Subbiahpatturajan
🔥🔥🔥🔥
கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.
அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது.
எங்கோ அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவராக வளர்ந்து பின்னர் காடுகளில் அலைந்து திரிந்து லத்தீன் அமெரிக்க தேசத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்துப் போன மாபெரும் போராளியாக இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்!
39 வயதிற்குள் எத்தனை எத்தனை அவதாரங்கள் எவ்வளவு அனுபவங்கள்.
மருத்துவராக, மோட்டார்சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, கொரில்லா போராளியாக, மழை ஏறுபவராக, விமானம் ஓட்டியாக,
பத்திரிகையாளராக எழுத்தாளராக, வங்கித் துறையின் தலைவராக, அமைச்சராக, கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரம் இயக்குபவராக, சுரங்கத் தொழிலாளியாக, இன்னும் இன்னும் உண்டு.
"சேகுவேரா"
☀☀☀☀☀☀☀☀☀☀☀☀
💥அர்ஜெண்டினாவில் பிறந்து, ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து, கியூபா நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்த பாடிஸ்டாவை வீழ்த்தி கம்யூனிஸ்ட் ஆட்சி அமைய காரணமானவர்...
🌟லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்த,சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற, தான் வகித்த கியூபா நாட்டின் நிதியமைச்சர் பொறுப்பை துறந்து, காங்கோ, பொலிவியா நாடுகளில் புரட்சி படைகளை வழிநடத்தியவர்..
🌠1967 அக்டோபர் 9ல் CIAவால் சுட்டுக் கொல்லப்படும் வரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய....,
🌟தேசம் மதம் இனம் மொழி எல்லைகளை கடந்து அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்த...
காலத்தை வென்ற ஒப்பில்லா கெரில்லா"போராளி"
🌠புரட்சிகரதன்மைக்கும் தைரியத்துக்கும் அடையாள சின்னமாக இருக்கின்ற
"புரட்சியாளன்"
❇அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்றவர்களின் "நாயகன்"
எல்லாரையும் போல தாய்க்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளின் தந்தையாக, நண்பர்கள் தோழர்கள் சூழ்ந்தவராக, கம்யூனிஸ்டாக புத்தகக் காதலராக, அறிவைத் தேடிக் கொண்டே இருந்தவராக,அநீதியை எதிர்த்துக் கொண்டே இருந்தவராக,
நாடுகளைத் தாண்டி மொழிகளைத் தாண்டி இனங்களைத் தாண்டி மதங்களைத் தாண்டி மானுடத்தை நேசித்த மானுடம் வாழப் போராடியவர் அவர் தான் சேகுவாரா
மரணிக்கும் முன் சேகுவேரா வின்
கடைசி வார்த்தைகள்...
“ "என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"
("I know you are here to kill me. Shoot,coward, you are only going to kill a man") ”
🌠தனது வாழ்வினாலும்,
39 வயதினிலே தனது மரணத்தாலும், போர்க்குணத்தால்
உலக மக்கள் நெஞ்சில்
நீங்காது நிலைபெற்ற..
மங்காத புகழ்பெற்ற...
"மாவீரன்"
🌟✨ *சேகுவேரா* ✨🌟
நினைவுதினம்
(9 அக்டோபர் 1967)
பிறப்பு 14 ஜூன் 1928
கருத்துகள்