முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனி பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்....🤔🤷

இனி பணம் இல்லாமலும் ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்யலாம்....🤔🤷

Add caption

ரயில் பயணத்திற்காண உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பணம் இல்லாமல் முன்பதிவு செய்யப்படும்... IRCTC-யின் இந்த 'சிறப்பு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தக்கல் டிக்கெட்டுகளுக்காக ePayLater உடன் இணைந்து 'புக் நவ், பே லேட்டர்' சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ePayLater என்பது அர்த்தசாஸ்திர ஃபிண்டெக் பிரைவேட் லிமிடெட் (Arthashastra Fintech Pvt. Ltd.,) வழங்கும் டிஜிட்டல் கட்டண தீர்வாகும்.
இதன் மூலம் திட்டத்தின்படி பயணிகள் தங்களுடைய பயணத்திற்கேற்ற டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம். அதற்கும் மேல் கால தாமதம் ஆனால் 3.5% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Add caption


தட்கல் முன்பதிவு வசதி பயணிகளை ஒரு குறுகிய அறிவிப்பில் அவசரகால முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. AC முன்பதிவுகளுக்கான தட்கல் டிக்கெட்டுகள் பயணத் தேதியைத் தவிர்த்து, பயண தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன் காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு திறக்கப்படுகின்றன.
IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1. முதலில் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும்.


2. அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, பேமெண்ட் ஆப்சனுக்கு வரவேண்டும்.


3. அதில் 'பே ஆன் டெலிவரி' அல்லது 'பே லேட்டர்' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இது 'இபே' என்பதில் இருக்கும்.
IRCTC இணையதளத்தில் லாகின் செய்தவுடன் உங்கள் பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் அதன் பின் நீங்கள் பயணம் செய்யும் ஊருக்கு எத்தனை ரயில்கள் உள்ளது என பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் செளகரித்திற்கு ஏற்ற ரயிலை தேர்வு செய்து பயணிகள் விபரத்துடன் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும்.


ALSO சூரியசக்தியில் இயக்கும் ரயில்கள்... இந்தியன் ரயில்வேயின் Wow திட்டம்..!
அதன் பின்னர் 'கேப்ட்சாவை' எண்டர் செய்து பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்கு வரவேண்டும். அதில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வாலட், பே ஆன் டெலிவரி என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் பே ஆன் டெலிவரியை தேர்வு செய்து பின்னர் அதற்கு கீழ் உள்ள பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 'மேக் பேமெண்ட்' என்ற ஆப்சன் தோன்றும். அதனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் 'இபே' என்ற அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும். அதன்பின்னர் உங்களுடைய மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும். நீங்கள் பயணம் செய்து முடித்த பின்னர் டிக்கெட் புக் செய்த 14 நாட்கள் கழித்து பணம் செலுத்தினால் போதும்.
பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் குறைந்த தாமதத்தை எதிர்கொள்வதையும் கட்டண நுழைவாயில் தோல்விகளைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்கிறது.
IRCTC-யின் கூற்றுப்படி, 14 நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 36% என்ற விகிதத்தில் அபராத வட்டி மற்றும் சில சந்தர்ப்பங்களில் டிக்கெட் ரத்து மற்றும் / அல்லது பயனர் கணக்கு செயலிழப்பு ஏற்படலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...