Subbiahpatturajan
#savethisartical
#savethisarticals
இந்தக் கட்டுரையைசேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.....*
*ஒவ்வொரு கஷ்ட சமயங்களில் படித்து தேறுதல் பெருங்கள்.....*
*இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை*
*ஆத்மவிலாசம்*
*உன்னை வாழ்த்த*
*மனம்* *இல்லாதவர்கள் இருப்பார்கள்*
*அவர்களைப் பற்றி கவலைப்படாதே*.
*நீ*
*எதை செய்தாலும்*
*அதில் ஒரு குறையை*
*கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்*
*இருந்து கொண்டுதான் இருப்பார்கள்*.
*அதையும் பெரிது பண்ணாதே*.
*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ*.
*ஒன்றை மட்டும் தெரிந்து கொள்*.
*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி* *ஜென்மங்கள்*.
*அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்*.
*அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்*.
*அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே*.
*அவர்கள் போகும் வரை போகட்டும்*
*போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்* .
*அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்*.
*அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது*.
*இதுதான் வாழ்க்கையின் உண்மை*.
*அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்*.
*அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்*,
*நண்பர்களாக இருந்தாலும்*,
*கணவன்*
*மனைவியாக*
*இருந்தாலும், பெற்ற*
*குழந்தைகளாக இருந்தாலும்*,
*பேரன் பேத்திகளாக இருந்தாலும்*,
*உறவுகளாக இருந்தாலும்*,
*அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா*?
*ஒதுங்கி நின்று வேடிக்கை பார். பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே*.
*அவர்களுக்கு அனுபவம் தான் குரு*.
*அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு*.
*செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி* *உன்னிடம் அன்பை காட்டினாலும்*
*தான் யார்* ?, *தன் குணம் என்ன* ?, *என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்*.
*எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்*.
*நாம் வந்து போகும்*
*உலகத்தில் பிறந்திருக்கிறோம்*.
*அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது*.
*எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள்*.
*என்று புலம்பிக் கொண்டு இருக்காதே*.
*கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்*.
*அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது*.
*இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்*.
*நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்*.
*அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்*
*அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்*.
*இன்பமானாலும் துன்பமானாலும்*
*அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்*.
*அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே*.
*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல்*
*உன்னோடு சேர்ந்தே பயணிப்பார்*.
*அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது*. *அப்படி அது நடந்து விட்டால்*
*எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*,
*பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்*.
*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்*.
*உன் கண்ணீரும் உன் கவலையும்*
*உன்னை பலகீனமாக காட்டிவிடும்*.
*அழுவதாலும்*
*சோர்ந்து போவதாலும்*
*ஒன்றும் நடக்கப்போவதில்லை*.
*எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்*.
*அழுது சுமப்பதை காட்டிலும்*.
*ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்*.
*தைரியமும் தன்னம்பிக்கையும் தான்*
*ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும்*
*என்ற உண்மையை உணர்ந்துகொள்*.
*இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்*
*எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...*.
*இதை நான் சேமித்து வைத்துள்ளேன்...... என்றும் நட்புடனும் அன்புடனும்.....
கருத்துகள்