Subbiahpatturajan
நீங்களும் நானும் பின்னே அவாளும்...
*நீங்களும் நானும்..* உணவகம் தொடங்கிய பின்னர் அவாள் உயர்தர சைவ உணவகமாகி போனார்கள்.
*நீங்களும் நானும்..* படிக்க தொடங்கிய பின்னர் அவாள் உயர்தரக் கல்வி என பேசினார்கள்.
*நீங்களும் நானும்..* அரசியல் பேச தொடங்கிய பின்னர் அவாள் விபச்சார ஊடகம் என்றார்கள்.
*நீங்களும் நானும்..* ஊடகம் தொடங்கிய போது மாமா ஊடகம் என்றார்கள்.
*நீங்களும் நானும்..* இசைக்க தொடங்கிய போது இசையே இறைவடிவம் என்ற அவாள் டப்பாங்குத்து எல்லாம் இசையா என்றார்கள்.
*நீங்களும் நானும்..* படம் இயக்க தொடங்கிய பின்னர் சினிமாவே கெட்டுபோச்சு என முடித்துக் கொண்டார்கள்.
*நீங்களும் நானும்..* இன்ஞ்சினியர் ஆன போது இன்ஞ்சினியர் எல்லாம் ஒரு படிப்பா என்றார்கள்.
*நீங்களும் நானும்..* மருத்துவம் படிக்க சென்ற போது இவர்கள் எல்லாம் மருத்துவம் படிச்சு என்ன ஆகபோகிறது என்றார்கள்.
இது எதுவுமே புரியாமல் *நீங்களும் நானும்* சாதி மதம் இனமென சண்டையிடும் போது இவனுகளுக்கு இதே வேலையா போச்சு எல்லாத்தையும் நாமளே மறுபடியும் வச்சிபோம் என மறுபடியு மனுசட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..
*இதில் "நீங்களும் நானும்" யார் ? அவாள் யார் ? என புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்கால சொத்தை விட்டு செல்வீர்கள். இல்லையேல், உங்கள் முப்பாட்டன் வாழ்ந்த இடுப்பு துண்டை அவர்களுக்கு உறுதிப்படுத்தி விட்டு செல்கிறீர்கள்.*
• • •
கருத்துகள்