முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Warning ...!? தமிழினம் சொந்தத் தாயகத்தில் சிறுபான்மை இனமாகிய விடுவர்.எச்சரிக்கை....

Subbiahpatturajan

Thank you dinamalar.

#Warning 

#Warning

நாட்டிலேயே முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவிகிதமாக உள்ளது

 அடுத்ததாக தமிழ்நாட்டில் முதியவர்களின் அளவு 13.6 சதவிகிதமாகவும், இமாச்சலில் 13.1 சதவிகிதமாகவும், பஞ்சாப்பில் 12.6 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 12.4 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அங்கு பொருளாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எனவும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதும் காரணம் என கூறப்படுகிறது.


இவ்வாறு வயது மூத்தோர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 25% இருப்பதால்தான் 
எதிர்காலத்தில் குறையும் மக்கள்
தொகையை ஈடு கட்டும்
நோக்கில் சீன அரசு கடந்த ஆண்டில்
ஒரு குழந்தைத் திட்டத்தைக் கைவிட்டு 2 அல்லது 3 குழந்தை
பெற்றுக் கொள்ளலாம் என
மாற்றி உத்தரவிட்டது.

இதே நிலைதான் தமிழினமும்
சந்திக்க நேரிடும். நாமும்
சீனம் போல அதிகம் குழந்தைகள்
பெற இப்போது ஊக்குவிக்க 
வேண்டிய நேரம். ஆனால் திராவிட
பெண்ணிய வாதிகள் என்ற பெயரில்
ஒளிந்து கொண்டிருக்கும் பிற மொழியினர் இதை வலுவாக எதிர்ப்பார்கள்.

ஒருபுறம்
ஏற்கனவே தமிழ்நாட்டில்
அவர்கள் தொகை அதிகரித்து வருகிறது.

மறுபுறம் குவிந்து வரும் வட இந்திய
மக்கள் தொகை.

விரைவில் தமிழினம் சொந்தத்
தாயகத்தில் சிறுபான்மை
இனமாகிய விடுவர்.

இருபதாம் நூற்றாண்டு த் தமிழர்களைக் கீழடியில்
கண்டெடுப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...