முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயம் வருகிறது.

Subbiahpatturajan

Cinartamilan

நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயம் வருகிறது.

சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் சில முரண்கள் எல்லோருக்கும் இருக்கலாம்.
ஆனால் இவர்களை எதிர்த்து தொடர்ந்து அவதூறு பரப்புவர்களில் நூற்றுக்கு 99 பேர்
 "இவிங்க அவ்வளவு நல்லவிங்க இல்லையே"
 எனும் ரகமாகவே இருக்கின்றனர் என்பதற்காகவே சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பி, தங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டி வருகிறது.
விலைவாசி உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் போராடுவோம் என்று அறிவித்த தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
(இன்று வரை அந்த அடுத்த மாதம் வரவேயில்லை என்பது தனிக்கதை).
தமிழ்நாட்டு மக்கள் அவதிப்படும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கமிட்டி ...
குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கேரளாவிற்கு எடுத்துச் சென்று அதானியின் விடியம் துறைமுகக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று போராடும் சீமானுக்கும், நாம் தமிழருக்கும் எதிராகத் திடீரென எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. 
அதாவது "மதவாத பாஜகவின் தொழில் அதிபர்" அதானி கட்டும் துறைமுகத்துக்கு "மதச்சார்பற்ற காங்கிரஸ் கமிட்டியின்" தமிழ் நாடு பிரிவு ஆதரவு தருகிறது.

ஆதாரம் நம்பர் ஒன்று.

சவுக்கு சங்கர்.... காங்கிரஸ் கட்சியைப் பற்றி சீமான் அசிங்கமாகப் பேசிவிட்டார் என்று கூறிப் பேட்டி அளிக்கிறார்.

ஆதாரம் நம்பர் இரண்டு

கூடங்குளத்தில் அணு உலைகள் அமையவிடாமல் தடுத்து அங்கே மல்லிகைப் பூந்தோட்டம் அமைத்துவிட்ட சுப.உதயகுமாரன் சீமானை எதிர்த்து டிவீட் செய்கிறார்.

ஆதாரம் நம்பர் மூன்று.

மீத்தேன் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி அங்கே வயல்காடுகளை அமைத்துவிட்ட பேராசிரியர் ஜெயராமன், அவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய 32 பேர் சாரி 32 அமைப்புகள் சீமானுக்கு எதிராகப் புகார் தருகிறது.

ஆக....அதானி, அம்பானிகளுக்கு வியர்த்துவிடக்கூடாது என்பதுதான் மேற்கண்டவர்களின் கவலை.

எனவே, ஆக....ஒன்று நன்றாகப் புரிகிறது.

இந்தப் பதிவை இடும் நேரத்தின் அடிப்படையில் சீமானும், நாம் தமிழர் தம்பி, தங்கைகளும் மிகச் சரியான திசையில், சரியான பாதையில்தான் நடை போடுகின்றனர் என்று.
குமரி மலைகளை உடைப்பதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள, கன்னியாகுமரிக்கு சீமான் வந்தால் அடிப்போம் உதைப்போம் என்றனர் அந்த ஊரின் "காங்கிரஸ் பேரியக்க" கட்சிக்காரர்கள்.
வந்தது மட்டுமல்ல, தக்கலையை அதிர வைத்திருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
தமிழ், தமிழர் நிலம், தமிழியத்தை இவர்கள் உளப்பூர்வமாக நேசித்துப் போராடும் இறுதி நிமிடம் வரை நாம் தமிழரை ஆதரிப்பது தமிழர்களின் கடமை.

வாழ்க வளமுடன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...