முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

One of the deserts formed last night..நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது

Subbiahpatturajan

Cinartamilan

One of the deserts formed last night..
நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது...


நேற்று ஓரிரவு
ஃபேஸ்புக்- இயங்கவில்லை
இன்ஸ்டாக்ராம் இயங்கவில்லை
வாட்ஸப் இயங்கவில்லை
நோடிபிகேஷன் சப்தங்கள் ஓய்ந்து
இந்த உலகம் மயான அமைதியில் ஆழ்ந்தது

ஓரிரவில் 
கோடிக்கணக்கான காதலர்கள்
தங்கள் காதலிகளை இழந்தனர்
கோடிக்கணக்கான காதலிகள்
தங்கள் காதலர்களை இழந்தனர்

தனிமையின் இருட்டில்
இன்பாக்ஸ் பச்சை விளக்கு மின்மினிகளை
மெளனமாக பின்தொடர்புகளுக்கு
நேற்றிரவு  கண்  தெரியவில்லை

தினமும் நூறு செஃபிக்களால்
தங்கள் நிழலை 
தாமே தொடரும் நார்சிஸ மான்கள்
தம் பாதைகளை இழந்தன

ஈரம் சொட்டும் காமத்தின் உரையாடல்கள்
சட்டென உலர்ந்து
நேற்றிரவு பாலைவனம் ஒன்று உருவானது


ஃபேஸ் புக் புரட்சியாளர்களும்
வாட்ஸப் வதந்தி பரப்புகிறவர்களும்
இன்ஸ்டாக்ராம் நடிப்பு தேவதைகளும்
ஓரிரவு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு
தற்காலிகமாக வீடு திரும்பினர்

நேற்று ஒரிரவு
எந்த ஒரு மனிதாபிமானக்  காட்சியோ
கோரக்கட்சியோ 
அரசியல் வெறியூட்டும் பிரகடனங்களோ
ட்ரெண்டிங்கில் வரவில்லை

ஒரு நடிகையின் விவாகரத்தைப்பற்றியோ
ஒரு சினிமாவின் திரைக்கதை நுணுக்கம் பற்றியோ
உக்கிரமான உரையாடல்கள்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன

பெண்கள் ஆண்கள் மீதும்
ஆண்கள் பெண்கள் மீதும் வைக்கும்
செல்லமான குற்றச் சாட்டுகள் ஏதுமின்றி
அவர்கள் அமைதியாகத் தூங்கினார்கள்

ஃபேக் ஐடிகள்
ஆடை மாற்றிகொண்டு
நைட்டியிலும் லுங்கியிலும்
நேற்றிரவு ஆசுவாசமாக இருந்தன

ஒருவர் இருப்பதை
இன்னொருவர் அறிந்துகொள்ளவும்
நேசித்த ஒருவர்
இப்போது யாருடன் இருக்கிறார் என்பதை
கண்காணிக்கவும் இருந்த
எல்லா வழிகளும் அடைபட்டு
எல்லோரும் எல்லோரிடமிருந்தும்
ஓரிரவு சுதந்திரம் அடைந்தனர்

மந்தையிலிருந்து பிரிந்த
ஒரு ஆடுபோல
அத்தனை ஆடுகளும் நேற்றிரவு முழுக்க
தன்னந்தனியே
மருகித் திரிந்தன


இறந்தவர்கள் யாருக்கும்
நேற்றிரவு கண்ணீர் அஞ்சலிகள் ஏதுமின்றி
அவர்கள் இறப்பு
கண்ணியமாக நடந்தேறியது

காண்பதற்கு வேறு எதுவும் இல்லாததால்
முன்னொரு யுகத்தில் நடந்ததுபோல
நாங்கள் எதிரிலிருக்கும் மனிதனின் 
முகத்தைக்கண்டோம்
ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரங்களை
நீண்ட நாளைக்குப்பிறகு பார்த்தோம்

வேறு சிலர்
இந்தக் கதவுகள் ஏன் திடீரென மூடிவிட்டன 
எனத்தெரியாமல்
இரவெல்லாம் சுவர்களில்
தலையை முட்டிக்கொண்டனர்

இதற்கெல்லாம் வெளியே
இன்னொரு கிரகத்தில்
கோடானுகோடி மக்கள் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு

நேற்றிரவு இந்த கிரகம்
அழிந்து மீண்ட தகவல்கூட தெரியாது


ஃபேஸ்புக்கில் தினமும்
உங்களை தற்கொலைக்குத் தூண்டும்
கவிதைகளை எழுதும் கவிஞன்

நேற்றிரவு தன் கவிதையை
ஒரு பாலத்தின் தூணின் மேல்
எழுதிச் சென்றான்


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அப்போது உனக்கும் சேர்த்து தானே உருவாகும் நீயும் அந்த மீடியா சார்ந்த ஆள் தானே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...