தின்று கொளுத்தவர்களுக்கு
*மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*


தன் தந்தையை மிதிவண்டியாலேயே 1000 கிலோ மிட்டர்களை கொரோணாவால் கடந்தவளால்
சராசரியான 60 ஆண்டு கால மனித வாழ்கையை கடக்க இயலவில்லை
காமக் கொடூரர்களாலும்
தீய சுயநல சமூகத்தினாலும்
அரசியல் தலைவர்களாலும் தொண்டர்களாலும்
எது எதுக்கோ சட்டம் வருது
இதற்கு ஒரு சட்டமில்லையா..???
மனிதா நீயும் திருந்த ஏதும் வழியுமில்லையா...???
வஞ்சம் தீர்க்க சட்டம் வருது
மனிதனை மனிதன் அடிமைப்படுத்த .
மனிதனை மனிதன் உயர்ந்தவன் எனக் தம்பட்டம் அடிச்சிடிச் பிறரைத் தாழ்த்திட அதில் வாழ்ந்திட சட்டம் வருது
இதற்கு ஒரு சட்டமில்லையா..???
பெண்ணைத் தீண்டும், சீண்டும், சீரழிக்கும்
வன்கொடுமைச் செய்து
காமத் தீயில் குளிர் காயும்
வக்கிரப் புத்திகளுக்கு
கொடுங்கோலனுக்கு அவனைக் கடுமையாக தண்டிக்க ஒரு சட்டமில்லையா...???
இனி புதிதாக உருவாகும், உருவாகப் போகும் எந்தச் சட்டமும் மக்களின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது,
முடிவெடுக்க இயலாத வகையில்
சட்ட வரையறைகள் இருக்க வேண்டும்,
மக்களுக்கு நன்மை தராத
தன் சுயநலனிற்காகவும்
சுய ஆதாயத்திற்காகவும்
மக்கள் வரிப் பணத்தை
இலாபமாக்கும் அரசியல் வியாபாரங்களை இனிச் செய்ய இயலாது செய்ய வேண்டும்,
நிதி சம்மந்தப்பட்ட எந்த ஒரு முடிவையும், ஒப்பந்தத்தையும் மக்களின் ஆதரவின்றி செய்ய இயலாததாகவும், மக்களை நிதி நெருக்கடியில் ெகாண்டு போய் விடாத தாகவும்
மக்கள் ஆதரவுடனேயே கையெப்பமிடனும்,
அந்த ஒப்பத்தங்கள் மக்களுக்கு வெளிப்படையானதாகவும் இருத்தல் வேண்டும்
அப்படி எல்லாம் இல்லாததனாலும்
மக்கள் அறியாததனாலுமே
தின்று கொளுத்தவர்களுக்கு
*மக்களின் அருமையும், வறுமையும் தெரிவதில்லை*
செருக்குக் கொண்டு பெண்கள் மீது கை வைக்கும் காமக் கொடூரன்களாகவும், வெறியர்களாகவும், குண்டர்களாகவும்
கொள்ளையர்களாகவும்,
திருடர்களாகவும்
படித்திருந்தும் பண்பற்றவர்களாக
வலம் வருகின்றனர்
இவர்கள் இப்படி வளரவும், உருவாகவும்
இவர்களது பணத்திற்கும்,
பதவிக்கும்
இவர்களுக்கு துணை நிற்பது மக்களாகிய நாமே,
நாம் திறுத்தாது,
நாம் திறுந்தது,
இப்படிப்பட்ட தவறுகளை
தடுத்து நிறுத்த முடியாது,
இது போன்றோர்கள் உருவாவதை தடுக்கவும் முடியாது,
சட்டையை பிடிக்க வேண்டிய சட்டமே
எப்படியும் வாழ
கள்ள உறவில் வாழ அனுமதிக்கிறது
எது எதுக்கோ பாதுகாப்பு தருது
மகளுக்கு, மகளிருக்கு பாதுகாப்பில்லையா...???
சுய ஒழுக்க முறையே
மனிதனின்
நமது வாழ்கை முறையை சீர் செய்யும்
நாம் பிறரிடம் எதிர்பார்க்கிறோமே தவிர
*நாம் அறத்தோடு வாழ்கிறோமா..???*
நாம் நமக்கேற்றாற் போலவே வாழப் பழகுகிறோம்
பொய் பேசுகிறோம்,
வஞ்சம் தீர்க்கிறோம்,
லஞ்சம் வாங்குகிறோம்,
லஞ்சம் வாங்கி பஞ்சம் போக்குகிறோம்,
மஞ்சம் பகிர்கிறோம்
அடுத்தவர் மனைவியிடத்து
தரங்கெட்டு
மானங்கெட்டு மஞ்சக் குளிக்கிறோம்,
ஆதலால்
இந்தத் தவறுகளை
எளிதாகப் பழகியதால்
எளிதாய்
சிறுமியை,
பெண்களை
வன்புணர்வு செய்கிறோம்,
படுகொலை செய்கிறோம்,
இப்படிப்பட்ட பாதக செயல்களைச் செய்து
பாவத்தைச் சுமக்கிறோம்,
மனிதராய் பிறவியெடுத்து
மனிதரையே வாழ தகுதியற்றவராய்
மரணிக்க வைக்கிறோம்
பெண் மானம் கெடுத்து
மானங்கெட்டவராய் வாழ்கிறோம்,
பிறந்ததும்,
வாழ்வதும் ஒரு முறை,
இறப்பதும் அவரவர் காலவரையறை,
பிறர் வாழ்வை மானத்தை பறிப்பதும்
பிறரது உரிமையைக் கையில் எடுப்பதும்
பிறரை அடக்கியாள நினைப்பதும் எம்மாதிரியான தரக்குறைவான
தரங்கெட்ட செயல்...???
தமிழா தமிழர் அறம் பழகு
தூய வாழ்வை வாழ விரும்பு
உனக்கான தூய அரசியலையும்
தூய அரசையும் நீயே நிறுவு - தமிழ் தேசிய(தீவிர)வாதி

கருத்துகள்