முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

R.P.I க்ரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்...!?

Subbiahpatturajan

க்ரிப்டோ..
ஜெரால்ட் காட்டன் என்கிற பெயரினை எத்தனைபேர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?

R.P.I க்ரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்...!?
இந்த ஜெரால்ட் காட்டன் என்பவர் கனடாவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸேஞ்சான QadrigaCX என்கிற நிறுவனத்தின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ். வெறும் முப்பதே வயதில் பல பில்லியன் டாலர்கள் பெருமானமுள்ள நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஜெரால்ட் காட்டன், 2018-ஆம் வருடம் இந்தியாவிற்கு அவரது மனைவியுடன் வந்தார்.

ஹனிமூனுக்காகவும், அனாதை இல்லம் ஒன்றினைத் திறப்பதற்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் காரணம் சொல்லப்பட்டது என்றாலும் நிச்சயமான வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா வந்த ஒரே வாரத்திற்குள் ஜெரால்ட் காட்டன் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு உடல்நிலைக் கோளாறு சொல்லப்பட்டாலும், அதன் பின்னனியில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் நிழலுலகினரின் பங்கு இருந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இறக்கையில் ஜெரால்டின் வசம் ஏறக்குறைய $215 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 15,19,50,00,000 ரூபாய்கள்!) இருந்தது. அதற்கான பாஸ்வேர்ட் அவரிடம் மட்டுமே இருந்தது என்பதுதான் முக்கியம். அவரால் "மட்டுமே" அந்த அக்கவுண்ட்டைத் திறந்து அந்தப் பணத்தை எடுக்க முடியும். இந்தியாவில் யாரேனும் அவரை மிரட்டி அந்தப் பாஸ்வேர்டைத் தரச் சொல்லியிருக்கலாம் அல்லது அந்தப் பணம் ஏதாவது ஒரு இந்தியப் பெருந்தலைக்குச் சொந்தமாக இருக்கலாம்....இதெல்லாம் எனது யூகங்கள்தான். அதேசமயம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இனி யாராலும் அந்தப் பணத்தை எடுக்கவே முடியாது. ஏனென்றால் க்ரிப்டோ ஒரு எலக்ட்ரானிக் கரன்ஸி. அதனை அத்தனை எளிதில் உடைத்துத் திறந்துவிட முடியாது. சத்தமில்லாமல் இந்தச் சம்பவத்தை ஊற்றி மூடி மறைத்துவிட்டார்கள்.
க்ரிப்டோ கரன்ஸிகள் மூலமாகத்தான் இதுவரையில் பணத்தை இந்தியாவிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பல பில்லியன் டாலரகளை இதில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள்.

ஹவாலா பாதையை இந்திய அரசு பெரும்பாலும் அடைத்து வைத்துவிட்டது. முழுமையாக அடைப்பது கடினம் என்றாலும் பெரும்பாலும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. எனவே எல்லா சட்டவிரோத பணப் பிரயோகங்கள் க்ரிப்டோ கரன்ஸி மூலமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண் சட்ட மசோதாவிற்கான பணம் இதன் மூலமாகத்தான் பாய்ந்து கொண்டிருந்தது. இனிமேல் எல்லாக் கலவரங்களுக்கும் இதன் வழியேதான் பணம் வந்திருக்கும். மோடி அதன் தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி எடுத்தேன், கவிழ்த்தேன் ஆசாமியில்லை. இதன் அத்தனை சாதக, பாதகங்களையும் நன்றாக ஆலோசித்தபிறகே இந்த முடிவிற்கு வந்திருப்பார். ஆரம்பத்தில் சிறிது பாதிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்திற்கு இது மிகவும் நல்லது. அதேசமயம், க்ரிப்டோ கரன்ஸியை முழுமையாகத் தடுப்பது முடியாது என்பதனையும் ஜோடித்துப் புதிதாக ஆர்.பி.ஐ. க்ரிப்டோ கரன்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். அதாகப்பட்டது இனி க்ரிப்டோ பண வர்த்தனை இந்திய மத்திய வங்கி வழியாக மட்டுமே நடக்கும்.
 சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
உலக நாடுகள் எல்லாம் இன்றுவரையில் க்ரிப்டோ கரன்ஸியை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று திகைத்து நிற்கையில் இந்தியா அதற்கு வழிகாட்டியிருக்கிறது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இன்னும் எந்த உருப்படியான சட்டமும் இதற்கெதிராக இல்லை. அவர்களின் காரணம் வேறுவிதமானது. எல்லாவிதமான சட்டவிரோத பணமும் க்ரிப்டோ கரன்ஸி வழியாகவே அமெரிக்காவிற்கு வந்து குவிந்து கொண்டிருந்ததால் இதுவரையில் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இனி அவர்களும் ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இரண்டு அழிவு, கொள்ளை, தீமைக் கழகங்களின் பெருந்தலைகள் நிச்சயமாக க்ரிப்டோ கரன்ஸியில் "ஏகப்பட்ட" முதலீடுகள் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் திருடர்கள் மட்டுமே இருக்கும் தி.மு.க. இதனால் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகும் என நினைக்கையில் என் உள்ளம் உவகையால் துள்ளுகிறது உடன் பிறப்பே....ஏற்கனவே சீன முதலீட்டில் பல பில்லியன் நஷ்டம். க்ரிப்டோவில் எத்தனை பில்லியனோ? ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

வலிக்கிற இடத்தில் சரியாக ஊமைக்குத்தாகக் குத்துவது என்பது இதுதான்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...