Manjolai
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம்.
சிறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.
எப்படி போகலாம்?
திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.
அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.
"மாஞ்சோலை' நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க பகுதியாகக் காட்சி தருகிறது. எங்கு நோக்கினும் தேயிலைத் தோட்டங்கள், காலை முதலே தேயிலை பறிக்கத் தொடங்கிவிடும் தொழிலாளர்கள், எப்போதும் குளுமையான சூழல்.
வனப்புமிக்க இந்த இடம் சுற்றுலா தளம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்படும் பகுதி.
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கல்லிடைக்குறிச்சி வழியாக Manjolai போகலாம். சாலை மார்கமாகச் செல்வோர் கல்லிடைக்குறிச்சியை அடைந்து அங்கிருந்து செல்லலாம். இங்கிருந்து சில அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனத்தில் செல்வதாக இருந்தால், மாஞ்சோலைக்கு போகும் முன் மணிமுத்தாறு செக் போஸ்ட் அருகே வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... முன் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை...
கருத்துகள்