முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.!!!

Subbiahpatturajan

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.



வங்கியில் நகைக்கடனுக்கு அதிக பணம் உள்பட ரிசர்வ் வங்கி வெளியிட்ட மூன்று சூப்பர் அறிவிப்பு

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனினும் கடன் தவணை தள்ளிவைப்பு குறித்து இன்று ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வழியில்லாத நிலையே நீடிக்கிறது.


கொரோனாவால் இன்னமும் பல லட்சம் மக்ககள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில்முடங்கி கிடக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் செய்பவர்கள் தொழிலை நடத்த முடியாத அளவுக்கு முடங்கி போய் உள்ளனர். இதனால் பல லட்சம் பேர் வேலைஇழந்து தவிக்கிறார்கள்.


முக்கிய அறிவிப்பு

பொருளாதாரம் மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு வருகிறது எனினும் அரசின் அறிவிப்புகள் இப்போது யானை பசிக்கு சோளப்பொறியாகவே உள்ளது. இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பொருளாதார சீர்திருத்தின் முக்கிய படியாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வட்டிவிகிதம் எப்படி

கொரோனா காலத்தில், தற்போது வரை 1.15 சதவிதம் அளவிற்கு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. , பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. குறுகிய கால கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் 4 சதவிதமாகவே தொடர்கிறது. 2020 21ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்.

Add caption



தங்க நகை கடன்


ஏழை மக்கள் பெறும் தங்க நகை கடனில், தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது முன்னர் 75 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீட்டுக்கடன்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதாகவும், கொரோனாவால் உணவு பொருட்களின் விலை சர்வதேச நாடுகளிலும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வாய் திறக்கவில்லை

இந்நிலையில் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்ட கடன் தவணை தள்ளிவைப்பு தற்போது முடிய உள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இன்றைக்கு ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...