருந்தபோதுதான்
நீ கேவலமா நடத்தப்பட்டாய்
*யாரால் நீ மனிதனாக* *மதிக்கப்பட்டாயோ*
*அந்தப் புகைப்படம்கூட*
*உன் வீட்டில் கிடையாது*
பரவாயில்லை*...
இவ்வளவு மூடனாக நீ இருப்பாயென தெரிந்திருந்தால் நான் அப்போதே எனக்காக ஒரு நாள் வாழ்ந்திருப்பேன்.
*அப்பாடா இன்றுதான் புரிந்ததென்று எனக்கு கோவில்கட்ட கிளம்பிவிடாதே*.....|
முடிந்தால்
க ற் பி ...................|
முடிந்தால் ஒரு
நூலகம் கட்டு...........|
முடிந்தால்
பகுத்தறிவு புகட்டு ......|
முடிந்தால் அடக்குமுறைகளுக்கு எதிராக அச்சமொழித்து குரல்கொடு ...............
ஜெய்பீம்...........|
கருத்துகள்