முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*''திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்"*


Cinar619.blogspot.com

*''திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்"*
 


எவராவது நம்மை ஏளனம் செய்துவிட்டால், `நான் யாரென்று தெரியுமா...?’ என்று வெஞ்சினம் கொள்கிறீர்களா...?, அல்லது, “நம்மை இப்படி இழிவுபடுத்தி விட்டார்களே என்று முடங்கி விடுகிறீர்களா...?” இரண்டுமே திறனாய்வுகளை எதிர்கொள்ளும் சரியான அணுகுமுறையல்ல...
                                                                                                                                                                                                                                            ஆயினும், எதிர்மறையான ஏளனங்களும், நிந்தனைகளும், மனதை காயப்படுத்தும் செயல்கள்கூட வாழ்க்கை முழுவதும் மனதில் வடுவாக சிலருக்கு பதிந்துவிடும். (நிந்தனை- கிண்டல்)

தாழ்வான திறனாய்வுகள் பலரை வாழ்வில் செயல்பட விடாமலேயே தடுத்திருக்கிறது, அவர்களின் திறனாய்வுகளில், கருத்துகளில் பொருள் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை திருத்தி முன்னேற்றம் காணுங்கள்...

பொருளற்ற விமர்சனங்களால், ஏளனம் மற்றும் நிந்தனைகளால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி நிலையற்றது, அது உங்களின் முன்னேற்றத்தால், நீங்கள் பெற்ற சிறப்பால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்...

அது போன்றவர்களின் ஏளனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு பதில்களால் பதிலடி கொடுக்காமல், முன்னேற்றத்தால் அவர்களிடம் மனம் மாற்றம் ஏற்படச் செய்யுங்கள்...

உடல் அமைப்பு, ஆடைத் தோற்றம், பெற்றோரின் நிலை போன்ற பல காரணங்களுக்காக சிலரை புனைப்பெயர் சூட்டி அழைப்பது சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம், அதற்காக கலங்க வேண்டியதில்லை. அவர்களே இன்னும் பண்பட வேண்டியவர்களாவார்கள்...

அப்படிப் பேசுபவர்களிடம் எதிர்த்து விவாதிக்க வேண்டாம். 
சிறு புன்னகையுடன் கண்டுகொள்ளாது கடந்து சென்றாலே அவர்கள் சோர்வடைவார்கள்...

வாழ்க்கை முழுவதுமே இதுபோன்ற திறனாய்வுகள் மற்றும் எதிர் கருத்துகளை எதிர்கொள்ளப் பழகவேண்டும், பொருளார்ந்த சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர் கருத்துகள்தான்...

சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்கவேண்டும். உங்களைப் பற்றிய திறனாய்வுகள்தான் உங்கள் செயல்களின் அறுவடை...

வெறும் பாராட்டுகளால் மட்டும் மனநிறைவு அடைபவர்களைவிட, திறனாய்வை சரியாக எதிர்கொண்டவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டவர்கள் என்றும் வெற்றியாளர்களாக நிலைப்பார்கள்...

எனவே!, புகழ்ச்சிகளில் மயங்க வேண்டாம், திறனாய்வுகளால் முடங்க வேண்டாம்...!


நம்மை எவராவது விமர்சனம் செய்யும்பொழுது அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்தறிய வேண்டும்...

உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தால் அதைக்களைய முன் வரவேண்டும்...

இது இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே செல்தற்கான வழி...

*ஆம் நண்பர்களே...!*

*போட்டியாளர்களும், எதிராளிகளும் தீய எண்ணங்களுடன் உங்களை திறனாய்வு செய்து தீண்டி உணர்த்துபவர்களாக இருப்பார்கள்...(தீண்டி உணர்த்துதல்- சீண்டுதல்)*

*அவர்கள், உங்கள் வளர்ச்சியினால் கோட்பாடற்றுப் போவார்கள்...!*

*ஆனால்!, அதற்கு அவர்களின் வார்த்தைப் பொறியில் சிக்கி, நீங்கள் வாடி, முடங்கிவிடாமல் திறனாய்வுகளை எதிர்கொள்ள வேண்டும்,  அதுதான் வெற்றியின் மறைபொருள்...! (மறைபொருள்- இரகசியம்)*✍🏼

நன்றி...!!!
தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சுப்பையா பட்டுராஜன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...