நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?

Subbiahpatturajan

இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம்.
அடிக்கடி எங்கள் ஊர்காரர்கள், வயதான நண்பர்கள் சொல்லுவார்கள்..

நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?
 நாங்கள் எல்லாம் பெரும்புயல் பார்த்தது கூட இல்லை.... இது வறண்ட கந்தகபூமி என்பார்கள். கந்தக பூமி என்பது இங்குள்ள முதலாளிகள் செய்தது. இயற்கையல்ல. ஆனால் புயல் வராமல் நம்மை காப்பது மேற்கு தொடர்ச்சி மலை தான். இந்த மேற்கு தொடர்ச்சி மலை...
 தென்மாவட்டங்களை காக்கும் பெரிய அரணும் இதுதான். மழை தப்பி செல்வதற்கும் காரணம் இதுதான். 

உலகில் மிகப்பழமையான மலை இதுதான்.

 இமயமலை சிவன் தோன்றிய பழைய மலை என விடும் கதைகளை அறிவியல் புறந்தள்ளி இம்மலையை கொண்டாடுகிறது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஜெனடிக் மரபணு மரங்கள் அதிகம் கொட்டிக்கிடக்கிறது. அதாவது வயதே கண்டு பிடிக்க முடியாமல்... இருக்கும் மரங்கள் ஒர் பக்கம்.. இன்னொரு பக்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மரம் அதன் விதை என தொடர்கிறது. இந்த மலை ஒரு பேரதிசயம் என்கிறது யுனஸ்கோ.

செங்கோட்டை  குற்றாலம் பக்கம் மூலிகைகள் நிறைந்திருக்கும் இந்த காடு, தேனிப்பக்கம் நெருங்கும் போது தன்னை மாற்றிக்கொள்கிறது. இடையில் நாம் கேள்வியே பட்டிருக்காத பெரும்  மலர்கள் உள்ள மரங்களை குவிந்து வைத்திருக்கிறது.
  ஆரல்வாய்மொழி மற்றும் தேனி பக்கம் மட்டுமே இந்த மலைத்தொடர் சற்று இடம் விட்டு இருக்கிறது. அதனாலே ஆரல்வாய்மொழி தொடங்கி காற்றாலைகள் அதிகம். தேனி அழகான காற்றுடன் கூடிய மலைப்பகுதியாக மக்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.
 இவ்விரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தொடர்க்கிறது மேற்கு  தொடர்ச்சிமலை. 2012 ஆம் ஆண்டே மலையில் இருந்த பழங்குடியினர் கிழே இறக்கப்பட்டுவிட்டார்கள்.

 விளைவு 

காரணம் அவர்களை கொண்டு மற்றவர்கள் காட்டில் அடித்த கொள்ளை. அவர்கள் ஏதும் அறியாது இருந்தாலும்... அவர்களுக்கு ஆசைகாட்டி அழித்த காட்டு வளங்கள் ஏராளம். ஆகையால் அவர்களை கீழே இறக்கி இருக்கிறது.அரசு  இப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்குடியினர் இல்லை. அரசால அங்கீகரிக்கப்பட்ட சில மலை வாழ் கிராமங்கள் உண்டு.

சிறப்புகள் 

இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம். சில அரிய வகை உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன.  உதாரணம் சாம்பல் நிற அணில்கள்.  உலகில் வேறு எங்கும் இவை இல்லை. தவளைகளில் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லா ஆறுகளின் தாய்மடியும் மேற்கு தொடர்ச்சி மலைதான். 

பரிதாபங்கள் 

யானை, புலி, கரடி, நரி செந்நாய் உள்ளிட்ட எல்லா மிருகங்களும் வாழும் இம்மலை இன்று நீரின்று தவிக்கிறது நம்மைபோலவே. ஒரு யானை ஒரு நாளைக்கு 150 கிமீ நடந்தே தீரும், 2500 லிட்டர் தண்ணீர் குடித்தே தீரும் யார் தடுத்தாலும்.... ஆனால் இன்று அது தேடி அலைகிறது... இப்படியே மான், கரடி  புலி என எல்லாம்  நீரை தேடுகிறது. . அவை எப்போதோ  நீர் அருந்திய  குளங்களை தேடி வருகிறது. நாமே அவைகளை பிளாட் போட்டல்லவா வைத்திருக்கிறோம்.  பூமியில் ஓட்டை போட்டல்லவா உறிஞ்சுகிறோம்.

 அதனால் கோடைகாலங்களில் விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து விழுந்து செத்துப்போகும் .. 
 மழை நீரில் ( அருவி ) எல்லாம் விலங்குகள் வாழ்ந்திருக்கின்றன. அவைகள் குளித்து மகிழ்ந்திருக்கின்றன. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லாம் நாம் அவைகளின் சுதந்திரத்தை  பறித்துவிட்டோம்.

 இன்று ஆண்டாண்டு காலமாய் அவைகள் வாழ்ந்த இடத்தை சுற்றுலா தளமாக மாற்றி விட்டோம். நீங்களே கேள்விபட்டிருப்பீர்களே... யாருமே போகாத ஒரு அருவி இருக்காம்... நாங்க போனோம் என சிலர் பெருமை பேசுவதை.. அவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து புடுங்கி... யாரோ ஒரு பணக்காரர் வாங்கி... நம்மிடமெல்லாம் காசு வாங்கி அதை அனுபவிக்க விடுகிறார். 

போலீசாமியார்கள் 

இன்னொரு கொடூரம் சொல்கிறார்கள், பக்தி என்பது போய் இப்போது ஒரு நாகரிகமாக மலை ஏறி சாமி கும்பிடும் போலி பக்தர்கள்..  அதிகரித்துவிட்டார்கள். 
 அங்கே காடுகள் அழியத்தொடங்கிவிட்டன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெருமளவு விலங்குகள் பயந்து ஓடிவிட்டன. 
திருவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை, அய்யனார் கோவில், உள்ளிட்ட இடங்களில் இருந்த மான்கள் சாம்பல் நிற அணில்கள், சிறு நரிகள் எல்லாம் இன்று காணாமல் போய் அதாவது  இடம் பெயந்து போய்விட்டன பெருமளவு. காரணம் மனிதர்களின் ஆட்டம். சரக்கடித்து பாட்டில்களை அங்கயே உடைத்து அதனால் விலங்குகளில் கால்கள் பாதிக்கப்பட்டு அவை அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டன. 

 இது போக இவர்களின் பக்தி ஓலங்கள்....

 அவைகளை இடம் பெயர செய்திருக்கிறது. கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக போட்டப்பட ஓவ்வொரு குழாயும் அங்கே இருக்கும் இயற்கை ஊற்றை அடைத்து விடுகிறது... அவைகளை தாகத்தால் சாக வைக்கின்றன.  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதுரகிரி செல்ல இவ்வளவு கூட்டம் கிடையாது. சமூகம் நன்றாக்வே இருந்தது. இன்று அது ஒரு பேஷனாகிவிட்டது. விளைவு ஒரு மலையும் விலங்களும் பாதிக்கபடுகின்றன.

மத்திய அரசின் திட்டம் 

இது தான் நம்மை வாழ வைக்கும் மேற்கு தொடர்சி மலைக்கு நாம் செய்யும் நன்றி கடன். ஏற்கனவே திருநெல்வேலி, இராஜபாளையம் பக்கம் இருக்கும் தனித்த மலைகள் எல்லாம் சுரண்டப்பட்டு வருகின்றன். கற்கள் உருவாக்க. இதை காலிசெய்ய இன்னும் 5 - 8 ஆண்டுகள் ஆகும். அடுத்து அவர்கள் கவனம் மேற்கு தொடர்ச்சி மலைதான். அதற்கான வேலைகள் தான்... மதுரை - செங்கோட்டை நான்கு வழிச்சாலை. குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட  இடங்களில் மலைகளை ஒட்டி அல்லது வெட்டி  போகப்போகிறது இந்த சாலை.  அதற்கு தான் சாகர் மாலா வருகிறது. வழக்கம் போல நாம் வேடிக்கை பார்ப்போம்.... வளர்ச்சி வேணும்ல என்று.

இதில் வேடிக்கை என்னன்னா ...

1882 வெள்ளைகாரன் உருவாக்கி வனவிலங்கு சட்டம் என்னவோ அழகாய் தானிருக்கிறது. காடுகளை காக்கும்படியும் இருக்கிறது. ஆனால் நாம் தான் என்று சட்டத்தை மதித்தோம்.. கண் முன்னாலே அழித்துக்கொண்டிருக்கிறோம். என்றேனும் மேற்குதொடர்ச்சி மலையை பார்க்கும் போது நினைவில் கொள்ளுங்கள்... அம்மலையில் இருக்கும் பறவைகள் கொடுத்த மரங்கள் ஏராளம் இந்த தமிழகத்தில், அம்மலை கொடுத்த விதைகள் ஏராளம், அம்மலை கொடுத்த காற்று தான் இன்றும் நம் வெப்பத்தை குறைத்துக்கொண்டிருக்கிறது, அம்மலை கொடுக்கும் கொடை தான்  பருவமழையாவது பெய்து வருவது... கூடவே இன்னொன்ற்றையும் நினைவில் கொள்ளுங்கள்... அது அழிக்க தொடங்கிய தலைமுறையும் ... வேடிக்கை பார்க்கும் தலைமுறையும் நீங்கள் தான் என்பதையும்... 

மனிதன் சகமனிதனை கொல்வதை விட கொடியது.. இயற்கையை கொல்வது. அதை தொடங்கி இன்று பாதிக்குமேல் கடந்துவிட்டோம். அதற்கு நானும் ஒரு சாட்சி. இதை படிக்கும் நீங்களும் ஒரு சாட்சி.





கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

உங்களுக்கு காது கேட்கும் திறன் மெதுவாக குறைந்தது வருகிறதா என்ன செய்ய வேண்டும்

Subbiahpatturajan செவித்திறனை மேம்படுத்துதல் எப்படி?  உங்கள் செவித்திறனை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன:  உரத்த சத்தங்களைத் தவிர்க்கவும்: உரத்த சத்தங்களை வெளிப்படுத்துவது உங்கள் உள் காதில் உள்ள முடி செல்களை சேதப்படுத்தும், இது காது கேளாமைக்கு வழிவகுக்கும். முடிந்த போதெல்லாம் உரத்த சத்தங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், மேலும் நீங்கள் சத்தமாக இருக்க வேண்டும் என்றால் காதில் செருகி அல்லது பிற பாதுகாப்பு கியர் அணியுங்கள்.  உங்கள் காதுகளை சுத்தமாக வைத்திருங்கள்:  காதுக்குள் மெழுகு போன்ற அழுக்கு காதில் கால்வாயில் குவிந்து இருந்தால் சத்தங்கள் செவிப்பறையை அடைவதைத் தடுக்கும். உங்கள் காதுகளின் உள்ப்புறத்தை துவைக்கும் துணி அல்லது பருத்தி துணியால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள், ஆனால் உங்கள் காது கால்வாயில் எதையும் செருகாமல் கவனமாக இருங்கள், ஏனெனில் இது செவிப்பறையை சேதப்படுத்தும்.  உங்கள் செவித்திறனைப் பரிசோதிக்கவும்:  உங்களுக்கு காது கேளாமை இருந்தால், உங்கள் செவித்திறனை ஒரு நிபுணரால் பரிசோதிக்க வேண்டியது அவசியம். செவிப்புலன் சோதனையானது உங்கள் ச...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive )...

மூலப்பத்திரம் என்றால் என்ன மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

` `எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?" ``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.'' பத்திரம் ``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?" ``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்." ``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்க...

திருமணம் ஆன கணவன் மனைவிக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்..!!

Subbiahpatturajan கணவன் மனைவி புரிதலுடன் வாழ திருமணம் ஆன கணவன் மனைவிகளுக்கு நினைவில் வைக்க  வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி அன்பும் பரிசும் தாம்பத்யத்துக்கு உறுதி ஆம் இன்று காதலிலும் திருமண பந்தத்திலும் தொடக்கத்தில் இருக்கும் அன்பும் பரிசு பரிமாற்றமும் நாளாக நாளாக குறைந்து மறைந்து இல்லாமலே போய்விடுகிறது அங்கு தான் தம்பதிகளுக்குள் பிரிவும் தொடங்கி விடுகிறது தாம்பத்யம் என்று சொன்னவுடன் பலருக்கு அச்சமும் அருவறுப்பும் முகத்தில் பிரதிபலிக்கும் அது தேவையே இல்லை தாம்பத்யம் என்பது எளிமையான அன்புப் பகிர்தல் என்று எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்  இரண்டு அறை கொண்ட வீட்டில் கூட்டு குடும்பமாக நான்கு தம்பதிகள் வாழ்ந்த காலத்தில் கூட அன்யோன்யமாக இருந்த கணவன் மனைவி உறவு இப்போது தனி குடும்பமாக மூன்று தனி தனி அறைகள் உள்ள வீட்டில் வாழும் போது விலகி போயிருக்கிறது என்றால் இவர்கள் தாம்பத்யம் சிறக்கவில்லை என்றே அர்த்தம் திருமணம் என்ற பந்தத்தில் உரிமை கிடைத்த ஒரே காரணத்தினாலே உடல் உரிமை பெற்று கணவன் மனைவி இணைந்திருப்பது மட்டுமே தாம்பத்யம் அல்ல பாரத...