போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை ஒழித்துவிட முடியாது...?!
எந்தக் காரணத்திற்காக ஊரடங்கு கொண்டுவரப்பட்டதோ…,அதற்கு எதிரான பலன்களைத் தான் அது தந்து கொண்டுள்ளது!
இது நான் எதிர்பார்த்தது தான்!
அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இயற்கைக்கும்,மனித உடலுக்குமான தொடர்பு புரியாத காரணத்தால், தங்கள் சட்டத்தாலும், சர்வாதிகார நடவடிக்கைகளாலும் கொரோனாவை அதிகரித்து வருகிறார்கள்!
இயற்கை வாழ்வியல் அறிஞர்களின் பேச்சும், எழுத்தும் அதிகார வர்க்கத்திற்கு புரியாது.
நிலம் நீர்,காற்று, நெருப்பு,ஆகாயம் ஆகியவற்றின் தொடர்பில் தான் மனித உயிர்கள் ஒவ்வொன்றும் ஜீவித்திருக்கின்றன! இவற்றின் தொடர்பில் இருந்து மனிதகுலம் தன்னை விடுவித்துக் கொள்ளுமானால் அது உடல் நோயுற்று அழிந்துவிடும்.
அதை தான் இந்த ஊரடங்கு சாதித்துக் கொண்டுள்ளது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அவசியமோ அவையெல்லாம் இன்று மறுக்கப்பட்டு வருகிறது.
# சுத்தமான காற்றை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்
# சூரிய ஒளி தினசரி அரைமணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
# திறந்த வெளியில் ஒருவன் நடக்கும் போது தான் ஆகாயவெளியில் உள்ள பிரபஞ்ச சக்திகளின் ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
# உடல் உழைப்பிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால் கூட அந்த உடலில் நோய் தானாகவே வந்து குடியேறிவிடும்.
# மினரல்ஸ் எடுத்து சுத்திகரிக்கப்படாத நல்ல தண்ணீரை குடிக்க வேண்டும்!
# நாலுபேரோடு கலந்து பேசிப் பழகி,இணைந்து வாழும் போது தான் உடலும்,உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
இவற்றையெல்லாம் மறுத்துவிட்டு, நோயை ஒழிக்கப் போகிறோம் என போலீஸ்காரர்களைக் கொண்டு லத்தியை சுழற்றுவதால், கொரானா வைரஸை ஒழித்துவிட முடியாது
.
இங்கே பல பேருக்கு ஒழுங்காக சுவாசிக்கவே தெரியவில்லை! அப்படிப்பட்டவர்களுக்கு முகக் கவசத்தை கட்டாயமாக்கினால் இன்னும் மோசமாகத் தான் போவார்கள்!
ஒரு அரசு மருத்துவமனையில் அரசு முயற்சியில் யோகா பயிற்சி முகக்கவசம் போட்டபடி கற்றுத் தரப்படுகிறது. இதைவிட ஒரு முட்டாள்த் தனம் இருக்க முடியுமா? வெளித்தள்ள வேண்டிய அசுத்தக் காற்றை ஆழமாக இழுத்து உள் தள்ளினால் நோய் தான் வரும்!
’’ஆழ்ந்த சுவாசத்திலேயே கொரானா வைரசை அடித்துவிரட்டலாம்..’’ அப்படின்னு மருந்தியலுக்கு நோபல் பரிசு பெற்ற லூயிஸ் ஜே.இக்னரோ தெரிவித்துள்ளார்.(போட்டோ)
காற்றை ஆழ்ந்து சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு செல்லும்.அப்போது அங்கு உருவாகும் நைட்ரிக் ஆக்சைட் கொரானா வைரஸை அழித்து வெளியே தள்ளிவிடும் என்கிறார் இக்னரோ!
ஒவ்வொருத்தர் உடலுக்குள்ளும் கெட்ட வைரஸ்களை தானாகவே எதிர்க்கும் ஒரு Autoimmune power உள்ளது! நோய் வந்தால் அது தானாகவே அதிகரிக்கும். இதை மருத்துவ உலகம் நன்கறியும். இதைக் கொண்டு தான் பிளாஸ்மா சிகிச்சையே கூட வடிவமைக்கப்பட்டது!
தன் உடலில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்றத் தெரியாத மனிதனை நோய்கள் தேடி வந்து அணைத்துக் கொள்ளும். எத்தனை பேர் தினசரி இரண்டு முறை கக்கூஸ் சென்று முழுமையாக கழிவை வெளியேற்றுகிறீர்கள்! மைதாவில் தயாரான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இது சாத்தியமே இல்லை!
தன் உடலையும், சூழலையும், ஆரோக்கியமாகவும், சுதந்திரமாகவும் வைக்க வாய்ப்பு மறுக்கப்படும் சமூகத்தால் எப்படி நோயை விரட்டி அடிக்கமுடியும்?
ஆக,மேலும்,மேலும்,ஊரடங்கை அதிகரித்துக் கொண்டே செல்வதன் மூலம் மேலும்,மேலும் கொரானாவை அதிகரிக்கத் தான் போகிறீர்கள்!
மேலும் ஒன்றை உறுதி செய்யப்பட்ட உளவியல் அடிப்படையில் கூறுகிறேன். நன்மையோ,தீமையோ… நீங்கள் எதில் உங்கள் கவனத்தை குவிமையப்படுத்துகிறீர்களோ..அதை நீங்கள் பெரிதும் வளர்த்து எடுக்கிறீர்கள் என்று பொருள்!
இங்கு அது தான் நடந்து கொண்டுள்ளது. உலகில் எந்த சமாச்சாரமும் முக்கியமில்லை – கொரானாவைத் தவிர்த்து என்ற அளவுக்கு அதையே,பேசி, எழுதி,விவாதித்து,அதற்கான சூழலை உருவாக்கி, அதை பன்மடங்கு பெருக்கியே தீர்வதென்று அதிகாரவர்க்கம் முடிவெடுத்துவிட்டால் நாம் கேள்வி கேட்கத் தான் முடியுமா?
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்த மாற்று சிந்தனைக்கு மதிப்பளிப்பீர்கள்! பார்ப்போம்
கருத்துகள்