Subbiahpatturajan
இந்திய சமூக நீதி....!
இந்தியாவில் இடஒதுக்கீடு...,என்பது
உயர்ஜாதி வர்க்கத்தின் பதுக்கீடா?..!
இது தான் சமூகநீதியா...?? ...இந்தியாவில் நடப்பில் உள்ள
இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமான இட ஒதுக்கீடாக இல்லை,
என்பதோடு
அது இடங்களைப் பிறமொழி காரர்களால் பதுக்கீடு செய்கின்ற மோசடிமுறையாகவும் இருந்து வருகிறது.!
இந்திய ஒன்றிய அரசு பணிகளில் 22.5% பட்டியலினத்தாருக்கு, 70 ஆண்டுகளாக ஒதிக்கீடு இருந்தும்கூட முதல்நிலைப் பணிகளில் பட்டியலினத்தார் நான்கு விழுக்காட்டிற்கும் கீழாக இடம்பெற்றுள்ளனர்.
பதுக்கப்பட்டுள்ள 18.5 விழுக்காடு எங்கே போயிற்று?
அதேபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற 27 விழுக்காடு அவர்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை.
இப்படி இட ஒதுக்கீடுகள் எல்லாம் இடப்பதுக்கீடுகளாகப் போய்விட்டன. இதற்கு ஒரே தீர்வு: உடனடியாக அனைத்துச் சாதி மக்களின் சாதிவாரியான குடிக் கணக்கெடுக்கப்பட்டு அனைத்துப் பணி வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் அனைத்துச் சாதிகளின் மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்து அளிக்கும்
"சாதிவாரிப் பகிர்வுத் திட்டம்",
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்திய ஒன்றிய அரசுப் பணிகள் மாநிலங்களுக்கு இடையே மாநில மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
மேலும் பழைய வட மனுவிய நெறியின் படியான நான்கு வருணக் கோட்பாட்டைக் போலவே இந்திய ஒன்றிய அளவில் பொதுநிலை பட்டியல், பொது நிலையில் ஏழையர் பட்டியல், பிற்படுத்தப்பட்ட மற்றையோர், பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தவர் என நான்கு பிரிவுகள் ஏற்ற தாழ்வு கற்பிக்கப்பட்ட நிலையில் நடைமுறையில் இருந்து வருகிறது.
மாநில அளவில் பொதுப்பட்டியல், பிற்படுத்தப்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல், பட்டியலினத்தார் பட்டியல் ஆகிய நான்குவகைப் பிரிவுகளும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்ட நிலையில் நடைமுறையில் இருந்து வருகின்றன, ஒதுக்கீடுகளும் உண்மையாகச் செயற்படுத்தப்படவில்லை.
உயர்வு தாழ்வுக் கற்பிதங்களும் நீங்கிய பாடில்லை. எனவே இப்போதைய சாதிவாரி இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசு பணிகள் மாநிலங்களுக்கிடையே பகிரும் பகிர்வுத் திட்டமாகவும் மாநிலத்திற்கு உள்ளாக மாநிலத்தில் உள்ள அனைத்துச் சாதிகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் சாதிவாரிப் பகிர்வுத் திட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கருத்துகள்