முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உட்கார்ந்து பார்க்கிற மாதிரி வேலை ஏதாவது....!!!


உட்கார்ந்து வேலை



இன்று சீட்டை விட்டு எழுந்திருக்காமலே வேலை செய்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்கள் என்றால் உங்களைதான் ஆபத்து நெருங்குகிறது. அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்து பணியில் சிறந்தவராகத் இருந்தாலும் உங்கள் உடல் விஷயத்தில் ஆரோக்கியமற்றவர்களாகவே இருப்பீர்கள். எவ்வாறு என்பதைக் கீழே காணலாம்.




இதயக் கோளாறுகள் ஏற்படும்: அதிக நேரம் அமர்வதால் ஏற்படும் பேராபத்துகளில் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். ஏனெனில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்துவிடும். அந்த கெட்டக் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் தேங்கி நின்றுவிடும். அதன் விளைவு இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும்.




உடல் வலி அதிகரிக்கும்: கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முது வலி என நாள்பட்ட நோய்களால் தினமும் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கும் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பதேக் காரணம்.


உடல் தோற்றம் சீரற்று போகும் : ஒரே மாதிரியான நிலையில் நேராக அப்படியே அமர்ந்திருப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படையக் கூடும். இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். உங்கள் உடல் தோற்றம் நீங்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிடும். லாப்டாப் அல்லது கணினியை நோக்கி தலையை குனிந்தவாறோ, நிமிர்ந்தோ அமர்ந்தாலும் இந்தப் பிரச்சனை வரும்



மூளை பாதிப்படையும்: அதிக நேரம் அமர்வதால் உடல் மட்டுமல்ல மூளையும் பாதிப்படையும். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் நிஞாபக மறதி அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. மூளையில் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நரம்புகள் விரைவில் பாதிப்படைகிறதாம். இதனால் புதிதாக நாம் சேகரிக்கும் நினைவுகளை அழித்துவிடுகிறதாம்.


உடல் எடை அதிகரிக்கும்: அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வோர் என்னதான் எடைக் குறைக்க டயட் உணவுகளை உட்கொண்டாலும் அதில் பலன் இல்லை. உடலில் எந்தவித ஆற்றலும் இல்லாத பட்சத்தில் கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறாமல் தேங்கி உடல் எடையை அதிகரித்துவிடும்.


நீரிழிவு நோய் வரலாம்: இன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் உடல் ஆற்றல்கள் அற்ற வாழ்க்கை முறைதான் காரணமாக இருக்கிறது. இதை வைத்து நார்வெயின் பல்கலைக்கழகம் நடத்திய ஹண்ட் என்கிற ஆராய்ச்சியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நிச்சயம் வரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது.


வெரிகோஸ் நோய் அதிகரிக்கும் (நரம்பு சுருக்க நோய்): அதிக நேரம் அமர்ந்திருப்பதால் கால் வலி அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக கால் நரம்புகளில் வீக்கம் ஏற்படும். இதனால் வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் வரும். இன்று பலரும் இந்த நோயால் அவதிப்படுகின்றனர். அதற்கும் உடல் ஆற்றல் இல்லாத வேலைகள் அதிகரித்திருப்பதேக் காரணம்.


மனக் கவலை அதிகரிக்கும்: அதிக நேரம் கணினி முன் அமர்ந்தே வேலைப் பார்ப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். உடல் அளவில் சுருசுப்பாக இருக்க முடியாமல் போகும்.



தூக்கமின்மை அதிகரிக்கும்: கணினி, லாப்டாப் முன்பு அதிக நேரம் வேலை பார்ப்பதால் அதன் வெளிச்சம் கண்களை பாதிப்படைய செய்கிறது. இதனால் நம் தூக்க முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மறுநாள் சுருசுருப்பாக வேலை தொடங்க முடியாமல் போவதற்கும் இதுதான் காரணம்.



இதை எவ்வாறு சரி செய்வது? நீங்கள் அதிகபட்சமாக பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நாற்காலியிலிருந்து எழுந்து நடங்கள். உங்கள் அலுவலகத்திலேயே இரண்டு முறை காரணமே இல்லை என்றாலும் நடங்கள். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கைக் கால்களை வீசுங்கள். இடுப்பை இருபுறமும் வலையுங்கள். முடிந்தால் ரெஸ்ட் ரூம் சென்று சிம்பிள் உடற்பயிற்ச்சி ஏதேனும் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மேலே குறிப்பிட்ட நோய்களிலிருந்து விலகி இருக்கலாம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...