Cinar tamilan

Visit My Links

YouTube Channel Website
முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

"என் இனிய பொன் நிலாவே காப்புரிமை விவகாரம்: ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு!"

Subbiahpatturajan "என் இனிய பொன் நிலாவே". ஹைகோர்ட்டின் முக்கியமான  தீர்ப்பு என்ன சொல்கிறது? தமிழ் சினிமாவின் இசைஞானி என போற்றப்படும் இளையராஜா... இசையமைத்த, பலரது மனதில் இன்னும் ஒலிக்கின்ற பாடல்களில் ஒன்று  "என் இனிய பொன் நிலாவே". ஆனால், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 🔍 இந்த வழக்கின் பின்னணி என்ன? “என் இனிய பொன் நிலாவே” பாடல் 1981ஆம் ஆண்டு வெளியான Moodupani திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தை தயாரித்தது "Sujatha Cine Arts". பாடலின் வரிகள் வாலி எழுதியது; இசை இளையராஜா. இந்த பாடலுக்கான மூல உரிமை (Copyright Ownership) யாருக்கென்கிற கேள்வியில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ⚖️ ஹைகோர்ட் என்ன தீர்ப்பு கூறியது? 2024ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டது: > "திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் பாடல்களின் முழுமையான காப்புரிமை, திரைப்பட தயாரிப்பாளருக்கே சொந்தமா...

நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

Subbiahpatturajan காற்றில்லாதபோது விசிறிதேவை . தென்றல் வீசத்தொடங்கியதும் விசிறியை வைத்துவிடுகிறோம். அதேபோல் இறைவனிடம் பக்தி ஏற்படும்வரை தான் பூஜை,யாகம், போன்றவை தேவை. பக்தி ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லை சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. 4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள். 5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கை...

மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்...

Subbiahpatturajan மனைவியின் " ம்ம்" என்பதற்கு "சரி" என்றும்..! "ம்ம்ம்ம்கும்" என்பதற்கு என்ன அர்த்தம்... கொலை செய்வதற்கு நிகரான ஒன்று...! நேரத்திற்கு தகுந்தார்போல பேசுவது....!! உழவு செய்ய தெரிந்திருந்த விவசாயிக்கு ...! ஊழல் செய்ய தெரிந்திருந்தால்...! இன்று அவனும் மதிக்கப்பட்டு இருப்பான்....!! அட்டப் பூச்சியை விட... அதிவேகமாக மனிதனின் இரத்தத்தை உறிவதில் திறமை வாய்ந்தது...! பணம்...!! திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்தபின் தான் துவங்குகிறது ...! பலூன் விற்பவர் வீட்டில் திருவிழா...!! தெருநாய்களிடமிருந்து தப்பிப்பதற்கு எளிய வழி அவைகளை கண்டுகொள்ளாமல் போவதுதான் ....!!! தினமும் காலண்டரில் எந்த ராசிக்கு மகிழ்ச்சி என்று எழுதப்பட்டு இருக்கிறதாே ...! அந்த ராசிதான் நம்ம ராசி என்று எண்ணிக் கொண்டால்.....! வாழ்நாள் முழுவதும் சந்தோஷம்தான்...!! செருப்பும் நம் வாழ்க்கையும் ஒன்றுதான் ஏனென்றால் ஒன்று தொலைந்தால் மற்றொன்றிற்கு மதிப்பில்லை ....! அது போலத்தான் நம் வாழ்க்கையும். கணவனோ மனைவியோ உடன் இல்லையென்றால் இருப்பவருக்கு மதிப்பில்லை...!! ஏணியாக இருப்பது தப்பில்ல ... ஆனால் ஏணியாகவே...

நீங்கள் உங்கள் வேலையை மதிக்கிறீர்களா?

Subbiahpatturajan *நல்ல சிந்தனையாக*   “எந்த இடத்தில்...யாராக இருந்தாலும், நாம் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கும்.  ஒன்று அவர்கள் நமது வாழ்க்கையை மாற்றுவார்கள், அல்லது நாம் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவோம்.,” ஒருமுறை நான் என் நண்பருடன் கடவுச் சீட்டு (passport) அவசரப் பிரிவில் (Tatkal) விண்ணப்பிக்க கடவுச்சீட்டு அலுவலகம் ( Passport office ) சென்றிருந்தேன். நாங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம், நாங்கள் பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டிய இடத்தை அடைந்த போது பணியில் இருந்த எழுத்தர் அங்கிருந்த டிக்கட் கவுன்டரை மூடி விட்டு நேரம் முடிந்தது, நாளை வாருங்கள் என்றார்.   ஒரு நாள் முழுவதும் காத்திருந்து விட்டோம், கட்டணம் செலுத்துவது மட்டுமே உள்ளது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினோம். அந்த எழுத்தரோ வருத்தமும் கோபமுமாக “நீங்கள் நாள் முழுவதும் செலவழித்தது என் தவறு அல்ல.. அதற்கு நான் பொறுப்பும் அல்ல... தேவையான அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியது அரசின் கடமை. காலை முதல் நான் என் வேலையைச் செய்து வருகிறேன். . " என்று கூறினார். ...

பள்ளிக்குச் சேர்க்கும் முன் உங்கள் குழந்தைகளை.... கன்னி சரஸ்வதியிடம் அழைத்து செல்லுங்கள்

Subbiahpatturajan * கன்னிசரஸ்வதி கோவில், கூத்தனூர்:*  📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும். 📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. தல வரலாறு : 📖 சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும், சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. 📖 கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர். 📖 இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். 📖 அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர ந...

அட இது நம்ம சென்னைங்க...!!!

Subbiahpatturajan * சென்னை ஏன் சூப்பர் கிங் சென்னை ஏன் சூப்பர் கிங் என்று அழைக்கப்படுகிறது*   1688 ஆம் ஆண்டில், லண்டனுக்கு அடுத்தபடியாக சென்னை மாநகராட்சியாக மாறிய உலகின் 2 வது நகரம் ... 🏢  இந்தியாவில் 2 சர்வதேச துறைமுகங்கள், சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் இருக்கும் ஒரே நகரம் சென்னை ... ⛴⛲  சென்னையில் உலகின் மிக நீளமான கடற்கரை மெரினா தான் கிட்டத்தட்ட12 கிமீ நகர கடற்கரை, உலகின் 2 வது நீளமான கடற்கரை ஆகும்... 🏖  நகர எல்லைக்குள் தேசிய பூங்கா அமைந்துள்ள ஒரே நகரம் சென்னை.  கிண்டி தேசிய பூங்கா ... 🐂🐆🐢🐅  அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகிய மூன்று ஆறுகள் ஓடும் ஒரே நகரம் சென்னை மட்டுமே ... 🛳  சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலை (OMR), இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப வழித்தடம் ... 🚦🚥 ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்: ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சென்னை.  "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது ... 🚘🚖  சென்னையில் கோயம்பேடு ... 🚌🚌 இல் ஆசியாவின் மிக...

படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன்.

Subbiahpatturajan இறைவனின் அருள் இல்லாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. ஆன்ம அனுபூதி கிடைத்த பிறகு தான் அனைத்து சந்தேகங்களும் நீங்கும். - 🌸 குழந்தை தந்தையின் கையை பிடித்து நடந்தால் ஒருவேளை கீழே விழலாம். ஆனால் தந்தை குழந்தையின் கையை பிடித்திருந்தால் கீழே விழ வாய்ப்பே இல்லை. மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனே நமது கையை பிடித்து வழிநடத்தி செல்வார். சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. நண்பர்களே என் நாட்டு மக்களே ! உபநிடதங்களை அதிகம் படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன். வலிமை வலிமை, நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை வலிமைதான் . அதை யார் நமக்குத் தருவார்கள்? நம்மைப் பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான கதைகள் வேண்டிய அளவு உள்ளன. உலகின் நூல்நிலையங்களுள் முக்கால் பங்கை நமது புராணக் கதை களால் நிரப்பிவிடலாம். நம் இனத்தைப் பலீனப்படுத்துகின்ற அனைத்திற்கும் கடந்த ஆயிரம் வருடங்களாக நாம் இடம் கொடுத்துவிட்டோம் . அதன் விளைவாக நம்மை மிதிக்கத் துணிந்த ஒவ்வொருவரின் கால்களின் கீழும் வெறும் புழுக்களாகவே ஆகிவிட்டோம். சாணக்கியரின் அர்த்தசாஸ்...

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.

Subbiahpatturajan இராமகிருஷ்ணரின் உபதேசம் 🌿🌿🌿 பற்றின்றி பணி செய்தால் மனம் தூய்மைபெறுகிறது, இறைவனிடம் அன்பு பிறக்கிறது.. ஆசைகள் இன்றி யார் வேலை செய்கிறார்களோ ,அவன் தனக்கே நன்மை செய்கிறான். மனிதர்களால் இறைவனுக்கு நன்மைசெய்ய முடியாது. இறைவனே அனைத்து செயல்களையும் செய்கிறார் 🌿🌿🌿 சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள் ….. .அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.  சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக...

தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும்,

Subbiahpatturajan இராமகிருஷ்ணரின் உபதேசம் 🌿🌿🌿     🌿🌿🌿தென்னை மட்டை உலர்ந்துவிட்டால் மரத்தில் வெறும் சுவடுமட்டுமே காணப்படும். அதுபோல், இறையனுபூதி பெற்றவனிடம் பெயரளவிற்கு மட்டுமே அகங்காரம், காமம்,கோபம் எல்லாம் இருக்கும்.அவனுக்கு குழந்தையின் நிலை ஏற்பட்டுவிடும்      தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற ‏உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பல புற்கள் ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம் நாலடியார் வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலானின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்! திரிகடுகம் 🌿🌿🌿 ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும் அருள் புரிந்து ச...

நீங்களும் நானும் பின்னே அவாளும்...

Subbiahpatturajan நீங்களும் நானும் பின்னே அவாளும் ... *நீங்களும் நானும்..* உணவகம் தொடங்கிய பின்னர் அவாள் உயர்தர சைவ உணவகமாகி போனார்கள். *நீங்களும் நானும்..* படிக்க தொடங்கிய பின்னர் அவாள் உயர்தரக் கல்வி என பேசினார்கள். *நீங்களும் நானும்..* அரசியல் பேச தொடங்கிய பின்னர் அவாள் விபச்சார ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* ஊடகம் தொடங்கிய போது மாமா ஊடகம் என்றார்கள். *நீங்களும் நானும்..* இசைக்க தொடங்கிய போது இசையே இறைவடிவம் என்ற அவாள் டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* படம் இயக்க தொடங்கிய பின்னர் சினிமாவே கெட்டுபோச்சு என முடித்துக் கொண்டார்கள். *நீங்களும் நானும்..* இன்ஞ்சினியர் ஆன போது இன்ஞ்சினியர் எல்லாம் ஒரு படிப்பா என்றார்கள்.  *நீங்களும் நானும்..* மருத்துவம் படிக்க சென்ற போது இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சு என்ன ஆகபோகிறது என்றார்கள். இது எதுவுமே புரியாமல் *நீங்களும் நானும்* சாதி மதம் இனமென சண்டையிடும் போது இவனுகளுக்கு இதே வேலையா போச்சு எல்லாத்தையும் நாமளே மறுபடியும் வச்சிபோம் என மறுபடியு மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..  *இதில் ...

"வாழ்க்கையில் எப்போதும் திருப்தி அடையாமல் இருப்பதற்குக் கற்றுக் கொள்;

Subbiahpatturajan *உணர்வு*- **ஒவ்வொரு  கணமும் என் வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்  அந்த அனைத்து விமர்சகர்களுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்* * வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :* ஒரு கிராமத்தில்   ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார்.   அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம்.    இந்த வேலையின் உதவியால் கிடைத்த  வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்.    சிறிது காலத்திற்கு பிறகு,  அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான்.    அவனது சிற்பங்களும் மிக அழகாகவே  இருந்தன.   தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார்.    ஆனாலும்  தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார்.     அவர் தன் மகனிடம், ‘ நீ நன்றாக செய்கிறாய்.   அடுத்த முறை இந்த குற்றமும் வராமல்  பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார். தந்தையின் அறிவுரை க்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட...

இந்திய ரூபாயின் 1 ரூபாய் அமெரிக்காவின் 13 டாலர்களுக்கு சமம்.

Subbiahpatturajan இந்திய ரூபாய் நோட்டின் வரலாறு இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகளில் இருந்தே புதிய புதிய தகவல்கள் உள்ளன.நீங்களும் அதைப் பாருங்கள் 1000 ரூபாய் நோட்டில் வைர முத்திரை 500-வட்டம் 100- முக்கோணம் 50-சதுரம் 20-செவ்வகம் 10- ஏதுமில்லை. இதற்குக் காரணம் பார்வையற்றோர் எளிமையாக ரூபாய் நோட்டை அடையாளம் காண ஏற்படுத்தப்பட்ட ஒரு குறியீடு. இந்தியாவில் கையூட்டு (லஞ்சம்) பெறுவதைத் தடுக்க ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் சுழி மதிப்பு ரூபாய்த் தாள்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் 1996ம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்கு முன் எந்த தேசத் தலைவரது புகைப்படமும் இன்றி வெறும் நோட்டாகவே வெளியிடப்பட்டு வந்தது. 1954–1978 வரை 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் வரை வெளியிடப்பட்டுள்ளன. (அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை). ஒரு பத்து ரூபாய் நாணயம் தயாரிக்க 6.10 ரூபாய் செலவிடப்படுகிறது. நாணயத்தின் முன்புற அடிப்பக்கத்தில் ஒருசில குறியீடுகள் உள்ளன. அவை நாணயம் தயாரிக்கப்பட்ட இடத்தை குறிக்கும். வைரம் - மும்பை நட்சத்திர...

சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!!

Subbiahpatturajan சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!! *ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்*   ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.. நாகர்கோவிலில் இருந்து தினமும்   சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்.. ஆனால் அந்தோத்யா ரயிலில்  23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை.. சென்னைக்கு  டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்.. நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி (5.10pm), மதுரை (8.30pm), திருச்சி (10.45pm), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது. பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் ...

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி...!?

Subbiahpatturajan இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி.!  வெறும் உப்பு மாவுக்கும்  பாமாயிலுக்கும் தான் குமரி மாவட்டத்தில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள் என்று ஊரில் சங்கிமங்கி தலைப் பிரட்டைகள் துடித்து எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.   ஆதிக்கத்திலிருந்து விடுதலை.!  -------------------------------------------------------- 1800 களில் (சாணார்) பெண்கள் நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். (அவளுகளுக்கு அப்படி என்ன எரிச்சலோ) மீறி, மானம் மறைத்த முலைகள் அறுபட்டு வீழ்ந்தன. பொதுச் சந்தைகளில் அயினிப் பழம்...

Causes of cancer and preventable measures ...?! புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களும் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளும்...!?

Subbiahpatturajan Causes of cancer and preventable measures ...?! *ஜப்பான் அரசு  இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து "* * மைக்ரோவேவ் ஓவன்  களையும்" அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.*  *இந்த தடைக்கான காரணம்:   செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளை விட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் "ரேடியோ அலைகள்" கடந்த 20 ஆண்டுகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர்.*   மைக்ரோவேவ் அடுப்பு  களில் சூடேற்றப்பட்ட உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும், கதிர்வீச்சையும் கொண்டு இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்தனர்.  ஜப்பானில் உள்ள  மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.  தென் கொரியா அனைத்து "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகளையும் 2021 ஆம் ஆண்டிலும்,  சீனா 2023 ஆம் ஆண்டிலும் மூடும் திட்டத்தை அறிவித்தது.   புற்றுநோய் தடுப்பு குறித்த மாநாடு நடைபெற்றது.   காஷிரா புற்றுநோய் மையம் பரிந்துரைத்த...

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕

Subbiahpatturajan தலைவர் பிரபாகரன்- மதிவதனி அவர்களின் காதல் கதை 💕 பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர். மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது அரசு . அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. ஆனால் இலங்கை அரசு இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை. 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து கடத்திச் சென்றனர். புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்...

16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளை வேலைக்கு சென்றால்....?

Subbiahpatturajan ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை…… ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை !!! சில நேரங்களில் குள்ள நரி புத்தி கொஞ்சமாவது வேண்டும், குழி பறிக்க அல்ல, குழியில் விழாமல் இருக்க !!! உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்………. உயரப் போகும்போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது!!! மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை !!! மனிதன் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும், கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்……. பொறுமை ஒரு பொழுதும் தோற்றதில்லை, பொறாமை ஒரு போதும் ஜெயிப்பதில்லை………. பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பர் மாதிரி பல பிரச்சினைகளுக்கும், தீர்வு அதிலேயே இருக்கும்போது அதை விட்டு, நாம் எல்லா இடத்திலேயும் தேடிக்கொண்டிருக்கிறோம்…. விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது, சிக்கலுக்கு பயந்தால், வாழ்க்கை நிறையாது !!! முதியோர் இல்லத்திற்கு பணம்கொடு, பொருள் கொடு, உடை கொடு, உணவு கொடு, உன் பெற்றோரை மட்டும் கொடுக்காதே !!! உள்ளம் கண்டு பழகு, உருவம் கண்டு பழகாதே!!!...

புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை

Subbiahpatturajan புதிய கல்விக் கொலை என்கிற கல்விக் கொள்கை இந்திய அரசு  கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71 % மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம். அந்த 22 மொழிகள் என்னென்ன? அஸ்ஸாம், வங்காளி, போமோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாமி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள் அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக், குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* கோரானா கேள்வி பதில்கள்

Subbiahpatturajan *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.* 1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?*  இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.  2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?*  இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந...

நம் மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

Subbiahpatturajan நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.... ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு: TN01 - சென்னை (மத்திய) TN02 - சென்னை (வடமேற்கு) TN03 - சென்னை (வட கிழக்கு) TN04 - சென்னை (கிழக்கு) TN05 - சென்னை (வடக்கு) TN06 - சென்னை (தென்கிழக்கு) TN09 - சென்னை (மேற்கு) TN10 - சென்னை (தென்மேற்கு) TN11 - தாம்பரம் TN11Z - சோழிங்கநல்லூர் TN16 - திண்டிவனம் TN18 - REDHILLS TN18Z - அம்பத்தூர் TN19 - செங்கல்பட்...

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க"

Subbiahpatturajan *Self Discipline* 1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் Car வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களா...

சொந்த வீடு கட்டுபவர்களுக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 50 டிப்ஸ்கள்.....!!

Subbiahpatturajan சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம். 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது. 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ...

LIC policy யாரெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்... ?

 தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். #எல்ஐசியை_பங்குச்_சந்தையில்_ #விற்கும்_மோடி_அரசின்_முடிவு  #மிகச்சிறந்த_பொதுத்துறை #நிறுவனத்தின்_அழிவில்தான்_போய் #முடியும்  –      பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை ...