முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் ஜாதிய இட ஒதுக்கீடு ஏன் உருவாக்கப்பட்டது? முழுமையான விளக்கம்...

Subbiahpatturajan

இந்தியாவில் ஜாதிய இட ஒதுக்கீடுகள் ஏன் உருவாக்கப்பட்டது?

இந்திய சமூக நீதி....!

இந்தியாவில் இடஒதுக்கீடு...,என்பது 

 உயர்ஜாதி வர்க்கத்தின் பதுக்கீடா?..!
இது  தான் சமூகநீதியா...??  ...இந்தியாவில் நடப்பில் உள்ள 
             இட ஒதுக்கீடு 
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமான இட ஒதுக்கீடாக இல்லை,


என்பதோடு 
அது இடங்களைப் பிறமொழி காரர்களால் பதுக்கீடு செய்கின்ற மோசடிமுறையாகவும் இருந்து வருகிறது.! 

இந்தியாவில் ஜாதிய இட ஒதுக்கீடுகள் ஏன் உருவாக்கப்பட்டது? முழுமையான விளக்கம்
இந்திய ஒன்றிய அரசு பணிகளில் 22.5% பட்டியலினத்தாருக்கு, 70 ஆண்டுகளாக ஒதிக்கீடு இருந்தும்கூட முதல்நிலைப் பணிகளில் பட்டியலினத்தார் நான்கு விழுக்காட்டிற்கும் கீழாக இடம்பெற்றுள்ளனர்.

 பதுக்கப்பட்டுள்ள 18.5 விழுக்காடு எங்கே போயிற்று

அதேபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற 27 விழுக்காடு அவர்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை. 
இப்படி இட ஒதுக்கீடுகள் எல்லாம் இடப்பதுக்கீடுகளாகப் போய்விட்டன. இதற்கு ஒரே தீர்வு: உடனடியாக அனைத்துச் சாதி மக்களின் சாதிவாரியான குடிக் கணக்கெடுக்கப்பட்டு அனைத்துப் பணி வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் அனைத்துச் சாதிகளின் மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்து அளிக்கும்

 "சாதிவாரிப் பகிர்வுத் திட்டம்",

 நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
 இந்திய ஒன்றிய அரசுப் பணிகள் மாநிலங்களுக்கு இடையே மாநில மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 
மேலும் பழைய வட மனுவிய நெறியின் படியான நான்கு வருணக் கோட்பாட்டைக் போலவே இந்திய ஒன்றிய அளவில் பொதுநிலை பட்டியல், பொது நிலையில் ஏழையர் பட்டியல், பிற்படுத்தப்பட்ட மற்றையோர், பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தவர் என நான்கு பிரிவுகள் ஏற்ற தாழ்வு கற்பிக்கப்பட்ட நிலையில் நடைமுறையில் இருந்து வருகிறது.
 மாநில அளவில் பொதுப்பட்டியல், பிற்படுத்தப்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல், பட்டியலினத்தார் பட்டியல் ஆகிய நான்குவகைப் பிரிவுகளும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்ட நிலையில் நடைமுறையில் இருந்து வருகின்றன, ஒதுக்கீடுகளும் உண்மையாகச் செயற்படுத்தப்படவில்லை. 
உயர்வு தாழ்வுக் கற்பிதங்களும் நீங்கிய பாடில்லை. எனவே இப்போதைய சாதிவாரி இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசு பணிகள் மாநிலங்களுக்கிடையே பகிரும் பகிர்வுத் திட்டமாகவும் மாநிலத்திற்கு உள்ளாக மாநிலத்தில் உள்ள அனைத்துச் சாதிகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் சாதிவாரிப் பகிர்வுத் திட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...