முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனித்து அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.

Subbiahpatturajan
இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.
1×9=7 ❌ இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை காரணம் என்ன?

இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,

வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.

காரணம்,
முதல் வரியில் வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது

1×9=7,

2×9=18, ✔️

3×9=27, ✔️

4×9=36, ✔️

5×9=45, ✔️

6×9=54 ✔️

7×9=63 ✔️

8×9=72 ✔️

9×9=81 ✔️

10×9=90 ✔️
*மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*

சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை பார்த்த  ஆசிரியை....., சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...

நான் 9வது  வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.
இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.

இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.
நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.

அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.
ஆனால், நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து....... அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.

நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......, இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.

ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும். அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...
இவைகளைக் கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.
இறைவன் நமக்காக அளித்திருக்கும் இந்த அரிய மனிதப் பிறப்பை
கொண்டாடுங்கள்.
உங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

இந்த உடல் நம்முடன் இருக்கும்வரை நம்மால் முடிந்தவரை சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும்.

காலத்தைப் போல் மிகப்பெரிய பொக்கிஷம் எதுவும் இல்லை.
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மிகப்பெரிய பொக்கிஷம் அதை தயவு செய்து வீணாக்காதீர்கள்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வாழ்ந்து விடுங்கள்...

எதை எதையோ வீணாக்கக் கூடாது என்று நினைக்கும் நாம்
அரிய பொக்கிஷமான ...
மீண்டும் பெற முடியாத...
 நமது வாழ்க்கையை சில நேரங்களில் தேவையில்லாதவற்றை சிந்தித்து வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்....

உங்களுக்கு மகிழ்ச்சியை (பிறரை கஷ்டப்படுத்தாமல்) தராத எந்த ஒரு விஷயத்திற்கு உங்கள் நேரத்தை செலவழித்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்ததற்கான அர்த்தமில்லை...

உங்கள் வாழ்வின்
ஒவ்வொரு நொடியையும் வந்துவிடுங்கள் ..

முடிந்தவரை பிறருடன் நல்ல வார்த்தைகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

காரணமின்றி மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை வசந்தமாகும்.

உங்கள் கவலைகளும் கஷ்டங்களும் நிரந்தரமல்ல.
அதிசயங்கள் இன்றே கூட நிகழலாம்.

நம்பிக்கையுடன் இருங்கள் .நல்லதே நடக்கும். 😊

உங்களைப் பார்த்து சிரித்தவர்கள், உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் ....., உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...