Subbiahpatturajan
இப்படிக்கு...
இப்படிக்கு...
ஈழத்தமிழன்
எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலையில் ஒரு சில இயக்கங்கள் தோன்றினாலும் எண்பதுகளின் நடுப்பகுதியில் அது 32 இயக்கங்களாக பிரிந்து பிரிந்து இருந்தன.
LTTE
TELO
PLOT
EPRLF
EROS
TELA
TELE
ERCP
TEA
பேரவை
என எனது ஞாபகத்தில் இருப்பவை இவை
இந்த இயக்கங்களிலே உண்மையான விடுதலை நோக்கோடு சேர்ந்தவர்களை அவர்களது தலைமைகள் தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.
உறுதியான இலட்சியத்திற்காக நேர்மையாக போராடிய புலிகளை தவிர மற்றையவர்களால் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியவில்லை,
முடிவு என்னவெனில்
எந்த எதிரிக்கு எதிராக போராட வந்தார்களோ, அந்த எதிரியிடமே சரண்டைந்தார்கள்
எந்த இலட்சியத்திற்காக ஆயுதங்களை தூக்கினார்களோ, அந்த இலட்சியத்திற்கு உறுதியாக அர்ப்பணிப்புடன் போராடிய புலிகளை காட்டிக்கொடுக்கத்தொடங்கினார்கள்.
தமது பிள்ளைகள் இந்த இயக்கங்களில் இருப்பதாக பெருமைப்பட்ட தாய்மார்களே, அதற்காக அவமானப்பட வைத்தார்கள்.
இந்திய இராணுவத்தின் வருகைக்கு பின்
ENDLF
EPDP என இன்னமும் இரண்டு துரோகக்குழுக்கள் உருவாகின
இப்போது விடயத்திற்கு வருவோம்
தமிழ்நாட்டில் நாம்தமிழரின் தமிழ்த்தேசிய கருத்தியல் வலுப்பெற வலுப்பெற , இலட்சியப்பற்று அற்ற, சுயநலமிக்க தனிநபர்களும் இயக்கங்களும் கட்சிகளும் மெல்ல மெல்ல எதிரியிடம் சரண்டைந்து நாம்தமிழரை காட்டிக்கொடுப்பதும் வசைபாடுவதுமாக மிக உக்கிரமாக இறங்கி விட்டன.
இப்போது தமிழர்களுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன
ஒன்று, வட ஹிந்திய
ஆரிய, தமிழர் அல்லாத பிற மொழி திராவிடத்திற்கு அடிமையாக இருந்து உன் இனத்தை காட்டிக்கொடுத்து நீயும் அழிந்து உன் இனத்தையும் அழிப்பது
இரண்டாவது, தமிழனாய் தன்னின உணர்வோடு எழுச்சியுற்று நாம்தமிழராய் இனத்தை மீட்டெடுப்பது.
இன்று நாங்கள் ஒரு மிக முக்கிய காலகட்டத்தில் எமது அரசியல் நகர்வை கொண்டு வந்து விட்டுள்ளோம்.
உண்மையான இலட்சியப்பற்று உள்ளவர்கள் ஒரு பக்கமும் போலிகள் எதிரிகளுடனும் நிற்கிறார்கள்.
காலம் எமக்கு அளித்த கொடை அண்ணன் சீமானோடு இந்த இக்கட்டான காலத்தில் கைகோர்த்து நிற்கும் ஒவ்வொரு தமிழனையும் எதிர்காலத்தமிழர் சந்ததி நிச்சயம் பெருமையுடன் நினைவு கூரும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படிக்கு
இன்னமும்
அகதியாக
ஐரோப்பாவில்
அலையும்
கருத்துகள்