Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...
Subbiahpatturajan
*பணமே* உனக்குத் தான் எத்தனைப் *பெயர்கள்* !...
அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்...
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்...
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...
கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்...
திருமணத்தில் வரதட்சணை என்றும்...
திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்...
விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்...
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
தர்மம் என்றும்...
நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்...
திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்...
திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் அது
கடன் என்றும்...
அன்பளிப்பு என்றும்...
விரும்பிக் கொடுத்தால்
நன்கொடை என்றும்...
நீதிமன்றத்தில் செலுத்தினால்
அபராதம் என்றும்...
அரசுக்குச் செலுத்தினால்
வரி என்றும்...
அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்...
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்...
தினமும் கிடைப்பது கூலி என்றும்...
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்...
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
லஞ்சம் என்றும்...
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
அசல் என்றும்...
வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்...
தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்...
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்...
குருவிற்குக் கொடுக்கும் போது
குருதட்சணை என்றும்...
ஹோட்டலில் நல்குவது
டிப்ஸ் என்றும்...
இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக
வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...
சிலர் அன்பை இழக்கின்றனர்...
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்...
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்... *பணமே மனிதனை மனமே இல்லாமல் செய்துவிட்டாயே*.
கருத்துகள்