முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?

Subbiahpatturajan

இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம்.
அடிக்கடி எங்கள் ஊர்காரர்கள், வயதான நண்பர்கள் சொல்லுவார்கள்..

நீங்கள் அழிவை வேடிக்கை பார்க்கும் சமூகம் என்பதை மறந்து விடாதீர்கள் ?
 நாங்கள் எல்லாம் பெரும்புயல் பார்த்தது கூட இல்லை.... இது வறண்ட கந்தகபூமி என்பார்கள். கந்தக பூமி என்பது இங்குள்ள முதலாளிகள் செய்தது. இயற்கையல்ல. ஆனால் புயல் வராமல் நம்மை காப்பது மேற்கு தொடர்ச்சி மலை தான். இந்த மேற்கு தொடர்ச்சி மலை...
 தென்மாவட்டங்களை காக்கும் பெரிய அரணும் இதுதான். மழை தப்பி செல்வதற்கும் காரணம் இதுதான். 

உலகில் மிகப்பழமையான மலை இதுதான்.

 இமயமலை சிவன் தோன்றிய பழைய மலை என விடும் கதைகளை அறிவியல் புறந்தள்ளி இம்மலையை கொண்டாடுகிறது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஜெனடிக் மரபணு மரங்கள் அதிகம் கொட்டிக்கிடக்கிறது. அதாவது வயதே கண்டு பிடிக்க முடியாமல்... இருக்கும் மரங்கள் ஒர் பக்கம்.. இன்னொரு பக்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மரம் அதன் விதை என தொடர்கிறது. இந்த மலை ஒரு பேரதிசயம் என்கிறது யுனஸ்கோ.

செங்கோட்டை  குற்றாலம் பக்கம் மூலிகைகள் நிறைந்திருக்கும் இந்த காடு, தேனிப்பக்கம் நெருங்கும் போது தன்னை மாற்றிக்கொள்கிறது. இடையில் நாம் கேள்வியே பட்டிருக்காத பெரும்  மலர்கள் உள்ள மரங்களை குவிந்து வைத்திருக்கிறது.
  ஆரல்வாய்மொழி மற்றும் தேனி பக்கம் மட்டுமே இந்த மலைத்தொடர் சற்று இடம் விட்டு இருக்கிறது. அதனாலே ஆரல்வாய்மொழி தொடங்கி காற்றாலைகள் அதிகம். தேனி அழகான காற்றுடன் கூடிய மலைப்பகுதியாக மக்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.
 இவ்விரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தொடர்க்கிறது மேற்கு  தொடர்ச்சிமலை. 2012 ஆம் ஆண்டே மலையில் இருந்த பழங்குடியினர் கிழே இறக்கப்பட்டுவிட்டார்கள்.

 விளைவு 

காரணம் அவர்களை கொண்டு மற்றவர்கள் காட்டில் அடித்த கொள்ளை. அவர்கள் ஏதும் அறியாது இருந்தாலும்... அவர்களுக்கு ஆசைகாட்டி அழித்த காட்டு வளங்கள் ஏராளம். ஆகையால் அவர்களை கீழே இறக்கி இருக்கிறது.அரசு  இப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்குடியினர் இல்லை. அரசால அங்கீகரிக்கப்பட்ட சில மலை வாழ் கிராமங்கள் உண்டு.

சிறப்புகள் 

இந்தியாவின் அடர்த்தியான காடுகளில் மேற்கு தொடர்ச்சி மலை முதலிடம். சில அரிய வகை உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன.  உதாரணம் சாம்பல் நிற அணில்கள்.  உலகில் வேறு எங்கும் இவை இல்லை. தவளைகளில் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லா ஆறுகளின் தாய்மடியும் மேற்கு தொடர்ச்சி மலைதான். 

பரிதாபங்கள் 

யானை, புலி, கரடி, நரி செந்நாய் உள்ளிட்ட எல்லா மிருகங்களும் வாழும் இம்மலை இன்று நீரின்று தவிக்கிறது நம்மைபோலவே. ஒரு யானை ஒரு நாளைக்கு 150 கிமீ நடந்தே தீரும், 2500 லிட்டர் தண்ணீர் குடித்தே தீரும் யார் தடுத்தாலும்.... ஆனால் இன்று அது தேடி அலைகிறது... இப்படியே மான், கரடி  புலி என எல்லாம்  நீரை தேடுகிறது. . அவை எப்போதோ  நீர் அருந்திய  குளங்களை தேடி வருகிறது. நாமே அவைகளை பிளாட் போட்டல்லவா வைத்திருக்கிறோம்.  பூமியில் ஓட்டை போட்டல்லவா உறிஞ்சுகிறோம்.

 அதனால் கோடைகாலங்களில் விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து விழுந்து செத்துப்போகும் .. 
 மழை நீரில் ( அருவி ) எல்லாம் விலங்குகள் வாழ்ந்திருக்கின்றன. அவைகள் குளித்து மகிழ்ந்திருக்கின்றன. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லாம் நாம் அவைகளின் சுதந்திரத்தை  பறித்துவிட்டோம்.

 இன்று ஆண்டாண்டு காலமாய் அவைகள் வாழ்ந்த இடத்தை சுற்றுலா தளமாக மாற்றி விட்டோம். நீங்களே கேள்விபட்டிருப்பீர்களே... யாருமே போகாத ஒரு அருவி இருக்காம்... நாங்க போனோம் என சிலர் பெருமை பேசுவதை.. அவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து புடுங்கி... யாரோ ஒரு பணக்காரர் வாங்கி... நம்மிடமெல்லாம் காசு வாங்கி அதை அனுபவிக்க விடுகிறார். 

போலீசாமியார்கள் 

இன்னொரு கொடூரம் சொல்கிறார்கள், பக்தி என்பது போய் இப்போது ஒரு நாகரிகமாக மலை ஏறி சாமி கும்பிடும் போலி பக்தர்கள்..  அதிகரித்துவிட்டார்கள். 
 அங்கே காடுகள் அழியத்தொடங்கிவிட்டன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெருமளவு விலங்குகள் பயந்து ஓடிவிட்டன. 
திருவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை, அய்யனார் கோவில், உள்ளிட்ட இடங்களில் இருந்த மான்கள் சாம்பல் நிற அணில்கள், சிறு நரிகள் எல்லாம் இன்று காணாமல் போய் அதாவது  இடம் பெயந்து போய்விட்டன பெருமளவு. காரணம் மனிதர்களின் ஆட்டம். சரக்கடித்து பாட்டில்களை அங்கயே உடைத்து அதனால் விலங்குகளில் கால்கள் பாதிக்கப்பட்டு அவை அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டன. 

 இது போக இவர்களின் பக்தி ஓலங்கள்....

 அவைகளை இடம் பெயர செய்திருக்கிறது. கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக போட்டப்பட ஓவ்வொரு குழாயும் அங்கே இருக்கும் இயற்கை ஊற்றை அடைத்து விடுகிறது... அவைகளை தாகத்தால் சாக வைக்கின்றன.  இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதுரகிரி செல்ல இவ்வளவு கூட்டம் கிடையாது. சமூகம் நன்றாக்வே இருந்தது. இன்று அது ஒரு பேஷனாகிவிட்டது. விளைவு ஒரு மலையும் விலங்களும் பாதிக்கபடுகின்றன.

மத்திய அரசின் திட்டம் 

இது தான் நம்மை வாழ வைக்கும் மேற்கு தொடர்சி மலைக்கு நாம் செய்யும் நன்றி கடன். ஏற்கனவே திருநெல்வேலி, இராஜபாளையம் பக்கம் இருக்கும் தனித்த மலைகள் எல்லாம் சுரண்டப்பட்டு வருகின்றன். கற்கள் உருவாக்க. இதை காலிசெய்ய இன்னும் 5 - 8 ஆண்டுகள் ஆகும். அடுத்து அவர்கள் கவனம் மேற்கு தொடர்ச்சி மலைதான். அதற்கான வேலைகள் தான்... மதுரை - செங்கோட்டை நான்கு வழிச்சாலை. குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட  இடங்களில் மலைகளை ஒட்டி அல்லது வெட்டி  போகப்போகிறது இந்த சாலை.  அதற்கு தான் சாகர் மாலா வருகிறது. வழக்கம் போல நாம் வேடிக்கை பார்ப்போம்.... வளர்ச்சி வேணும்ல என்று.

இதில் வேடிக்கை என்னன்னா ...

1882 வெள்ளைகாரன் உருவாக்கி வனவிலங்கு சட்டம் என்னவோ அழகாய் தானிருக்கிறது. காடுகளை காக்கும்படியும் இருக்கிறது. ஆனால் நாம் தான் என்று சட்டத்தை மதித்தோம்.. கண் முன்னாலே அழித்துக்கொண்டிருக்கிறோம். என்றேனும் மேற்குதொடர்ச்சி மலையை பார்க்கும் போது நினைவில் கொள்ளுங்கள்... அம்மலையில் இருக்கும் பறவைகள் கொடுத்த மரங்கள் ஏராளம் இந்த தமிழகத்தில், அம்மலை கொடுத்த விதைகள் ஏராளம், அம்மலை கொடுத்த காற்று தான் இன்றும் நம் வெப்பத்தை குறைத்துக்கொண்டிருக்கிறது, அம்மலை கொடுக்கும் கொடை தான்  பருவமழையாவது பெய்து வருவது... கூடவே இன்னொன்ற்றையும் நினைவில் கொள்ளுங்கள்... அது அழிக்க தொடங்கிய தலைமுறையும் ... வேடிக்கை பார்க்கும் தலைமுறையும் நீங்கள் தான் என்பதையும்... 

மனிதன் சகமனிதனை கொல்வதை விட கொடியது.. இயற்கையை கொல்வது. அதை தொடங்கி இன்று பாதிக்குமேல் கடந்துவிட்டோம். அதற்கு நானும் ஒரு சாட்சி. இதை படிக்கும் நீங்களும் ஒரு சாட்சி.





கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

பிச்சை போடுவது கூட சுயநலமே...,

Subbiahpatturajan பிச்சை போடுவது கூட சுயநலமே..., வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள