முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீர் மேலாண்மை

💧💦💧💦💧💦💧💦
நீர் மேலாண்மை:-

(பெரிய பதிவு என்று படிக்காமல் இருக்காதீர்கள்)


UK (இங்கிலாந்து என்று சிலர் ஒட்டு மொத்தமாக சொல்வர்)  என்று சொன்னவுடன் லண்டன் என்று பலருக்கு நினைவுக்கு வந்தாலும் இங்கு வந்து சென்றவர்களுக்கு நினைவில் நிற்பது இந்த ஊரின் பசுமை.  மீண்டும்.மீண்டும் அதை புகழ்வார்கள். மேலும் இங்கு மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீர் அவர்களை வியக்க வைக்கும்.
இதன் காரணம் இங்கு இடைவிடாமல் மழை பொழிவதாக நம்பி செல்வார்கள்.
“கொடுத்து வச்சவங்க சார்”...இந்த ஊர்காரங்க என்று சொல்லி செல்வார்கள்.
நம் மாநிலத்த்தின் அளவே மக்கள் தொகை கொண்ட
நம்மை விட பெரிய நிலப்பரப்பு
நம்மை விட குறைந்த அளவு மழை வளம்......ஆமாம் குறைந்த அளவு நீர் வளம்  கொண்ட ஒரு இடம்  UK.
நம் மாநிலத்தை விட பசுமையாக இருப்பது எப்படி?
அங்கு மக்கள் தண்ணீருக்கு ராவும் பகலும் குடத்தை தூக்கி கொண்டு அலைந்து கஷ்டப்படாமல் 24 மணிநேரமும் சிறப்பாக வாழ்வதெப்படி ?????   கேள்விகள்...கேள்விகள்
உண்மை என்ன ?

சில விவரங்களை பார்ப்போம்.

UK மக்கள் தொகை :  6.5 கோடிகள்  (65.65 மில்லியன் – 2016)
தமிழகத்தின் மக்கள் தொகை     6.7 கோடிகள்  (67.86  MILLION  - 2012)
UK யின் நிலப்பரப்பு                      2,42,426 KM  2
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு          1,30,000 SQR KM
UK யின் வருட மழை பொழிவு     885 mml
TN ன் வருட மழை பொழிவு          945 mml (சுமார் 10% அதிகம்)

இதை தாண்டி இவர்களுக்கு நம்மூரை போல் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் காவிரி போன்ற ஆறுகளும் கிடையாது. முல்லை பெரியார் அணைக்கட்டிலிருந்து நீர் வரத்தும் கிடையாது. நான் மேலே சொன்ன கணக்கில் இந்த நதி நீர்வளங்களை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பெருநதிகள் இல்லாமல் போவதால் இவர்களிடம் பெரும் அணைக்கட்டுகளும் கிடையாது. அது தனிகதை.
இப்படி இருக்க நம் மாநிலம் மட்டும் குடிக்க தண்ணீர் பஞ்சம் என்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் புலம்பும் நிலை ஏன்?
சிறப்பான நீர் மேலாண்மை இல்லாததுதான். 
சிறப்பான திட்டமிடலும் நீர் பகிர்வும்தான் காரணம்.
இந்த பிரச்சனையின் பல பக்கங்களில் ஒரு சிறு பகுதியை பார்க்கலாம்.
இங்கு சிறு வாய்க்கால்கள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. ஏரிகள் ஆக்கிரமிக்கப் படுவதில்லை.
புதிய ஏரிகள் உருவாக்கப்படுகின்றன.
நீர் வளத்தை சுத்திகரித்து பகிர்வதில் தனியார்கள் இருந்தாலும் அவை அரசால் உள்ளூர் நகராட்சிகளால் வெகு சிறப்பாக கண்காணிக்கப் படுகிறது.
எந்த கழிவு நீரும் ஆற்றிலோ வாய்கால்களிலோ விடப்படுவதில்லை. முழுவதும் சுத்திகரிக்கப் பட்டு மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப் படுகிறது.
இங்கு தனியார் யாரும் வீட்டு உபயோகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ ஆழ்துளை கிணறு தோண்ட முடியாது. அரசிடம் கேட்டு அவர்கள் மூலமாக குழாய் மூலம் தண்ணீர் பெற்றே பயன்படுத்த முடியும்.  அதனால்தான் இந்த நாட்டில் பல இடங்களில் வெறும் 10 அடியில் நீர் பெருக்கெடுக்கும்.
ஒரு வீடோ, அலுவலகமோ, தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு வழி ஆகியவற்றை செய்யாமல் இயங்கவே முடியாது. இது நகரபுரமோ, கிராமபுறமோ எங்கிருந்தாலும் ஒரே சட்டம்தான்.  இதை மீறுபவர்கள் கடுமையாக விரைந்து தண்டிக்கப் படுகிறார்கள். அதற்கான சட்டங்கள் உண்டு. இப்படி செய்பவர்க’ளை எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சமுதாயம் புறக்கணித்து அவமதிக்கிறது. எனவே யாரும் செய்ய துணிவதில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எந்த ஒரு குடியிருப்போ, தொழில்சாலையோ அமையவே முடியாது.
பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்..இங்கிலாந்தில் எந்த ஒரு வீட்டிலும் தண்ணீர் மேலேற்றும் “பம்பு”களோ “மோட்டார்” களோ கிடையாது. நீங்கள் முதல் மாடியில் இருந்தாலும் மூணாவது மாடியில் இருந்தாலும் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் அளிக்க வேண்டியது அந்த நகராட்சியின் கடமை.  இன்றுவரை அதை தவறாமல் செய்கிறார்கள். 3 மாடிக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு அதற்கான சிறப்பு வசதிகளை செய்து விட்டுத்தான் அனுமதியே கிடைக்கிறது. அத்தகைய கட்டிடங்களும் குறைவு.
இங்கு தண்ணீர் அசுத்தப்படுத்துவதை பெரும் குற்றமாக பார்க்கின்றனர். சிறு கால்வாய்களின் அவசியமும் அவைஎப்படி இயற்கையுடன் ஒத்து இருத்தல் அவசியத்தையும் மிக கவனமாக உணர்ந்து செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் தெள்ளிய நீரோடை பாய்வதை நீங்கள் காணலாம். இங்கு யாரும் வாய்கால்களில் சோப்பு போட்டு குளிக்கவோ, துணி தோய்க்கவோ தடை செய்யப்படுகிறது.
நீரில் மீன்களின் அவசியத்தை உணர்ந்து அவைகளின் வகைகளும்  எண்ணிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். மீன் இவர்களின் சிறப்பு உணவாக இருந்தாலும் கண்ட இடத்தில் பிடித்து கண்ட இடத்தில் விற்க முடியாது. மேலும் மரங்களை வளர்ப்பதில் தனி கவனம் கொள்கின்றனர். தோட்டங்களை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். தனி கவனம் செலுத்தி தன் தோட்டங்கள் சிறப்பாக இருக்க முயல்கின்றனர். இந்த தொட்டக்க்லையை கொண்டு ஒரு பெரிய வியாபரமே உருவாகியுள்ளது. ஊர் அழகாக இருக்க நகரத்தில் இல்லாவிட்டாலும் கிராமங்களில் மக்கள் தங்கள் ஒய்வு நேரத்தை இலவசமாக செலவழிக்கின்றனர். அப்படி செய்பவர்களை அந்த ஊர் மதிக்கிறது பைத்தியக்காரன் என்று சொல்வதில்லை.
சரி...இப்படிப்பட்ட ஊரில் “கெமிகல்” தொழிற்சாலைகளே இல்லையா என்றால் அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உண்டு என்பதுதான் உண்மை. மிகப்பெரிய ICI தொழிற்கூடங்கள் உண்டு. கோகோ கோலா, பெப்சி போன்ற தொழிற்கூடங்களும் உண்டு. ஆனால் அவைகளில் இருந்து வரும் கழிவு நீர்களின் தன்மை மிகக்கடுமையாக கவனிக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் வெளியே வருவதே இல்லை. அவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கட்டுமானங்கள் செய்யாவிட்டால் அந்த ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப் படுவதேயில்லை.
பொது மக்கள் இந்த விஷயத்தில் ஓரளவு அறிவுடன்தான் இருக்கிறார்கள் அரசு நீர் பங்களிப்பை சிறப்பாக பராமரிக்கிறது. . மாசுக்கட்டுப்பாட்டு துறை லஞ்ச ஊழலுக்கு போகாமல் சமுதாய உணர்வுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லோரும் சேர்ந்து ஒழுங்காக தேரை இழுக்கிறார்கள். பலன் கிடைக்கிறது.
இப்போது சொல்லுங்கள் நாம் எங்கிருக்கிறோம்.?
நாம் எங்கு செல்ல வேண்டும்?
💦💧💦💧💦💧💦💧


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

பிச்சை போடுவது கூட சுயநலமே...,

Subbiahpatturajan பிச்சை போடுவது கூட சுயநலமே..., வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" " 👌👌👌👌👌👌👌 நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள