முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள் தடை நீங்க வேண்டும், தற்சார்பு பெருக வேண்டும்...

Subbiahpatturajan

கள் தடை....  இது தமிழ்நாட்டில் நடந்தேறிய ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கை....!?


சற்றே சிந்தியுங்கள் தோழர்களே... தோழிகளே...

  1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன.2001 ல் இருந்து கள் தடை தொடர்ந்தது  , சாராய மது பானங்களுக்கு தடை இல்லை...

ராஜாஜி காலம் தொட்டு மதுவிலக்கு அமலில் இருந்தாலும்,  கள்ள சந்தையில் சாராயம் காய்ச்சுபவர்கள் அதிகரித்தனர், மருந்துக்கு கூட கள் எடுக்க முடியாது, பதனீர் இறக்கினாலும், கள் இறக்கியதாக வழக்கு தொடரப்பட்டு பனைஏறுபவர்களை சிறையில் அடைத்தனர் ....

இரண்டு மூன்று முறை தன் வாழ்வாதாரத்திற்காக சிறை சென்ற பனைஏறுபவர் அந்த பனைஏற்றத்தையே விட்டு பலர்வேறு தொழில் மாறினார்கள், சிலர் மட்டும் பல எதிர்ப்புகளை மீறி பதனீர் ஓலை மட்டை என கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன்குடும்பத்தை நடத்தி சென்றனர்.

பல லட்ச பனை ஏறும் தொழிலாளர்கள், தான் வாழ வழி இன்றி நிற்கதியாய் நின்றனர்.. யோசித்து பாருங்கள் நீங்கள் உங்கள் வேலையை இழந்தால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும்,

இதற்கிடையே சாராயம் காய்ச்சுபவர்கள் அரசியலில் இரண்டு பிரதான கட்சிகளில் அங்கம் வகித்தனர்.. சாராய கடைகளுக்கு கூட்டுறவு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது, காரணம் சாராயம் காய்ச்சியவன் எல்லாம் கரை வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபையில் அமளியில் குதித்து யார் பெரியவன் என தனது சாராய ஆலைகளை பெரிய அளவில் விரிவு படுத்தினார்கள் . ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் போட்டி போட்டு கொண்டு மது ஆலைகளை திறந்தனர்...

  இங்கே பனைஏறியவனுக்கோ கேட்க நாதி இல்லை... கள்ளை அனுமதித்தால் சாராய விற்பனை பாதிக்கும் என்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட கரைவேட்டிகள் ,பனைஏறியவன் என்ன ஆனால் எனக்கென்ன அவனுக்கும் குழந்தை உண்டு குடும்பம் உண்டு என்பதையே மறந்து சாராயம்விற்ற பணத்தில் அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு இவ்வளவு பணம் என முழங்கினார்கள்...

அந்தோ பாவம் அவன் ஒரு மரத்தில் வருமானம் தரக்கூடிய கள்ளை மட்டும் எடுக்க கூடாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு அவனுக்கு, கருப்பட்டி காய்ச்சினான், வியாபாரி அடிமாட்டு விலைக்கு வாங்கினான்.. பணத்தேவை அதிகரிக்க முன்பணம் வாங்கி  வட்டிக்கு கருப்பட்டி விற்க தொடங்கினான் .. வட்டியும் சில நேரங்களில் குட்டி போட்டது வாங்கிய பணத்திற்கு காலை முதல் மாலை வரை பனை ஏறி காய்ச்சியும் அவனால் வாங்கிய முன் பணத்திற்கு வட்டி கட்ட முடியா சூழ்நிலையும் உருவானது.. இது மிச்ச மீதி இருக்க பனைஏறியின் நிலை இதுவானால், பனை ஏறி கருக்கு,ஓலை, மட்டை,தும்பு, நார் தருவான் அதை நம்பி நாம் கைத்தொழில் செய்து பிழைக்கலாம் என்ற பத்து லட்சத்துக்கு அதிகமான கைவினை கலைஞர்கள் பனைமூலப்பொருட் கள் கிடைக்காமல் பாரம்பரிய தொழிலை விட்டு நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து மீதி நாள் கூலி வேலை செய்து காலம் பல சென்றது.. 800 க்கும் அதிகமான பாரம்பரிய  தொழில்கள் பல இருந்த இடம் தெரியாமல் அவனோடு அழிந்தது...

அவனுக்கு பிறகு பனையை விறகிற்கு விற்றால் பணம் கிடைக்கும் ,இதில் என்ன இருக்கிறது, நன்றாக எரிய கூடியது , வெள்ளையன் காலத்தில் இருந்த 50 கோடி பனைமரங்கள் கொள்ளையன் காலத்தில்  5 கோடி ஆனது...

     கள் தீமையாம், சாராயம் நன்மையாம்,  சித்த மருத்துவத்துக்கு கள் மருந்து கிடைப்பதில்லை, தோல் நோய்களுக்கும் கிடைப்பதில்லை, தமிழன் உணவே மருந்து என்பதை மறந்து மருந்தே உணவு என தன் வாழ்நாளை நோயாலே பெருக்கி கொண்டான்..

கள் தடையால் பனை தொழில் அழிந்தது, கருப்பட்டி  உற்பத்தி குறைந்து வெள்ளை சீனியின் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு, விளைவு நீரழிவு நோய் ஒவ்வொரு மருத்துவமனையிலும் டயாலீஸ் பண்ண அணிவகுப்பு...


நாம் மாறி விட்டோம் நாகரீகத்தில் வளர்ந்து விட்டோம் பனை உணவுகளையும் பாரம்பரிய தொழில் முறைகளையும் மறந்து விட்டோம், பனை குறைந்தது போல  கருத்தறிப்பதும் குறைந்து பல லட்சங்களை செலவு செய்து பிறக்கும் குழந்தைக்கும் பல நோய்களோடு வாழ வழி செய்து  ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறோம்...


   கள் தானே அதை குடிப்பது இழிவானது தானே என்று நாம் நினைத்து கள் என்பது என்ன என்பதையே சிந்திக்க தவறி விடுகிறோம், தமிழ்நாட்டின் மாநில மரம் கள் தடையால் அழிந்து கொண்டே போகிறது பாரீர்.

மதுப்பிரியர்களின் வருமானத்தில் இந்த அரசு இயங்குகிறது என்றால் , அதை உற்பத்தி செய்யும் ஐந்தாறு நிறுவனங்களின் வருவாய் எவ்வளவு?  இதற்கு பதிலாக பனைமரத்தின் கள் அரசு மதுபானமாக இருந்தால் எவ்வளவு வேலைவாய்ப்புகள், அண்டை மாநிலமான கேரளாவை பாருங்கள்..

நீங்கள் மாறி மாறி ஆட்சி செய்து உங்கள் தொப்பைகளை நிரப்பி கொள்கிறீர்கள்...

பாவம் அவன் நிரந்தரமாக பனைஏற முடியாமல் எப்போதாவது பனையில் ஏறி கயிறு அறுந்து விழுகின்றான்... சாகின்றான். 😥
   ஒரு பனைஏறுபவனை நம்பி பத்து பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் இன்னும் பத்து பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.. இது தானே காலங்காலமா நடந்து வந்த நிகழ்வு, நீங்கள் மதுவிலக்கு கொண்டு வருகின்றேன் என கூறி நயவஞ்சகமாக கள்ளை தடை செய்து சாராயம் உற்பத்தி செய்து ஆட்சி நடத்துவது எவ்வளவு பெரிய  நல்லொழுக்கம்....

நீங்கள் எவ்வளவுதான் பனையை விதைத்தாலும், அதை பயன்படுத்த ஆள்,பனைஏறுபவன் இல்லை எனில் பனைமரம் குறைந்து கொண்டே தான் செல்லும்.. கள் என்பது போதையாக்கப்பட்டது,உண்மையிலே அது ஒரு மருந்து , உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டசத்து,  குழந்தைகள் கூட குடித்த காலம் உண்டு, கள் தடை நீங்க வேண்டும், தற்சார்பு பெருக வேண்டும்...
    பனை வளர்ப்போம் பனையை பயன்படுத்துவோம்,  பனை  அடி முதல் நுனி  வரை பயன்தரும் அமுத சுரபி.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

பனை மரம்,கள் பற்றி மேலும் அறிய கேள்வி பதில்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...