.
..சுகமும்,, சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை....!!!?
- வாழ்க்கையில் வெற்றி பெற எல்லோருமே விரும்புகின்றோம். அதற்கு என்ன வழி? சாதித்துக் காட்ட வேண்டும்.
- சாதிக்க முடியுமா? நிச்சயம் முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உழைப்புக்கு உண்டு.
- *நாம் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை நமக்குத் தேவையானவற்றை மறைத்தே வைத்து இருக்கிறது.*
- உண்பதற்கான உணவை மண்ணுக்குள் மறைத்து வைத்து இருக்கிறது. உடுப்பதற்கு ஆடையாக கொடுக்காமல் நெய்து தயாரிக்கப் பஞ்சு கொடுத்து இருக்கிறது.
- வசிப்பதற்கு அப்படியே வீடாக படைக்காமல் கட்டிக் கொள்ள கல்லையும், மண்ணையும் படைத்து இருக்கிறது.
- பிற செல்வங்களை சேமிக்கலாம். ஆனால் *உழைப்புச் செல்வத்தை சேமிக்க முடியாது.* இன்றைய வருமானத்தை நாளை செலவழித்துக் கொள்ளலாம்.
- ஆனால், *இன்றைக்கு பயன்படுத்த வேண்டிய உழைப்பை நாளைக்கு பயன்படுத்த முடியாது.*
- அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது. சேமிக்க முடியாத உழைப்பை சிறந்த வழியில் மூலதனமாக்க வேண்டும்.
- *உழைப்பில் ஒரு சுகம் உண்டு. ஈடுபாட்டோடு உழைத்தால் அதில் சுகம் இருக்கும்.*
கடனே என்று உழைத்தால் சுமை மட்டும் தான் தெரியும்.
- ‘தம்பி, ஜாதகம் பார்க்கிற பைத்தியம் எனக்கு கட்டோடு பிடிக்காது..''.காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து எத்தனையோ இடத்தில் அடிபட்டு மிதிபட்டு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பினால்தான்.
- ஆனால் ஜோசியரிடம் போய் கேட்டால், ஏதோ செவ்வாய், சுக்கிரன், சூரியன்தான் காரணம் என்று சொல்வார். இதை எப்படி சகித்துக் கொள்வது’ என்றாராம்..
- ஆசையோடு குழந்தையை அள்ளி எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள்.
- Cinar619.blogspot.com
சுகமும்,, சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை. ஈடுபாட்டில் இருக்கிறது.
- *உழைப்புதான் உண்மையான அதிர்ஷ்டம். காலையில் கண் விழித்ததும் ராசி பலன் பார்த்து அதன்படி செயல்படக் கூடாது.*
- வெற்றி பெற முடியாமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
- *ஆனால் வெற்றி பெறுவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் உண்டு. அது தான் உழைப்பு.*
கருத்துகள்