முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

HDFC BANK Customer pls note this point HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு

Subbiahpatturajan




பிரபல வங்கி செய்த முக்கிய மாற்றம்! இனிமே அந்த பிரச்சனையே இல்லை
வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal.
எச்டிஎஃப்சி வங்கியின் ‘Cardless cash withdrawal’ திட்டம் குறித்து இதுவரை தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க.

எச்.டி.எப்.சி வங்கி சில வாரங்களுக்கு முன்பு அப்டேட் செய்த இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த சூப்பரான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்பெல்லாம் பர்சில் எப்போதுமே பணம் இருக்க வேண்டிய சூழல் போகி கார்டுகள் நிரம்பின. ரொக்க பரிவர்த்தனை குறைந்து கார்டுகள் பயன்பாடு அதிகரித்தது. அதன் பின்பு ஃபோன்பே ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தும் முறைகள் பயன்பாட்டிற்கு வந்தன. இப்படி அடிக்கடி மாற்றங்கள் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க வங்கிகளும் தங்கள் பங்குக்கு அவ்வப்போது அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal.

இந்த திட்டம் வழங்கும் வசதி என்னவென்றால் வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம். கார்டு இல்லாமலேயே உடனடியாகவும், பாதுகாப்பாகவும் பணம் எடுத்துக்கொள்ள இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். அல்லது மாதம் 25,000 ரூபாய் வரை ஏடுத்துக்கொள்ளலாம்.

also read... சேமிப்பு திட்டத்தில் லட்சங்களில் வருமானம் பெற இதுதான் ஒரே வழி!

செய்ய வேண்டியவை:

வாடிக்கையாளர்கள் முதலில் எச்.டி.எப்.சி வங்கி ஆன்லைன் நெட் பேங்கிங்கை லாகின் செய்ய வேண்டும், பின்பு அதில் இருக்கும் பணப்பரிமாற்றம் (fund transfer) என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும். உங்களது வங்கிக் கணக்கினை தேர்தெடுக்கவும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதனை இரண்டாவது பாக்ஸில் கொடுத்து கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய தொகையை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இதன் பிறகு யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போகும். அதன் மூலம் அருகிலுள்ள ஏடிஎம் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இது 24 மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் அதன் பின்பு அந்த மெசேஜ் காலாவதி ஆகிவிடும் செயல்படாது.

பணம் பெற்றவர் செய்ய வேண்டியவை:

அருகில் இருக்கும் ஏடிஎம் சென்று பணத்தினை எடுக்க மொபைல் எண்ணுக்கு வரும் 4 இலக்க ஓடிபியும் மற்றும் 9 இலக்க ஐடியை உள்ளிடவும். இதற்கு வங்கி ஏடிஎம்மில் cardless cash என்ற ஆப்சனை தேர்தெடுக்க வேண்டும் அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி மற்றும் ஐடியை கொடுத்த அந்த பணத்தை எடுக்கலாம்.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இது எல்லா வங்கிகளும் விரைவில் நடைமுறை படுத்த வேண்டும் நல்ல திட்டம் பயனுள்ள முறையில் உள்ளது நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...