Subbiahpatturajan
One of the deserts formed last night..
ஈரம் சொட்டும் காமத்தின் உரையாடல்கள்
மந்தையிலிருந்து பிரிந்த
நேற்றிரவு இந்த கிரகம்
நேற்றிரவு தன் கவிதையை
One of the deserts formed last night..
நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது...
நேற்று ஓரிரவு
ஃபேஸ்புக்- இயங்கவில்லை
இன்ஸ்டாக்ராம் இயங்கவில்லை
வாட்ஸப் இயங்கவில்லை
நோடிபிகேஷன் சப்தங்கள் ஓய்ந்து
இந்த உலகம் மயான அமைதியில் ஆழ்ந்தது
ஓரிரவில்
கோடிக்கணக்கான காதலர்கள்
தங்கள் காதலிகளை இழந்தனர்
கோடிக்கணக்கான காதலிகள்
தங்கள் காதலர்களை இழந்தனர்
தனிமையின் இருட்டில்
இன்பாக்ஸ் பச்சை விளக்கு மின்மினிகளை
மெளனமாக பின்தொடர்புகளுக்கு
நேற்றிரவு கண் தெரியவில்லை
தினமும் நூறு செஃபிக்களால்
தங்கள் நிழலை
தாமே தொடரும் நார்சிஸ மான்கள்
தம் பாதைகளை இழந்தன
ஈரம் சொட்டும் காமத்தின் உரையாடல்கள்
சட்டென உலர்ந்து
நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது
ஃபேஸ் புக் புரட்சியாளர்களும்
வாட்ஸப் வதந்தி பரப்புகிறவர்களும்
இன்ஸ்டாக்ராம் நடிப்பு தேவதைகளும்
ஓரிரவு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு
தற்காலிகமாக வீடு திரும்பினர்
நேற்று ஒரிரவு
எந்த ஒரு மனிதாபிமானக் காட்சியோ
கோரக்கட்சியோ
அரசியல் வெறியூட்டும் பிரகடனங்களோ
ட்ரெண்டிங்கில் வரவில்லை
ஒரு நடிகையின் விவாகரத்தைப்பற்றியோ
ஒரு சினிமாவின் திரைக்கதை நுணுக்கம் பற்றியோ
உக்கிரமான உரையாடல்கள்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன
பெண்கள் ஆண்கள் மீதும்
ஆண்கள் பெண்கள் மீதும் வைக்கும்
செல்லமான குற்றச் சாட்டுகள் ஏதுமின்றி
அவர்கள் அமைதியாகத் தூங்கினார்கள்
ஃபேக் ஐடிகள்
ஆடை மாற்றிகொண்டு
நைட்டியிலும் லுங்கியிலும்
நேற்றிரவு ஆசுவாசமாக இருந்தன
ஒருவர் இருப்பதை
இன்னொருவர் அறிந்துகொள்ளவும்
நேசித்த ஒருவர்
இப்போது யாருடன் இருக்கிறார் என்பதை
கண்காணிக்கவும் இருந்த
எல்லா வழிகளும் அடைபட்டு
எல்லோரும் எல்லோரிடமிருந்தும்
ஓரிரவு சுதந்திரம் அடைந்தனர்
மந்தையிலிருந்து பிரிந்த
ஒரு ஆடுபோல
அத்தனை ஆடுகளும் நேற்றிரவு முழுக்க
தன்னந்தனியே
மருகித் திரிந்தன
இறந்தவர்கள் யாருக்கும்
நேற்றிரவு கண்ணீர் அஞ்சலிகள் ஏதுமின்றி
அவர்கள் இறப்பு
கண்ணியமாக நடந்தேறியது
காண்பதற்கு வேறு எதுவும் இல்லாததால்
முன்னொரு யுகத்தில் நடந்ததுபோல
நாங்கள் எதிரிலிருக்கும் மனிதனின்
முகத்தைக்கண்டோம்
ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரங்களை
நீண்ட நாளைக்குப்பிறகு பார்த்தோம்
வேறு சிலர்
இந்தக் கதவுகள் ஏன் திடீரென மூடிவிட்டன
எனத்தெரியாமல்
இரவெல்லாம் சுவர்களில்
தலையை முட்டிக்கொண்டனர்
இதற்கெல்லாம் வெளியே
இன்னொரு கிரகத்தில்
கோடானுகோடி மக்கள் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு
நேற்றிரவு இந்த கிரகம்
அழிந்து மீண்ட தகவல்கூட தெரியாது
ஃபேஸ்புக்கில் தினமும்
உங்களை தற்கொலைக்குத் தூண்டும்
கவிதைகளை எழுதும் கவிஞன்
கருத்துகள்