முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*இந்தக் கட்டுரையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்...??!

Subbiahpatturajan



#savethisartical

#savethisarticals

இந்தக் கட்டுரையைசேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.....*


*ஒவ்வொரு கஷ்ட சமயங்களில் படித்து தேறுதல் பெருங்கள்.....*

*இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை*
*ஆத்மவிலாசம்*

*உன்னை வாழ்த்த*
*மனம்*  *இல்லாதவர்கள் இருப்பார்கள்*

*அவர்களைப் பற்றி கவலைப்படாதே*.

*நீ*
*எதை செய்தாலும்*
*அதில் ஒரு குறையை*
*கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்*
*இருந்து கொண்டுதான் இருப்பார்கள்*.

*அதையும் பெரிது பண்ணாதே*.

*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ*.

*ஒன்றை மட்டும் தெரிந்து கொள்*.

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி* *ஜென்மங்கள்*.

*அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்*.

 *அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்*.

*அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே*.

*அவர்கள் போகும் வரை போகட்டும்*

*போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்* .

*அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்*.

*அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது*.

*இதுதான் வாழ்க்கையின் உண்மை*.

*அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்*.

*அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்*,

*நண்பர்களாக இருந்தாலும்*,

*கணவன்* 
*மனைவியாக* 

*இருந்தாலும், பெற்ற*
*குழந்தைகளாக இருந்தாலும்*,
*பேரன் பேத்திகளாக இருந்தாலும்*,
*உறவுகளாக இருந்தாலும்*,

*அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா*?

*ஒதுங்கி நின்று வேடிக்கை பார். பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே*.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு*.

*அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு*.

*செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி* *உன்னிடம் அன்பை காட்டினாலும்* 

*தான் யார்* ?, *தன் குணம் என்ன* ?, *என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்*. 

*எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்*.

*நாம் வந்து போகும்*
*உலகத்தில் பிறந்திருக்கிறோம்*.

*அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது*.

*எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள்*.

*என்று புலம்பிக் கொண்டு இருக்காதே*.

*கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்*.

*அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது*.

*இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்*.

*நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்*. 

*அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்* 
*அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்*.

*இன்பமானாலும் துன்பமானாலும்*
*அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்*.

*அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே*.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல்*

*உன்னோடு சேர்ந்தே பயணிப்பார்*.
 *அது உன் பிறவி  பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது*. *அப்படி அது நடந்து விட்டால்*

*எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*,

*பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்*.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்*.

*உன் கண்ணீரும் உன் கவலையும்*
*உன்னை பலகீனமாக காட்டிவிடும்*.

 *அழுவதாலும்*
*சோர்ந்து போவதாலும்*
*ஒன்றும் நடக்கப்போவதில்லை*.

*எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்*.

*அழுது சுமப்பதை காட்டிலும்*.
*ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்*.

*தைரியமும் தன்னம்பிக்கையும் தான்* 
*ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும்* 
*என்ற உண்மையை உணர்ந்துகொள்*.

*இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்*

 *எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...*.

*இதை நான் சேமித்து வைத்துள்ளேன்...... என்றும் நட்புடனும் அன்புடனும்.....

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு கண்டிப்பாக இதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் கட்டாயம் வாழ்த்துக்கள் சினார் தமிழா
S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை அருமை அருமை இது சாத்தியம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...