வாழ்க்கையில முன்னேறனும்னு துடிச்சேன்னா....!?
வித்தியாசமான
சிந்தனை ஓட்டம்...
வாழ்க்கையில முன்னேறனும்னு துடிச்சேன்னா
கொஞ்சமாவது அவமானத்தை தொட்டுட்டு வா...
பாக்கெட்ல பத்து ரூபாய் இல்லாம வாழ்ந்து பாரு,
தங்கற இடத்துல இருந்து திங்கற இடம் வரைக்கும் ஒதுங்கியே இருக்கீயா...
கூடிய சீக்கிரம் நல்லா வருவ..
எவனை பத்தியும் கவலைப்படாதே,
கீழே குனிஞ்சா கொட்டறதுக்கு ரெடியா இருப்பானுங்க,
நிமிர்ந்தே இரு ....
பத்து பைசாக்கு மதிக்காதே உன்னைய சீண்டறவங்களை...யாரையும் அம்போன்னு விட்டுடாது இந்த பாழாய் போன வாழ்க்கை...
அப்படிதான் சுத்தி சுத்தி அடிக்கும்..
என்னடா இது வாழ்க்கை ன்னு கதற வைக்கும்...
இது நமக்கான காலம் இல்லைன்னு சற்று கம்முன்னு இரு அவ்வளவு தான்...
குனியற இடத்துல குனிஞ்சும்
வளையற இடத்துல வளைஞ்சும்
நிமிர்ர இடத்துல நிமிர்ந்தும்
பேசற இடத்துல பேசியும்
உழைக்கிற இடத்துல உழைச்சும்
இருந்தாவே போதும்..
ஏறி வந்துடலாம்..
அவ்வளவு தான் வாழ்க்கை...
முதுகுல குத்தறதுக்கும்
கழுத்தை அறுக்கறதுக்கும் ஆயிரம் பேர் இருக்கிற இந்த உலகத்தில கை நீட்ட ஒருத்தர் கூடவா காட்டாது...
அப்படி ஒரு வாய்ப்பு வாய்க்கும் போது கெட்டியாக பிடிச்சுட்டு மேலே வந்துரு...
கீழே போட்டு நசுக்குனவனெல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்..
கடைசியா ஒண்ணே ஒண்ணு
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தான்..
ஆனா சத்தியமாய் பணம் இல்லைன்னா வாழ்க்கையே இல்லை...
அதை மட்டும் எப்பவும் மனசுல வச்சிக்க..
சீக்கிரம் முன்னேறிடுவே...
நன்றி.. சுப்பையா பட்டுராஜன்
கருத்துகள்