கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, ...
இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது?
அதுக்கு இரண்டு காரணம்,
1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth
2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது
சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை, 2019.
மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு.
இதன் படி. . .
தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்!
வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!!
நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம்
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம்
போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்!
~~~
இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம்.
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .
தமிழ்நாடு - 48%
மகாராஷ்டிரா - 40%
உ.பி - 32%
குஜராத் - 40%
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் OBC/SC/ST வகுப்பினர் மட்டும். . .
தமிழ்நாடு - 82%
உ.பி - 36%
மகாராஷ்டிரா - 35%
குஜராத் - 29%
இந்தியளவிலான மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டில். . .
OBC
தமிழ்நாடு - 30%
மகாராஷ்டிரா - 7.8%
உ.பி - 8.5%
குஜராத் - 2.3%
SC
தமிழ்நாடு - 17%
மகாராஷ்டிரா - 14%
உ.பி - 9%
குஜராத் - 2.6%
ST
தமிழ்நாடு - 1.3%
மகாராஷ்டிரா - 7%
உ.பி - 0.9%
குஜராத் - 7%
தமிழ்நாட்டின் ST Reservation என்பதே 1% தான் என்பதை கவனத்தில் கொண்டால், Open Competition மூலம் நாம் ST நுழைவை சாத்தியப்படுத்தியிருப்பது புரியும்.
சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகியிருக்கு என்பதை இந்த பட்டியலே சொல்லுதா?
இதர தென்மாநிலங்களோ, ஏன் நீண்டகாலம் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த மேற்கு வங்கத்திலோ கூட இப்படியான சீரான, பரவலான வளர்ச்சி சாத்தியமாகவில்லை என்பதை இந்த பட்டியல் உங்களுக்கு உணர்த்தும்.
அப்போ, நமக்கான கல்விக் கொள்கையை வகுக்க இந்தியாவில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா?
அதிலும் குறிப்பாக குஜராத் கூட்டத்துக்கோ, அதன் வழி நிற்கும் மத்தியரசுக்கோ தகுதி இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க.
மத்த மாநிலங்கள் எல்லாம் காலம் காலமா தன்னிடம் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை தராம, தட்டு தடுமாறி தத்தி தவழ்ந்து படித்து மேல ஏற முயற்சிப்பவனிடமும் Merit, தகுதி, திறமை என்று எகத்தாளம் பேசி, தன்னிலை உணராமல் அவன் தங்களுக்கு அடிமையாகவே இருக்கனும் என்று இந்துத்துவாவை திணித்து,
வளர்ச்சி என்பதை ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனா நம்ம தமிழ்நாடு அப்படியில்லை என்பதை தான் மத்தியரசின் புள்ளியியல் விவரங்கள் நமக்கு சொல்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. . .இதில் அரசு & தனியார் துறை ஆசிரியர்கள் மொத்த பேரும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்காங்க. அதனால Reservation மூலம் மட்டுமே எல்லாரும் மேல வந்துட்டாங்கன்னு யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. காரணம் தனியார் கல்லூரிகளில் Reservation மூலம் யாரும் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது.
எந்த தேர்வு வைத்தாலும் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவனுக்கு, கடைசி மதிப்பெண் பெறும் மாணவன் கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, சொல்ல முடியாது என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.🥰🥰🥰🥰🥰
கருத்துகள்