முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க., அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦

Subbiahpatturajan

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க.,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா...🤔🙆🤦



சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.! 

அப்போ அதைபத்தி இங்க இருந்த யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄

அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட 
🔥நேர்மை, 
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄

இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி

அங்குள்ள அவங்க மக்களிடம் எடுத்து சொல்லுறாங்க. இது நல்லாவே வசதியா கை கொடுத்ததுன்னே சொல்லலாம்.!

இதனால தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் பல குடும்பங்களாக பெருகியது.! தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் கூட ஒரு அடகுக்கடை அவர்களால் திறக்க முடிந்தது.!

இதோட அடுத்த கட்டம், குஜராத் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் அந்த மக்கள் வர ஆரம்பித்தார்கள்.!

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க.,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களுக்கு, அப்புறம் சில்லரை வணிகத்திற்கு என கடன் வழங்க ஆரம்பிச்சாங்க.!

"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" வழக்கம்போல இவர்களையும் வாழவைத்தது..!
அதுவும் சிறப்பாகவும் அமோகமாகவும்..!

இதனால பல தமிழக கிராமங்களில் ஊருக்குள்ள ஒரு அடகு கடையும் அதை ஒட்டிய மாதிரியே சின்னதா ஒரு ஜவுளி கடையும் ன்னு சின்னதா கிளை பரப்ப ஆரம்பிச்சு இருந்தாங்க..!

'குறிப்பாக கடன் வாங்குவதற்கு அடுத்தன் கிட்ட போய் கை கட்டி நிற்பதற்கு பதிலா, வீட்ல இருக்கிற பெரிய பாத்திரங்கள், சின்ன நகைகள்
இப்படி ஏதாவது ஒன்றை கொண்டுபோய்க் கொடுத்து, பேப்பர்ல ஒரு நாலு கையெழுத்து போட்டா போதும் மிக எளிதாக பணம் கிடைச்சுடும்.'
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாங்க.!😊

இன்னொன்னு,
காந்திஜீ சொன்ன 
" வாடிக்கையாளரே நமது தெய்வம்" என்பதற்கு ஏற்ப அவங்க கடன் வாங்க வர்றவங்களை நல்ல முறையில் நடத்தினார்கள்..! அப்புறம்

'நம்மில்,
நிம்மள்,
நான் சொல்லுது,
தர்றான்,
ஆவறது இல்லே'

இப்படியே இவங்க பேசுன தமிழும்.
இதைக்கேட்டு நம்ம மக்கள் அப்படியே பூளாங்கிதம்,

அடைஞ்சு,நீட்டின பேப்பருல எல்லாம் கையெழுத்து போட்டு காசை மட்டும் வாங்கிட்டு வந்தாங்க.!

பண்டிகை காலங்களில் எல்லாம், கைல காசு இல்லைன்னா,
வீடுகளில் இருந்த பெரியசெப்புப் பாத்திரங்களான அண்டா குடம், மோதிரம் இதெல்லாமே அவங்கிட்ட அடகுக்கு போகும்.அந்த காசுல பக்கத்திலேயே அவங்க சின்னதா,

திறந்து வச்சிருக்கிற ஜவுளிக்கடையில் அப்படியே புது துணிமணிகளையும் எடுத்துட்டு வந்துருவாங்க..!

" இது நல்ல பிசினஸ் மாடலாக இருக்குல்ல..!" 

இந்த பிசினஸ் வெற்றியடைய இவங்க பின்பற்றக்கூடிய ஒரே விஷயம் 
"யாருக்கும் அடமானம் இல்லாம கடன் குடுக்க கூடாது என்பது தான்..!"

உதாரணமாக
ஒரு புது பித்தளை குடத்தோட மார்க்கெட் ரேட் 200 ன்னா (அப்போ அந்த ரேட்டு தான்) இவங்க பழசுங்கறதுனால 50-60% ரேட் பிக்ஸ் பண்ணுவாங்க. அதாவது 100-120 க்குள்ள. அதுல பாதி தான் கடன் குடுப்பாங்க.(55 - 60) ரொம்ப பேசி வச்சு கேட்டுப்பார்த்தா ஒரு எக்ஸ்ட்ரா 5% தருவாங்க.! (55+2.25 - 60+3)

இதுக்கு மேல ஒரு இம்மி பைசா கூட நாம் எதிர்பார்க்க முடியாது..!
இதுல அடுத்தடுத்து ஒரு மூணு மாசம் நம்மளால வட்டி கட்ட முடியலன்ன, பெருசா எல்லாம் நம்ம கிட்ட வந்து சண்டை போட மாட்டாங்க. அவங்க எப்பவுமே நல்லா தமிழ் , ஹிந்தி பேசத் தெரிஞ்ச ஒரு பையன வேலைக்கு வச்சிருப்பாங்க.

அவன் வட்டி கட்டாத ஒவ்வொரு மாசமும் வந்து ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போயிடுவான். 
நமக்குத்தான் மானம் பெருசாச்சே..!
வட்டி கேட்டு தெரு வாசல்ல நின்னுகிட்டே அசிங்கமாக கத்துற கடன்காரங்க மத்தியில இது எவ்வளவோ தேவலை என்னு நம்மளும் கையெழுத்து போட்டு கொடுத்திருப்போம்..!🙄

அவ்வளவு தான். மூணு மாசம் வட்டி கட்டலன்னா நாலாவது மாசம் அந்த அடமானம் வச்ச பொருள் அங்களுக்கு சொந்தமாகிவிடும்..!
இப்படி அவங்க கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு சம்பாதிச்சு சேர்த்த சொத்து ரொம்ப பெருசு.!
இப்படியே படிப்படியா டெவலப் ஆகி பிறகு அவங்க பெரிய நிறுவனங்கள் திரைப் படங்கள்

என அவங்க பைனான்ஸ் பண்ற சர்க்கிள் ரொம்ப பெருசாக்கி கிடுச்சு..! இன்னைக்கு தமிழ்நாட்டுல நிறைய நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், 
முதலீட்டாளர்கள், 
தொழில் பண்றவங்கன்னு நிறைய பேர் அவங்க கிட்ட தான் கடன் வாங்கி இருக்காங்க.! நிறைய நிறுவனங்களில் அவங்க சைலன்ட் பார்ட்னர் ஆகவும் இருக்காங்க..!🙄

இதுல ஒரு விஷயம் என்னன்னா, நிறைய தமிழ் படங்களில்,
🔥இவங்கள ஒரு அப்பாவி மாதிரியும்,
🔥தமிழ் சரியா பேச வராத மாதிரியும், 
🔥 மத்தவங்க இவங்க கிட்ட போலியான நகைகளை அடகு வச்சுட்டு ஏமாத்துற மாதிரியும்,
🔥கடனுக்கான வட்டி கேட்டு வர்ற இவங்கள கலாய்க்கிற மாதிரியும்,
🔥காமெடி பண்ற மாதிரியும்,

இது மாதிரியான காட்சிப்படுத்துதல் எல்லாம் இவங்க பைனான்ஸ் பண்ற படங்கள்ல திட்டமிட்டே புகுத்தப்பட்டிருக்கும்..!

உண்மை இதற்கு நேர் மாறானது😂 இவங்களுக்கு நல்லா தமிழ் தெரியும், எழுதவும் பேசுவும்,
நல்ல விபரமானவங்க,
அவ்வளவு சாமானியமா எல்லாம் ஏமாற்றவும் முடியாது..!🤔



மார்வாடியைப் போல பணக்கார வியாபாரியாக என்ன வழி என்று கேட்கையில் ஒரு மார்வாடியே இதை நகைச்சுவையாய் சொல்கிறார்: “ஒரு மார்வாடியின் மகளை கட்டிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை பணக்கார வியாபாரியாக மாற்றிக் காட்டுவார்கள்”


இன்றைக்கு அதிகப்படியான தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்கள் (Gold Loan Companies)உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.!
இதுக்கெல்லாம் விதை இவங்க போட்டது தான்.
எல்லாம் சரி,யார் இவங்க.!😊

தற்போது போப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தொழில்கள் இல்லை எனச் சொல்லலாம். ஏழாவது தலைமுறை காணும் பிர்லாவை அமெரிக்காவின் போர்ட் அல்லது ராக்பெல்லருடன் ஒப்பிடலாம்

இந்தியாவின் உள் நாட்டு வணிகம் முழுவதையும் மார்வாடிகள் எப்படி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் 

ஒரு புதிய பொருளை மிக விரைவில் அது பற்றி தெரிந்து கொண்டு அதை வாங்கி, விற்று வணிகம் நடத்தும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது நிஜமாகவே ரஸ்க் தின்பது போலதான் எனத் தோன்றுகிறது. தந்தி வராத காலத்தில் புறாக்களை வைத்தும், தந்திகளை முதலில் பயன்படுத்தியும், திருட்டுத்தனமாக ரேடியோ கருவிகளை வைத்துக் கொண்டும், லண்டன் பங்குச் சந்தை விலை முதல் உள்ளூர் விலை வரை எல்லாவற்றையும் எப்படி வேகமாக அறியத் துடித்தார்கள் என்று படித்தபோது வியப்பாக இருந்தது.

சேத்தின் வியாபார நிர்வாக வழிமுறைகள் அலாதியானவை. ‘கடி’ என்ற பஞ்சு மெத்தைதான் சேத்தின் அலுவலகம். முனிம் என்கிற கணக்கர்தான் கணக்குகள் எழுதுவார். உள் அறையில் சரக்குகள் இருக்கும். பின் கட்டில் பிராமணர்கள் சமைப்பார்கள்.



புதிதாக வரும் மார்வாடி இளைஞர்களுக்கு அங்கேயே தங்கி, வேலை செய்யும் வசதி செய்து தரப்படுகிறது. முதலில் ஹுண்டி எனும் கணக்கியல் பயிற்சி. பின் சரக்கு பரிமாற்றம். பிறகு ஏதாவது ஒரு கிளையில் வேலை. தனியாக தொழில் செய்ய நினைத்தால் நிதிதாரராக அல்லது பங்குதாரராக சேத்தே உதவி செய்வார்.

முதலாளியின் உள்ளுணர்வு எல்லா முடிவுகளுக்கும் காரணி. நம்பிக்கைதான் வியாபார மந்திரம். கூடி வாழ்தல்தான் பிழைக்கும் வழி என எத்தகைய போட்டி என்றாலும் கூடியே வாழ்தல். எல்லா கணக்கும் அன்றன்றே பைசல் செய்தல். போட்டியாளர், பகையாளி என யாராக இருந்தாலும் கடன் கொடுத்தும் வாங்கியும் தொழில் நடத்துதல் என பிரம்மிக்க வைக்கும் வழிமுறைகள்.

இவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கும் கடன் வழங்கியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்துக்கும் நிதி வழங்கி யிருக்கிறார்கள். தொழிலில் வரிகள் நெருக்கடி, வெள்ளையரின் சூழ்ச்சி என வரும்போதெல்லாம் பணத்தை நிலத்தில் போட்டு நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். எந்த புதிய தொழில் வந்தாலும் ஒரு கை பார்த்தார்கள். பிட்ஸ் பிலானி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என அமைத்து கல்வி அமைப்பிலும் கால் பதித்துவிட்டார்கள்...!

இந்தியாவில் பிராமணசமுகத்திற்கு பிறகு அதிகார வர்க்கத்தில் இப்போது இருப்பது மார்வாடிசமுகத்தினரே

முக்கிய அறிவிப்பு:

நாட்டுமக்களால் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் நம் நாட்டின் பிரதமர் மார்வாடி சமூகத்தில் பிறந்தவரே....🙆🤔


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

செம்பருத்தி என்றால் என்ன அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Subbiahpatturajan   அழகுக்கு மட்டுமல்ல; மருத்துவக் குணத்துக்கும் செம்பருத்தி சொந்தக்காரி!  தமிழ் இலக்கியத்தில் செம்பரத்தை இலக்கியங்களில் உருவகப்படுத்தப்படும் நீண்ட, கருமையான கூந்தலுக்கான அடிப்படைக் காரணங்களுள் செம்பருத்தியும் ஒன்று. செம்பருத்தி என்று ஏன் அழைக்கிறோம்   சப்பாத்துச் செடி , ஜபம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.  செம்மை நிறத்தில் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர்.  ‘செம்பருத்தி’ என்பதற்குப் பருத்திச் செடியின் வகை என்பதை நினைவில் கொள்க செம்பருத்தி அடையாளம்:  பசுமை குன்றாத புதர்ச்செடி அல்லது சிறுமர வகையைச் சேர்ந்தது.  செம்பருத்திப் பூவின் தோற்றம் இதய வடிவத்தில் நீண்டிருக்கும் இலைகளின் விளிம்பில் காணப்படும் வெட்டுப்பற்கள் இலைகளுக்கு அழகு.  செம்பருத்தியின் ஆங்கில பெயர் செம்பரத்தையின் தாவரவியல்  பெயர் ‘ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்’ (Hibiscus rosa-sinensis). ‘மால்வேசியே’ (Malvaceae) குடும்பத்திற்குள் அடங்கும்.  குவர்செடின் (Quercetin), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), கேம்பெரால் -3- சைலோசைல் குளுக்கோசைட் (Kaemperol – 3 – xylosyl glucoside), ஸ்டெர்கூலிக் அமிலம் (Sterculic

இந்தியாவில் தங்கம் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

Subbiahpatturajan இந்தியாவில் தங்கவிலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? தங்கம் அனேகமாக வெளிநாடுகளில் இருந்தே அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் அந்த அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே புல்லியன் டீலர்ஸ் அல்லது புல்லியன் டிரேடர்ஸுக்கு விற்கப்படுகிறதுஇது அன்றன்றே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தங்கம் விலை வெளிநாட்டில் உள்ள டாலர் அல்லது பவுண்ட் மதிப்பை வைத்து இதர செலவுகளையும் வைத்துக் கணக்கிடப்படுகிறது.பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கேற்ப, அன்றைய தேவைக்கேற்ப தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் எந்தநாட்டிலிருந்து வாங்கப்படுகிறதோ, அந்த நாட்டின் விலை, கஸ்டம்ஸ் டியூட்டி, மற்ற பிற செலவுகள் சேர்த்து இந்தியன் புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) எனப்படுகிற இந்திய தங்க வியாபாரிகள் அமைப்புக்கு விற்கப்படுகிறது. அது மும்பையை சேர்ந்த ஓர் அமைப்பு.அன்று பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கும் வாங்கும் அளவுக்கும் அன்றைய தேவைக்கும் ஏற்பவே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவை 6 கூட்டுத் தேவைகளுக்கு ஏற்பவே நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவை...அன்றைய சர்வதேச

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

வெள்ளை படுதல் பால்வினை நோய் உள்ளவர்களுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்...!!!

Subbiahpatturajan✍🏻  சங்குப்பூ,.. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. *சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.  சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். எப்படி கண்டுபிடிக்க  சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையானகூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும்  உடையது* நிறங்கள் *சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும்

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

நம்மை வாழ வைக்கும் இறைவனின் இருப்பிடத்தை நாம் வளர்த்து பாதுகாத்தால், நம் சந்ததிகள் நலமாக வாழும்

Subbiahpatturajan உழவாரப் பணியின் 10 முக்கிய வேலைகள் இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்*. பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*   *நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்* *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர். இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*  *எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி. சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்* உழவாரப் பணி என்றால் என்ன? *சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்* உழவாரப்பணி *1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது* *2. பக்தர

கரிச்சான் குருவி னா... அட...நம்ம ரெட்டைவால் குருவி.

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், இரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்