Subbiahpatturajan
தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்கள் ..!?
தமிழ் உறவுகளே உலகத் தமிழர்களே .. அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டில் அனைத்து வேலைகளிலும் தமிழே தெரியாதவர்கள் வட நாட்டுக்காரர்கள். இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் .
இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகள் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது .
மாநில அரசின் வேலையில் தமிழ் தெரியாத வடநாட்டு இளைஞர்களை மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள்.
பணியில் தவறுதலாக மருந்து கொடுத்தாலோ...இந்தி தெரியாத டாக்டர் தமிழில் கூறினாலோ... தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
அப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது ...
சரி இது தனியார் மருத்துவமனை என்றே வைத்துக் கொள்வோம் மருந்து வாங்க வரும் முதியவர்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னாலும் புரியாது...இந்தியில் சொன்னாலும் புரியாது...கடைசியில் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவு வந்தாலும்...ஆச்சர்யபடுவதற்கு இல்லை .
அந்த இளைஞனிடம் எப்படி கேட்டு மருந்து கொடுப்பாய் என கேள்வி எழுப்ப அவன் Google translate செய்து மருந்து கொடுப்பேன் என்கிறார்.உங்களுக்கு தெரியுமா குகூள் மேப்பில் வழிதேடி குளத்தில் வண்டியை விட்டவர்களில் நானும் ஒருவன்...அது மட்டுமல்ல 100மீட்டர் தூரத்தை கடந்தால் ஊர் வந்திருக்கும் ஆனால் நாம தான் ரொம்ப ஸ்மார்ட் பாய் ஆச்சே ...3 கிலோ மீட்டர் வரை சுற்ற வைத்த பெருமை குகூளையே சேரும்
(மைண்ட் வாய்ஸ்)
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை...இது.
சரி இப்போ நம்ம டாப்பிக் உள்ள வருவோம்
காரணம் இதை மத்திய அரசு நேரடியாக வலியுறுத்தல் செய்யும் அழுத்தத்தின் காரணமாக மூலமே மாநில அரசு அடிபணிந்து செயல்படுகிறது .
மாநிலத்தின் உரிமையை இழந்தும் மாநில அரசு இருப்பதனாலேயே இதற்கு காரணம் என என்ன தோன்றுகிறது.
ஊழல் குற்றம் மாநில அரசின் மேல் அதிகம் இருப்பதால் தான். அவர்கள் சொல்வதற்கு அனைத்தையும் கேட்க வேண்டியிருக்கிறது .
இன்னும் எவ்வளவோ காரணம். தமிழர்நாட்டில் தமிழருக்கு வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் அதனால்தான் வெளிநாடுகள் தேடி போகிறார்கள்.
விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...
உங்கள் பிள்ளைகள் இப்போது மதுவுக்கும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் அடிமையாகிப் போய்விட்டனர்...
பச்சையாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்...
நாளைய தலைமுறை தமிழனின் உண்மையான தலைமுறையாக இருக்காதுங்க....மாற்று இனத்தின் கலப்பினமாகத்தான் நாம் இருப்போம்...ஜெர்சி மாட்டினத்தைப் போல....
கருத்துகள்