வீரப்பனும் - விலகாத மர்மங்களும்....

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

India Pakistan conflict latest news May 2025

Subbiahpatturajan India-Pakistan War 2025: Operation Sindoor and the Escalating Crisis Background Tensions between India and Pakistan, long-standing rivals and nuclear-armed neighbors, have erupted into the most severe conflict in over two decades. The immediate trigger was a deadly attack in April 2025 on Indian tourists in Kashmir, which India blamed on Pakistan-based militant groups-a claim Islamabad denies. Operation Sindoor: The Strikes Begin In the early hours of May 7, 2025, India launched "Operation Sindoor," a series of coordinated missile and air strikes targeting nine sites in Pakistan and Pakistan-administered Kashmir. Indian officials described these as "terrorist infrastructure" linked to Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. The operation lasted about 25 minutes and involved advanced fighter jets such as the Rafale, equipped with precision-guided munitions. Pakistan’s Response and Civilian Impact Pakistan condemned the strikes as unprovoked aggression...

வீரப்பனும் - விலகாத மர்மங்களும்....

Subbiahpatturajan





வீரப்பனும் - விலகாத மர்மங்களும்:
      

மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான், பழிவாங்குவான், நேர்மையற்ற செயலை செய்வான், யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான், யானையைக் கொடுமைப்படுத்தி பணம் காண்பான். மனிதனைப்போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை.

இதைக் கூறியவர் வேறு யாருமல்ல, யானைகளைக்கொன்று தந்தங்களைக் கடத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட கூசு முனிசாமி என்ற வீரப்பன் தான்.

மேட்டூர், சத்தியமங்கலம் மலைகளையும், காடுகளையும் கட்டிக்காத்த காவல்காரன்,
விலங்குகளுடனும், பறவைகளுடனும், பாம்புகளுடனும் காட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழ்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை தனது ராஜாங்கமாக்கி, எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம் கொண்டு, தமிழ்நாடு,கர்நாடகா, என இரண்டு மாநில காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி 34 வருடங்களுக்கு மேல் சத்தியமங்கலம் காட்டை ஆண்டு வந்த "காட்டுச்சிங்கம்"...!
இன்று வரை பெரும் சவலாக இருந்து வரும் "காவேரி பிரச்சனையைக்" கூட ஒற்றை ஆளாய் இருந்து சமாளித்து , "வந்து பார்" என்றவர்..!
யானை தந்தங்களை கடத்தியதாகவும், சந்தன மரங்களை கடத்தியதாகவும், 184க்கும் மேற்பட்ட கொலை செய்ததாகவும் இவர் மீது பதியப்பட்ட வழக்குகள் ஏராளம். (அதில் பெரும்பாலும் பொய் வழக்குகளே)

அரசும் சரி, காவல்துறையும் சரி, ஊடகங்களும் சரி, வீரப்பனை ஒரு வில்லனைப் போன்று தான் சித்தரித்தன. நிச்சயமாக அவரை எதிர்மறையாகத்தான் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் உண்மையென்னவென்றால்,
"ஊடகங்கள் முன் அவன் கடத்தல்காரன்,
மக்கள் முன் அவன் காவல்காரன்". போராளி.

வீரப்பன் இருந்த காட்டிற்கு அருகே வசிக்கும் மக்கள் வீரப்பனை காவல்தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள்.
இருப்பவனிடம் இருந்து பொருட்களை எடுத்து, இல்லாத ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியவர்.

சட்டம் அவரை கொலையாளி என்று சொன்னாலும், ஊர் மக்கள் அவரை "கொடையாளி" என்று தான் சொல்லுகிறார்கள்.

பீடி, சிகரட், மது என எந்தப்பழக்கமும் இல்லாதவர்.தனி மனித ஒழுக்கத்திலும் தூய்மையானவர்.

#அவன்_இருக்கும்போது:

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலே ஒரு கன்னட காக்கை கூட பறக்க முடியாது

அவன் இருக்கும்போது, கர்நாடகவில் இருந்து காவேரி ஆற்றங்கரைப் பக்கம் குளிக்கக்கூட யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை..!

தமிழகத்தில் கால் வைக்க வாட்டாள் நாகராஜுக்கு கூட தைரியம் வந்திருக்காது..

அவன் இருந்திருந்தால், ஒகேனக்கல் நீர் பிரச்சனை இங்கு வந்திருக்காது.
இப்போது இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை வீரப்பனுக்கு முன், வீரப்பனுக்கு பின் என்று பிரித்துவிடலாம்.
அந்த அளவிற்கு மலைகளின் வளத்தையும், காடுகளின் வளத்தையும் கட்டிக் காத்தவன்.

இப்போதெல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன. வீரப்பன் இருக்கும்வரை ரியல் எஸ்டேட் முதலைகள் இங்கு முதலீடு செய்யத் தயங்கின. அப்போதெல்லாம் காடுகள் - காடுகளாகவே இருந்தன. ஆனால் அவன் இல்லாதபோது தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் தான் உள்ளது.

#தேடுதல்_வேட்டை:

ஜெயலலிதா அரசும், கருணாநிதி அரசும் வீரப்பனைத் தேடிப்பிடிப்பதில் ஆர்வமாக இருந்தார்களா? இல்லையா? என்பதெல்லாம் அடுத்தபட்சம்.. இனால், வீரப்பனுக்கும், பல அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பது உண்மையே.!

இதை நான் கூறவில்லை, ஐயா.பழநெடுமாறன் அவர்கள் கூறியது. அவரிடம் யார் சொன்னது என்றெல்லாம் கேட்கவேண்டாம். பழநெடுமாறன் அவர்கள் வீரப்பனை சந்திக்க சென்றபோது வீரப்பனே அவரிடம் சொன்னது தான் இது.!

தமிழ்நாடு, கர்நாடகா என இரு மாநில அதிரடிப்படைகளும் சேர்ந்து "வன அரசனாக" விளங்கிய வீரப்பனை பிடிக்க கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தேடுதல் வேட்டையை நடத்தின.

ஆனால் அவரைத் தொட முடியவில்லை.இவ்வளவு ஏன்? கிட்டே நெருங்கக்கூட முடியவில்லை எனலாம்.

வீரப்பனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 5கோடி சன்மானம் என அறிவித்தும் கூட, ம்..ஹும்.. பருப்பு வேகவில்லை...

"வீரப்பன் தேடுதல் வேட்டை" என்ற பெயரில் அவரது கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி மலைவாழ் மக்களை அதிரடிப்படையினர் அடித்து துன்புறுத்தினர். நாசமாக்கினர். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை மீது ஊர் மக்கள் அளித்த புகார்களும் நிராகரிக்கப்படன.

தமிழக வனத்துறை வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகிப் போன "வாச்சாத்தி பலாத்கார சம்பவமும்" இந்த கால கட்டத்தில் தான் நிகழ்ந்தது.

#மரணமும்_மர்மங்களும்:

தமிழினம் வீழ்ச்சியுற்றதற்கான வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால், "துரோகம், சூழ்ச்சி" என்ற வார்த்தைகளுக்கு அதில் பெரும் பங்கு இருக்கும்..

18.10.2004 அன்று (ஜெயலலிதா ஆட்சியின் போது) அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் அவர்கள் வீரப்பனை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்தார்.

அவரின் தலைமையிலான குழுவினருக்கு தமிழக அரசு பரிசுகளையும், பதக்கங்களையும், பதவி உயர்வினையும் வாரி இறைத்தது.

வீரப்பன் இறந்ததென்னமோ உண்மைதான். ஆனால், அவரை சுட்டுக் கொன்றார்களா? இல்லை கொன்று விட்டு சுட்டார்களா? என்பது தான் கேள்விக்குறி........

வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான போலீசாரின் முன்னுக்குப் பின் முரணான வழக்கமான கட்டுக்கதைகளை மக்களும் நம்ப மறுத்தனர்..

போலீசாரின் அறிக்கை என்னவென்றால்,

16.10.2004 அன்றிரவு தருமபுரி மாவட்டம் பச்சனம்பட்டி என்ற ஊருக்கு அருகில் இலங்கைக்கு தப்பிச் செல்லும் நோக்கிலே ஆம்புலன்ஸ் வேனில் வந்த வீரப்பனை Sketch எல்லாம் போட்டு வளைத்துப் பிடித்ததாகவும், இதற்காக  கஷ்டப்பட்டு, கருமாயப்பட்டு, சாப்பிடாமல், இரவு பகல் பாராது கண் விழித்து சுட்டு வீழ்த்தியதாகவும் அதிரடிப்படைத்தலைவர் விசயக்குமார் அறிக்கையை தாக்கல் செய்தார்.

விசாரணைக்குழு:

வீரப்பன் மரணம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய 16பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழுவானது வீரப்பனின் சொந்த ஊர், உறவினர்கள், பொதுமக்கள், சுடப்பட்டதாக சொல்லப்பட்ட இடம், உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில்,

வீரப்பனோடு கூடவே இருந்த ஒருவன் தான் அவரைக்காட்டிக் கொடுத்து உளவாளியாக இருந்து இந்த துரோக வரலாற்றை அரங்கேற்றியுள்ளான் எனத் தெரியவருகிறது.

அதிரடிப்படை ஆள்காட்டி ஒருவரின் மனைவியும், மற்றுமொரு உறவுக்கார பெண்ணின் மூலமாக மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றதாகவும் அறிக்கையில் சமர்ப்பித்தனர்.

ஆனால் காவல்துறையினர் வீரப்பனை 18.10.2004ல் இரவு 7.30 மணிக்கு சுட்டுக்கொன்றதாக அதிரடிப்படையினர் அறிக்கையை சமர்பித்தனர்..

இதுபோன்ற இவரது மரணம் குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே தான் உள்ளது..

எது எப்படியோ, ஆனால் வீரப்பன் சூழ்ச்சியால்தான் கொல்லப்பட்டார் என்பது மட்டும் உண்மை.

#அரசியல்_மர்மங்கள்:

வீரப்பன் தந்தங்களை கடத்தினான், சந்தனமரங்களை கடத்தினான், அவன் குற்றவாளியென்றால், அவர் கடத்திய பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்?

அவர் விற்ற பொருட்களை வாங்கியவர்கள் யார்..?
கடத்தி விற்றவன் குற்றவாளி என்று சுட்டுக்கொல்லப்பட்டது நியாயமென்றால், அதே நியாயப்படி வாங்கியவர்களையும் சுட்டுக் கொல்ல அரசு தவறியது ஏன்? (தயங்கியது ஏன்)

இரு மாநில அரசின் கண்ணில் படாமல், வனத்துறை அதிகாரிகளின் கண்ணில் படாமல், காவல்துறையினரின் கண்ணில் படாமல், எப்படி இவரால் பலகோடி மதிப்புள்ள சந்தனமரங்களை கடத்தியிருக்க முடியும்?

விற்றவன் காட்டிற்குள் இருந்தான்..
வாங்கியவன் எங்கிருந்தான்?
அப்படி அவர் கோடி கோடியாக சம்பாதித்த பணத்தை எந்த வங்கியில் சேமித்து வைத்திருந்தார்?

வீரப்பன் கொள்ளையடித்து கட்டி வைத்த பங்களாக்கள் எத்தனை? பெற்ற பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்த சொத்துகள் எத்தனை?

அப்படி அவர் கோடி கோடியாக கொள்ளையடித்த சொத்துக்களை சேர்த்தார் என்றால், அந்த சொத்துக்களை அரசுத்துறை ஏன் முடக்கவில்லை?
பதில் உண்டா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு எந்த ஆதாரங்களையும், அரசு நிர்வாகமோ, அதிரடிப்படையினரோ, வனத்துறையினரோ, வருமான வரித்துறையினரோ, இதுவரை சமர்ப்பிக்கவிலையே ஏன்?

அவ்வளவும் அரசியல்…. (அவர்கள் மாட்டிக்கொள்வார்கள்)

அவர் குற்றவாளியாக இருக்கலாம், வனச் சொத்துக்களை அழித்தார் என்று குற்றம் சாட்டலாம். அவர் குற்றவாளியென்றால், மலையின் இயற்கை வளத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துச் சுங்கம் தோண்டிய "வேதாந்தா" குற்றவாளி இல்லையா? அதன் இயக்குநர்களில் ஒருவரான ப.சிதம்பரம் குற்றவாளி இல்லையா?

எட்டுவழிச்சாலை என்ற பெயரில் ஒட்டுமொத்த காடுகளையும் காசை வாங்கிக்கொண்டு காண்ட்ராக்ட் காரனுக்கு தாரை வார்த்து அழித்துக் கட்டிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றவாளி இல்லையா??

"வீரம்" என்பது என்ன தெரியுமா?

மோரில் ஒருவனை விசம் வைத்துக் கொன்று விட்டு பிணத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, அந்தப் பிணத்தோடு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதல்ல வீரம்.

ஒற்றை ஆளாய் 34 வருடங்களாக இரண்டு மாநில அரசுக்கும், காவல்துறைக்கும், மத்திய ரிசர்வ் படைக்கும் "சிம்ம சொப்பனமாக" விளங்கி, அனைவரது கண்களிலும் விரலை விட்டு ஆட்டி, மலைவாழ் மக்களின் கதாநாயகனாக வாழ்ந்து காட்டினானே அதுதான் "வீரம்"...

தமிழர்கள் என்றைக்கும் வீரத்தில் சளைத்தவர்கள் இல்லை, எதிரியால் வீழ்ந்ததுமில்லை..
துரோகத்தாலும், சூழ்ச்சியாலும் வீழ்ந்தான் என்பதே வரலாறு..

"தனக்காக வாழ்பவன் மனிதனாகிறான்,
பிறருக்காக வாழ்பவன் இறைவனாகிறான்".

"வீரம் இங்கே விதைக்கப்பட்டுள்ளது"


கருத்துகள்

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...

As your habits are, there will be people who behave with you in the same way.

Subbiahpatturajan நல்ல பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..* _ உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே..  எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது._  _*இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.*_ _சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது._  _*இதற்கெல்லாம் அடிப்படை என்ன என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.*_ _எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை_ _ *நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கு...

வள்ளலாரின் அறிவுரைகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள் அளி. 14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் ச...

Try this to live fully in New Year 2025...

Subbiahpatturajan  புது வருடம் 2021ல் *நமது வருமானம் குறைவாக இருந்தாலும்*,நிறைவாக வாழ பழகலாமே !இதை செய்து பாருங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.   உதாரணமாக-- 1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது. (இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.) 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

வெட்டுக் கிளியை கட்டுப்படுத்த உழவர்களின் சிறந்த நண்பன் இந்த ரெட்டைவால் குருவி

Subbiahpatturajan வெட்டுக்கிளிக்கும் கரிச்சான் குருவிக்கும் இருக்கும் தொடர்பு பத்தி பார்ப்போம்!! வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், ரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில்  ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் ...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?

சுப்பியபட்டுராஜன் * டி.என்.பி.எஸ்.சி- ஒரு வேளை? ? 7, 8, ஒரு? * டி.என்.பி.எஸ்.சி- தமனிமகாத்துக்கு ஒரு வேளைக்கும், உங்களுக்கும் விருப்பம் இல்லை, இல்லையா? ஒரு வேளை? TNPSC இல் எத்தனை குழுக்கள்? * << - - - 1 (குழு -1)  (துணை கலெக்டர்)  ஒரு முறை (காவல்துறை துணை கண்காணிப்பாளர்)  (மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை)  (ஸல்)  (மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி)  ஒரு முறை (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் அலுவலர்)  (ஸல் கமிஷனர்)  (கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்) - - 1A (குழு -1 I)  (காடுகளின் உதவி கன்சர்வேட்டர்) - - 1 பி (குழு -1 ஐ பி)  HR & CE (உதவி ஆணையர், HR & CE) - - 1 சி (குழு -1 சி) டிஓஓ (மாவட்ட கல்வி அலுவலர்) ஒரு வேளை  [2] (2) (ஒரு வேளை) (குழு -2)  ஜி துணை வணிக வரி அதிகாரி  ஒரு வேளை  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை (ஒரு வேளை)  ஒரு வேளை, -2  தொழிலாளர் உதவி ஆய்வாளர்  ஒரு வேளை (ஒவ்வொரு வகையிலும்)  (ஸல்)  (ஸல்)  தமது  ஒரு வேளை  ஒரு வேளை, தமதுமது  ஒரு வேளை  ஒரு வே...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...