Subbiahpatturajan
Panjshir |
#Afghanistan #topnews
பஞ்ச் சீர் :
பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை.
Panjshir
#Afghanistan #topnews
பஞ்ச் சீர் :
பஞ்ச் சீர் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாவட்டம் இந்த மாவட்டத்தில் தாலிபான்கள் இன்னும் நுழைய முடியவில்லை.
பஞ்ச் சீர் என்றால் என்ன?
பஞ்ச் சீர் என்றால் ஐந்து தலைகளுடன் கூடிய சிங்கங்கள் என்று பொருள்.
பஞ்ச் சீர் சிறப்பு:
பஞ்ச் சீர் மாவட்டத்தில் மலை முகடுகளுடன் கூடிய இயற்கை அரண்களாக அந்த மாவட்டம் அமைந்துள்ளது இதுநாள் வரை அமெரிக்க ரஷ்ய படைகள் கூட அங்கு சென்றதாக வரலாறு இல்லை.
அகமது ஷா அகமது மசூத் anti Taliban. சலே என்று சொல்ல கூடிய துணை அதிபர் இந்த பஞ்ச் சீர் மாவட்டத்தில் தான் இருக்கிறார்கள்
தாலிபான்கள் இங்கு வந்துவிடுவார்கள் என்று விழிப்புடன் இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள நதியின் கரைகளில் அந்த ஊர் மக்களுடன் அங்குள்ள இளைஞர் படையை சலே அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார்.
பரிதாபம்
இதில் பரிதாபம் என்னவென்றால்
அந்த மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 1லட்சத்து 50 ஆயிரம் மக்கள் மொத்த தாலிபான்கள் உறுப்பினர்களில் 1 லட்சம் வீரர்கள் கண்டிப்பாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மற்றவை இதர முத்த உறுப்பினர். இந்தப் போரில் சாதாரண மக்கள் குழந்தைகள் கண்டிப்பாக பாதிக்கப் படுவார்கள்.
தாலிபான்கள் தங்களின் சட்டம்
ஷரியத் சட்டம் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். இதற்கு சீனா தன்னுடைய ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.சீனாவை சேர்ந்த மக்கள் அங்கு இருப்பின் அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா தங்களின் ஆதரவை பஞ்ச் சீர் மக்களுக்கு தருமாறு துணை அதிபர் சலே அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு பிரச்சினை என்பதால் தாலிபான்களுடன் அமர்ந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வரமுடியும்.
ஆப்கானிஸ்தான் சட்டம்:
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான சட்டமாகவே ஷரியத் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெற்றாலே பேச்சு வார்த்தை நல்ல படியாக முடியும்.
மேற்கத்திய நாடுகள்
ரஷ்யாவின் முடிவு. தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தாயாராகவே இல்லை.
அத்தியாவசிய பொருட்கள்
உலக நாடுகள் தாலிபான்கள் ஆட்சியை பொருளாதார தடை விதித்தது.ஆனால் இதில் விபரிதம் என்னவென்றால் பெண்கள் வேளியே வரப்பயப்படும் சூழலில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் காய்கறிகள் பழங்கள் வாங்க வேளியே வரமுடியாமல் அஞ்சி நடுங்குகிறார்கள்.
தாலிபான்கள் வேண்டுகோள்
தாலிபான் அமைப்பின் தடையை உலக நாடுகள் விலக்கி கொள்ள வேண்டும். உலக நாடுகளில் எங்களின் வங்கி கணக்குகளை உடனடியாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மக்கள் வேறுநாடுகளுக்கு தப்பிச்செல்ல முடியாதபடி காபூல் ஏர்போர்ட்டில் தாலிபான்கள் சுற்றிவளைத்து காவல் இருக்கின்றனர்.
மற்ற நாட்டுமக்களை தாலிபான்கள் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.
விரைவில் மற்ற நாட்டு மக்களை வேளியேறுமாறு எச்சரிக்கை செய்துள்ளனர்.
கடைசியாக காபூலில் இருந்து வந்த இந்திய விமானப்படை விமானத்தில் 328 பேர் வந்தனர் மக்களுடன் ஆப்கான் மக்களும் கலந்து வந்திருக்கலாம்.
இதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
கருத்துகள்