முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…

Subbiahpatturajan

முதலில் நம்ப மறுத்தேன்!
ஆனால், மீண்டும்,மீண்டும் நாலா பக்கங்களிலுமிருந்து இந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!

கேட்கக் கேட்க குலை நடுங்குகிறது…


ஆள் தூக்கும் அரசியல் மாபாதகங்கள், சதிச் செயல்கள்…போன்றவற்றை பயங்கரவாத இயக்கங்கள் அல்லது பாசிஸ அரசுகள் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால்,ஜனநாயகத்திற்கு பேர் போன இந்தியா போன்ற அதுவும் அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டிலா?

கொரோனாவைக் காரணம் காட்டி வீடுவீடாக வந்து அதட்டி,உருட்டி டெஸ்டுக்கு வா என்று நிர்பந்தித்து அழைத்துச் செல்லும் செய்திகளை முதலில் வடசென்னையில் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் கூறினார்! இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இது போன்ற செய்திகள் கடந்த ஒரு மாதமாக வந்தவண்ணம் உள்ளன!

முதலில் தனியார் மருத்துவமனைகள் தான் டெஸ்ட்டுக்கு யாராவது வந்தாலே போதும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று படுக்க வைத்து ’லம்ப்’பாக பணம் பார்த்தார்கள்! இதையடுத்து தான் அரசு மருத்துவமனைகளுக்காக ஆள்பிடிக்கும் அதிகேவலமான, அநீதியான அராஜகங்கள் நடந்து கொண்டுள்ளன! 

கொரானாவே இல்லாதவர்கள் கூட இவர்கள் செய்யும் அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது! அப்படி மரணித்தவர்களை வீட்டார் பார்க்கவும் வழியின்றி புதைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை!

முந்தாநாள் தேனி சென்று வந்த பத்திரிகையாளர் ராஜபாண்டியன் அங்கும் இந்த கொரானாவுக்கு ஆள்தூக்கும் அராஜகத்தை கண் கூடாகக் கண்டதாகக் கூறினார்! ’’உங்களுக்கு பாசிடிவ்’’ என்று சொன்னால் சொன்னது தான்! ரிசல்ட் கூட பல இடங்களில் காட்டப்படுவதில்லையாம்!

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இந்த மாதிரி நடப்பதாக தகவல்கள் இல்லை! மாகாராஷ்டிராவைத் தவிர்த்து, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரானா நோயாளிகள் அப்நார்மலான விதத்தில் கூடுதலாக அதிகரிப்பதன் பின்னணியில் ஏதோ தீய நோக்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அனேகமாக அனைவருக்கும் வரத் தொடங்கிவிட்டது.
 
எப்படி தமிழ் நாட்டில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரானா நோயாளிகள்…? ஐயாரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள்! இந்த பாதிப்புகளிலும் ,மரணங்களிலும் லாபம் பார்க்கும் அந்த தீய சக்திகள் யார்? யார்? இவர்களின் தகிடுதத்தங்கள் என்னென்ன..? இதை அம்பலப்படுத்த வேண்டும்.

# நம்மை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திரபிரதேசத்தில் – அதுவும் ஒரு கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை வெளி மாநிலங்களிலிருந்து உள் வாங்கிக் கொண்ட நிலையிலும் - ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் தான் பாதிப்பு! 2,100 தான் சாவு!

# நம்மை விட நெரிசலான அதிக மக்கள் உள்ள மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரு லட்சத்தை கூட கொரானா பாதிப்பு தொடவில்லை! சாவும் 2,100 தான்!

# நம்மை விட பெருமளவு பின்தங்கிய – தமிழ் நாட்டிலிருந்து வெளியேறிய அதிக புலம்பெயர் தொழிலாளர்களை பெற்றுள்ள - பீகாரில் கூட பாதிப்பு 82,000 தான்! சாவோ 450 தான்!

இது போல மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்,அவ்வளவு ஏன் பக்கத்தில் உள்ள கேரளாவில் கூட மிக மிக குறைவானோர்களே பாதிப்பு!

உலக அளவில் பார்த்தால் கூட, நம்மை விட அதிக பாதிப்புக்கும்,இழப்புக்கும் ஆளாகியுள்ள அமெரிக்காவில் கூட எந்த கெடுபிடிகளும் இல்லை! இன்னும் பல ஐரோப்பிய நாடுகளைக் கூட உதாரணம் காட்டுவேன்! உலகின் பல பாகங்களில் கொரானா இருந்தாலும் கூட ஒரளவு கட்டுப்பாடுடன் கூடிய சகஜ வாழ்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டளவுக்கு வேறெங்குமே கெடுபிடிகள், அபராதங்கள், அச்சுறுத்தல்கள், அவமானங்கள் இல்லை! இ பாஸ் ஊழல்கள், கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகள் பல திறக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது, பொது போக்குவரத்தை முற்றிலும் முடக்கி போட்டிருப்பது, அனைத்து வகையிலும் பொருளாதார வளர்ச்சியை முடக்கி வைத்திருப்பது, எதற்கெடுத்தாலும் அபராதம் என பணம் புடுங்குவது.. என இப்படி சொந்த மண்ணின் மக்களையே சுரண்டி,துன்புறுத்தி, கொன்று…தின்று கொழுக்கும் ஒரு அதிகார அமைப்பு பேராபதானது! 

இதை விடவும், ஒரு ஜனநாயக நாட்டின் ஊடகங்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் கண்டும் காணாமல் அல்லது உரிய முக்கியத்துவம் தராமல் வாளாவிருப்பது பெரும் பேராபத்தாகும்!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Thank you! Found your article so useful!I appreciate your research on this topic because I got a lot of informationabout government jobs age limit 30 years which I was searching for! You explained all the topics really well, therefore. I have bookmarked your website. Please keep sharing your articles.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...