முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

Subbiahpatturajan

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி இரண்டு மூன்றாக உடையும் அபாயத்தில்...?



உலக அரங்கில் ஒரு கப்பல் முழுக்க நீர்புகுந்து மூழ்கும் தருவாயில் இருக்கின்றது இனி அது அப்படியே மூழ்குமா இல்லை இதர கப்பலின் உதவியால் அதன் ஆயுள் நீட்டிக்கபடுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி

அந்த கப்பலின் பெயர் பாகிஸ்தான்


இந்தியா எனும் வளமான நாட்டில் இருந்து அந்நாடு பிரிக்கபட்டதே இந்தியா எக்காலமும் பலம்பெற்றுவிட கூடாது என்பதன்றி வேறல்ல‌

ஆப்கானியரின் மொகலாயர் இந்தியாவினை ஆண்ட காலங்களில் அது உலகின் முதல் இட நாடாக இருந்ததை வியாபாரியாக வந்த வெள்ளையன் கவனித்தான் அவன் ஆளும்பொழுதும் இந்திய செல்வத்தின் வளம் அவனுக்கு புரிந்தது

இந்நாட்டை அப்படியே விட்டு செல்லாமல் இதற்கு தலையடி கொடுத்து இந்நாடு தன் காலடியில் விழுந்து கிடக்க வழிதேடித்தான் பாகிஸ்தானை உருவாக்கி கிழக்கே வங்கத்தை உடைத்து அதையும் கொடுத்து சிட்டகாங் என துறைமுகத்தையும் கொடுத்தான்

ஒருவகையில் கராச்சி சிட்டகாங் என இருபெரும் துறைமுகங்களுடன் பெரும் எதிர்காலம் பாகிஸ்தானுக்கு இருந்தது


ஆனால் ஒருவித முரட்டு எதிர்ப்பில் பிரிந்த நாடு என்பதால் இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டும் என்ற நோக்கில் பிரிந்தார்களே தவிர நாட்டை முன்னேற்றும் திட்டமோ கடப்பாடோ அவர்களுக்கு இல்லை

அவர்களின் மிகபெரிய முதல் அதிர்ஷ்டம் நேரு, அவர் மட்டும் பாகிஸ்தானை எதிரியாக கருதியிருந்தால் தொடக்கத்திலே அந்நாடு எத்தியோப்பியா அல்லது ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும்

ஆனால் அணிசேரா கொள்கை என குழப்பினார், சீனா சோவியத் யூனியன் எனும் நாடுகளை எதிர்க்க இந்தியா சரியான நாடு என அமெரிக்கா கணித்தபொழுது நேரு சீனா, சோவியத் யூனியன் பக்கம் இருந்து ஒரு குழப்பமான கொள்கை சொல்லி அமெரிக்காவினை கடுப்பேற்றினார்
வேறுவழி இல்லா அமெரிக்கா பாகிஸ்தானை கையில் எடுத்து வளர்த்தது

பாகிஸ்தானின அடுத்த அதிர்ஷ்டம் அரபுநாடுகளின் எண்ணெய் வளம், இந்திய எதிர்ப்பில் அமெரிக்க உதவியுடன் பலமான ராணுவத்தை கொண்டிருந்த அந்த இஸ்லாமிய நாட்டினை அரபுநாடுகள் தாங்கின‌

அடுத்து இந்தியாவினை எதிர்க்க சீனா கொடுத்த ஆசி


இந்த வழிகளில்தான் பாகிஸ்தான் பொருளாதாரமே இருந்தது, ஆப்கன் போன்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் ஊடாக வழி செல்வதால் ஏக கொண்டாட்டம்

பாகிஸ்தானின் முதல் அடி கிழக்கு பாகிஸ்தானை இழந்தது எனினும் இந்திய எதிர்ப்பு எனும் ஒரு காரணத்தை கொண்டு பல நாடகங்களை நடத்தி வசூலில் பின்னிகொண்டிருந்தது

அதே நேரம் காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு ரகசிய உறவு இருந்தது என்பதும் தியரி, இந்தியா நினைத்திருந்தால் பாகிஸ்தானை என்றோ முடக்கியிருக்கலாம் ஆனால் ஒரு ரகசிய இழை அவர்களுக்குள் இருந்தது என்பதும் இந்த இழையினை பின்னி கையில் வைத்திருந்தது வல்லரசான சக்தி ஒன்று என்பதும் உலக அரசியலில் கசிந்த செய்திகள்

இப்படியெல்லாம் இந்தியாவுடன் திரைமறைவில் உதவி பெற்று திரைக்கு முன்னால் ஒரு நாடகமாடி ஏதோ செய்து கொண்டிருந்தது பாகிஸ்தான் ஆனால் மனதில் எக்காலமும் இந்தியாமேல் தீரா வஞ்சம் உண்டு

மோடி அரசு வந்ததும் அது செய்த முதல் வேலை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு ஸ்கெட்ச் போட்டது


முதலில் அணிசேரா கொள்கையினை தூக்கி எறிந்து அமெரிக்க அணியில் சேர்ந்தது, 1950 முதலே இதற்கான வாய்பினை எதிர்பார்த்த அமெரிக்கா ஓடிவந்து சேர்ந்து கொண்டது, இந்தியாவினை மீறி அவர்களால் பாகிஸ்தான் பக்கம் செல்லமுடியவில்லை

அதுவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் முற்றும் நேரம் சீன கூட்டாளியான பாகிஸ்தானை விட சீன எதிரியான இந்தியாவே அவர்களுக்கு விருப்பம்

மோடியின் அடுத்த அடி அரேபியாவில் விழுந்தது


அது மிகபெரிய ஆச்சரியம், ஒரு இந்துதேசம் அதுவும் இஸ்லாமியருக்கு எதிரி என கருதபட்ட மோடியின் தேசம் அரபுலகில் அந்த ஆச்சரியத்தை செய்தது

வளைகுடாவில் ஒரு அணியினை உருவாக்கி பாகிஸ்தானை தனிமைபடுத்தியது இந்தியா, மிக நிதானமாக இஸ்ரேலுடன் உறவுபாராட்டி அரேபியாவில் துருக்கி அணி துருக்கி இல்லா அணி என ஒன்றை உருவாக்கி பாகிஸ்தானை துருக்கி அணிக்கு தள்ளியது

பாகிஸ்தானின் மிகபெரிய ஆபத்து சீனா, அமெரிக்கா போல் சீனா விட்டுகொடுக்கும் நாடு அல்ல என தெரியாமல் சிக்கி கொண்டார்கள்


சீனா தன் ஒன் பெல்ட் ஒன் ரோடு உள்ளிட்ட பல திட்டங்களில் பாகிஸ்தான் சீனாவுக்கு இடமளித்தது, வஞ்சக சீனா பாகிஸ்தான் நிலத்தில் தன் திட்டத்தை தன் பணத்தில் நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்து வட்டியும் கேட்டு கொடுமைபடுத்தியது

நிச்சயம் நிலம் எங்களுடையது பணம் உங்களுடையது பலன் இருவருக்கும் என கேட்க வேண்டிய பாகிஸ்தான் ஏமாந்தது

நிலம் எனக்கு, பணம் எனக்கு, வட்டியும் எனக்கு என வரிந்து கட்டுகின்றது சீனா


சீனாவின் இந்த மிகபெரும் நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி இருக்கின்றது, இனி அந்நாடு தன் துறைமுகம் அல்லது சில பரப்புகளை சீனாவிடம் விற்க வேண்டும் அல்லது தற்கொலை செய்ய வேண்டும்

தற்கொலை என்றால் வேறொன்றுமில்லை இந்திய அணியிடம் சரணடைவது


ஆம், இந்தியா சீன வாயில் சிக்கிய ஒவ்வொருவரையும் தன் பணத்தால் மீட்டெடுக்கின்றது, நேபாளத்தில் இந்தியா தன் பணத்தை செலவழித்து சீன கடன்களை அடைத்து நேபாளத்தை மீட்டது

இலங்கையிலும் அதையே செய்து இப்பொழுது சீனாவின் கடனை அடைக்க உதவி இலங்கையினை தன் பக்கம் எடுக்கின்றது


மியன்மாரிலும் அதையே செய்கின்றது இந்தியா

உண்மையில் இந்தியாவால் இப்பொழுது பாகிஸ்தானுக்கு உதவி காக்க முடியும், ஆனால் எந்த நம்பிக்கையில் உதவுவது?


அமெரிக்காவினை மீறி பாகிஸ்தானுக்கு உதவும் சக்தி கொண்ட ஒரே நாடு சீனா இப்பொழுது அவர்கள்தான் பாகிஸ்தானை விழுங்க தயாராய் நிற்கின்றார்கள்

இனி பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் சாயவேண்டும் அல்லது சீனாவிடம் சிக்க வேண்டும்

அமெரிக்கா பக்கம் சாய்ந்தால் அங்கிருக்கும் இந்தியாவோடு அவர்கள் சரணடைய வேண்டும் கூடவே ஆப்கனையும் கைகழுவ வேண்டும் இதெல்லாம் இல்லாமல் பாகிஸ்தான் இல்லை

இந்திய எதிர்ப்பை கைவிடுதல் என்பது தற்கொலைக்கு சமம் ஆனால்  வேறு வழியில்லை

சீன கடன்களை கொடுக்க பணமில்லை, பாகிஸ்தானின் பொருளாதாரமும் அதால பாதாளத்தில் கிடக்கின்றது


இரு தேசங்களும் ஒன்றாகத்தான் பிரிந்தன, ஆனால் இந்தியா தன் பொருளாதாரத்தை வளர்த்து எங்கோ சென்றுவிட்டது

தீவிரவாதத்தை மட்டும் வளர்த்த பாகிஸ்தான் இன்று நாசமாய் கிடக்கின்றது

இந்தியாவினை வளரவிடாமல் செய்ய அதன் அருகில் வெள்ளையனால் அமர்த்தபட்ட ஒரு அடியாள் பாகிஸ்தான், அந்த அடியாள் திருந்தினால் வெள்ளையன் கனவு பலிக்காது என நேரு அவர்கள்மேல் வாஞ்சையுடன் இருந்தார்

இந்திரா தீவிரம் காட்டினாலும் சீக்கிய காலிஸ்தான் பின்னால் இருந்து எழுந்த சதி அம்பு அவரை வீழ்த்திற்று

அதன் பின் காங்கிரஸில் என்னவெல்லாமோ நடந்து பாகிஸ்தான் தாக்கு பிடித்தது

இந்திய அரசு 70 ஆண்டு முன்பு செய்யவேண்டிய காரியங்களை இப்பொழுது செய்தது, ராஜீவ்காந்தி  இந்திராவுக்கு செய்தி சதி போலவே சீக்கியர் மூலம் குறிவைக்கபட்டது

ஆனால் மோடி லாவகமாக தப்பி இப்பொழுது பாகிஸ்தானை முழுக்க சரித்திருகின்றார், 

விரைவில் வரலாறு காணா நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கும் அந்நாடு சில துண்டுகளாக உடையவும் வாய்ப்பு அதிகம்


வெள்ளையன் உருவாக்கிய காங்கிரஸ் பாகிஸ்தானை உடையாமல் காத்ததையும், சுத்தமான இந்தியரின் ஆட்சியில் அந்த ஆபத்து நீங்கி உடைவதையும் காலம் காட்டி கொண்டிருக்கின்றது



கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

பிச்சை போடுவது கூட சுயநலமே...,

Subbiahpatturajan பிச்சை போடுவது கூட சுயநலமே..., வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள