"#எச்ச_சோறு "#தண்டச்_சோறு"
#சோறு - #சாதம் இதிலும் #அரசியலா?
#ஆம்...🤗 இங்கு #எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது...!✅✅✅😊😊😊
#அதேபோல், இந்த சொற்களுக்கு பின்னால் #மிகப்பெரிய_அரசியல் இருக்கிறது...!!!
👉நம்மில் எத்தனைப் பேர் இன்று
பொதுவெளியில் #சோறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்?🤔
கல்யாண விருந்தில் #சத்தமாக ⭕"சோறு கொண்டு வாங்க" என்று நாம் #கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை...!
#காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு #தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.
👉நகைச்சுவைத் துணுக்குகளில், #திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் #பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும்...
👉எந்த #பிச்சைக்காரனாவது
"அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா...? அது ஏன்...?
⭕#திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது...!!!
➡️சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் இருக்கிறது✅✅✅
⭕"பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் #வேந்தர்கள் வந்து போகிறார்கள்...!
⭕"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று #பாரதி பாடியுள்ளான்...!
#இழிவு_செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பிடப்படுகிறது.
👉"#சோத்துக்கு_வழியில்லாத_நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம்...
👉"#சாதத்துக்கு_வழியில்லாத_நாயி" என்று எழுதப்படுகிறதா...? காரணம்...?
அதன் பின்னால் உள்ள அரசியல்.
⭕"#கல்யாண_சமையல்_சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.
⭕"#எச்ச_சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.
👉உச்சக்கட்டமாக வீடுகளில் பிள்ளைகளை திட்ட "#தண்டச்_சோறு" என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது "#தண்ட_சாதம்" என்று சொல்வதுண்டா?
➡️சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
➡️கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
👉மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது...😁
#உணவு_விடுதிகளில்
➡️புளியஞ்சோறு,
➡️எலுமிச்சைச் சோறு,
➡️தயிர் சோறு
➡️தக்காளிச் சோறு என்பது
இடமாறி,
➡️புளி சாதம்,
➡️எலுமிச்சை சாதம்,
➡️தயிர் சாதம்,
➡️தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது...!!!
👉குழந்தைகளுக்கு ⭕"பருப்புச் சோறு" ஊட்டப்பட்டது போய்...
👉⭕"பருப்பு சாதம்" கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது...!!!
இதுவெறும்
வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல.
#தமிழ்ச்_சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லை #சொல்ல_முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே...✅✅✅✌️✌️✌️
#தாய்மொழியில் பேசவே முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்கச் செய்வான்...?🤔
எனவே, சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே #பயன்படுத்துவோம்...!✌️
கருத்துகள்