Subbiahpatturajan
உலகின் எட்டாவது அதிசயம்
ஐன்ஸ்டீனின் எட்டாவது அதிசயம்
உலகத்தில் எட்டாவது அதிசயம் ஒன்று உள்ளது என்பது, பலரும் அறியாத ஒன்று.
அந்த எட்டாவது அதிசயம் தான் கூட்டுவட்டி (Compound Interest).
இதைக் கூறியது, 1921-ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஒரு முதலீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டு வட்டி.
உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம்.
வட்டி (Interest) 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000).
அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000+ வட்டி ரூ.11,000).
முதல் வருடம் 10,000 ரூபாய் வட்டி என்றால், இரண்டாம் வருடம் 11,000 ரூபாயாக வட்டி உயர்ந்திருக்கும்.
உங்கள் முதலீடு ஒரு லட்சம் ரூபாய் என்றாலும், வட்டிக்கு வட்டி கிடைத்ததால் அடுத்த அடுத்த வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
நம்மில் பலர், என்ன சார், ஆயிரம் ரூபாய்தானே அதிகமாகக் கிடைக்கிறது' என அலட்சியமாக இதை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆனால், இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தின் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய்.இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய்.
முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய்.
இதில் அதிசயம் என்னவென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம்தான்.
நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய்தான்.
ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும்.
இதை Exponential Growth' என்பார்கள்.
ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும்.
அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும்.
ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும்.
இதனால்தான் கூட்டுவட்டியை ஐன்ஸ்டீன் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார்."
கருத்துகள்