Subbiahpatturajan
#தெலுங்கர்கள் #சினார்தமிழன்
-தமிழர்கள் காதில் பூ சுற்றுகிற வேலை...!
°°°
-----------------------ஆந்திர தெலுங்கர்களும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும், திராவிடத்தை தமிழினத்தின் மீது திணிப்பது
ஏன்?
டி. இரவி என்பவர் தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருப்பதை சரி என்கிறார்.
அதற்கான ஆதாரத்தை கீழே விவரிக்கிறார டி. இரவி:
தெலுங்கர்கள் யார்?ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களா? இல்லை அன்டார்டிகாவிலிருந்து வந்தவர்களா?
சம்ஸ்க்ருத மொழியை ஏற்றுக் கொண்ட தமிழன் தானே தெலுங்கனாக மாறினான்.தெலுங்கிலிருந்து தமிழை நீக்கி விட்டால்..அவர்கள் சனாதனிகளாகி விட மாட்டார்கள். ஆனால் அவர்கள் சம்ஸ்க்ருத மொழியை விட்டு விட்டால்... அவர்கள் தமிழர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை.
----------------------------------------
பொன்பரப்பி அரசேந்தின்.:
நீதிக்கட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆந்திர தெலுங்கர்களே. அவர்கள் கட்சி கொள்கைகளை பரப்ப தொடங்கிய தமிழ் இதழுக்கு, "திராவிடன்" என்று வைத்தவர்கள் தெலுங்கர்களே.
தமிழ் பறை குடி மக்களுக்கு
" ஆதிதிராவிடர்கள்" என்று பெயர் வைத்தவர்களும் தெலுங்கர்களே. தெலுங்கு மொழியில் இருந்து சமசுகிருதத்தை நீக்கி, அவர்கள் தமிழர்களாக மாறிவிடுவார்கள் என்பது கற்பனையானது. ஒரு மொழி வளர்ந்து தனி மாநிலமாக பிரிந்து போய் விட்டனர்.
எந்த தெலுங்கனாவது, எங்களுடைய மூதாதியர்கள் தமிழர்கள் என்று ஏற்று கொள்கிறானா?
முதன் முதலில் மொழிவாரி மாநிலம் கேட்டு போராடி " தனி மாநிலம்" அமைத்து கொண்டவர்கள் தெலுங்கர்கள் தான். தமிழர்களின் நிலப்பகுதிகளை அடாவடி தனமாக ஆந்திரத்தோடு இணைந்து கொண்டவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
"மதராசு நமதே" என்று போராடி, சென்னை நகரை கைப்பற்ற முயற்சி செய்ததும் ஆந்திர தெலுங்கர்களே.
தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும் தான், ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் வந்தவர்களும்
தெலுங்கர்களே. ஆந்திராவில் வாழும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.
பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி
தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை தடுத்தவர்தளும் ஆந்திர தெலுங்கர்களே.
தமிழை செம்மொழியாக்கிய உடன்,
தெலுங்கையும் செம்மொழியாக்க வேண்டும் என்று போராடி, " தெலுங்கை செம்மொழி"
ஆக்கி கொண்டதும் ஆந்திர தெலுங்கர்களே.
இராசசேகர் என்ற தமிழ் நடிகர், புதிய
கட்சி ஒன்றை தொடங்கியவுடன், அவர் வீட்டை அன்றே அடித்து நொறுக்கியவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
ஆந்திர திரைப்பட சங்கத்தில் நடந்த, தேர்தலில் கன்னடரான நடிகர் பிரகாசுராசை போட்டி இடாமல் தடுத்தவர்களும் ஆந்திர தெலுங்கர்களே.
தெலுங்கு என்பது வளர்ந்து தனி நாடாக மாற அனைத்து தகுதிகளையும் பெற
தகுதியுடையதாக மாறி வருகிறது.
ஆந்திர தெலுங்கர்கள், தெலுங்கு மொழியில் உள்ள சமசுகிருதத்தை நீக்கி விட்டு, நாளைக்கு தமிழர்களாக மாறி விடுவார்கள் என்பது எல்லாம் தமிழினத்தை
ஏமாற்றும் செயல்.
ஐநூறு ஆண்டுகளுக்காக தமிழ்நாட்டில் வாழுந்து கொண்டு, பொது வெளியில் தமிழ் பேசிக்கொண்டு, வீட்டிலும்
தெலுங்கர்களிடம் தெலுங்கு பேசிக் கொண்டு, தெலுங்கை எழுத படிக்க தெரியாத தெலுங்கர்களே, தங்களை தமிழர்களாக ஏற்று கொள்ள மறுக்கின்றனர். தங்களை " திராவிடன்"என்று சொல்லி கொள்கின்றனர்.
1956 இல் காங்கிரசு ஆட்சி, தமிழை
ஆட்சி மொழியாக்கியது. தெலுங்கர்
அண்ணாதுரை முதலமைச்சர் ஆனவுடன்,
"இருமொழி கொள்கை"என்ற பெயரில்
ஆங்கிலத்தை முதன்மை ஆட்சி மொழியாக்கி விட்டார். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தமிழையும் அழித்து, தமிழின சிந்தனையையும் அழித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும்
திராவிடத்தை திணித்து வருகின்றனர்.
வரலாறு இப்படி இருக்கும் போது,
ஆந்திர தெலுங்கர்கள் எல்லாம், தமிழகர்களாக மாறிவிடுவார்கள் என்பது,
தமிழர்கள் காதில் பூச்சுற்றுகிற வேலை.
தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிற வேலை.
கருத்துகள்