சூழ்நிலையால் நேசிக்கபடுவனாக இருப்பதை விட பயமுறுத்தும் தன்மை கொண்டவனாக இருப்பதே அரசனுக்கு... நல்லது"
"மனிதர்கள் அடிப்படையில் பொய்யர்களும், சுயநலவாதிகளும், ஏமாற்றுக்காரர்களும்தான்" என்கிறார்- மாக்கியவெல்லி.
ஆனால் அவர்கள் நம்மிடம் நல்லவர்களாக நடந்து கொள்கிறார்களா, கெட்டவர்களாக இருக்கிறர்களா என்பது அவர்களுக்கு நாம் எந்த முகத்தை காட்டுகிறோம் என்பதை பொறுத்தது"
"அன்பானவர்களாக நாம் இருந்தால் நம்மிடம் எல்லாரும் அன்பாக, நல்லவர்களாக தான் இருப்பார்கள். நம்மிடம் தன் சிறந்த முகத்தை காட்டுவார்கள்.
ஒரு அரசன் அன்பானவனாக மட்டுமே இருந்தால் போதாது. அவனது பகைவர்கள் கொடூரமானவர்களாக இருந்தால் அவன் இழைக்கவிருக்கும் தீமைகளுக்கு அஞ்சி மக்கள் அவன் பக்கம் சேர்ந்துவிடுவார்கள்.
அதனால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய தருணத்தில் மிக கடுமையானவனாக அரசன் நடந்துகொள்ளவேண்டும்., துரோகத்தை மிக, மிக கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போதுதான் எதிரியின் மீதான அச்சத்தால் அவர்கள் நம்மை விட்டு நீங்கமாட்டார்கள், நமக்கு துரோகம் இழைக்கமாட்டார்கள்.
ஆனால் எப்போதுமே கொடுங்கோலனாக, சர்வாதிகாரியாக ஒரு அரசன் இருந்தால் மக்களே புரட்சி செய்து அவனை வீழ்த்திவிடுவார்கள். அதனால் மற்ற சமயங்களில் தாராளமானவனாக, நீதிமானாக ஒரு அரசன் இருக்கவேண்டும்.
"நல்லவன் போல காட்சியளிப்பது ஒரு தோற்றமாக தான் இருக்கவேண்டும்" என்கிறார் மாக்கியவெல்லி. உள்ளுக்குள்ளும், வெளியேயும் ஒருவன் நல்லவனாக இருந்தால் ஆப்பு வைத்து விடுவார்கள்.
வெளியே அப்பாவி மாதிரி காட்சியளித்தாலும் உள்ளுக்குள் அனைத்து சூழ்ச்சிகளிலும் கைதேர்ந்தவனாக ஒரு அரசன் இருக்கவேண்டும்.
ஆனால் முழுநேர சூழ்ச்சிக்காரனாக இருந்தால் பொய்யன் என அவனை அனைவரும் ஒதுக்கிவிடுவார்கள். அதனால் வீரம் என வருகையில் சிங்கமாகவும், சூழ்ச்சி என வருகையில் நரியாகவும் இருக்கவேண்டும்.
"ஒரு அரசன் எப்போதும் மக்களின் வெறுப்புக்கு மட்டும் ஆளாகிவிடகூடாது" என எச்சரிக்கிறார் மாக்கியவெல்லி.
அவர்களை தனக்கு எதிராக திரும்பும் வண்ணம் கொடுமைக்காரனாக இருக்ககூடாது. ஆட்சியை நல்லபடி நடத்தும் பொருட்டே வன்முறை பயனாகவேண்டுமே ஒழிய பழிவாங்கும் நோக்கில் அது அமையக்கூடாது
ஆனால் "அன்பால் தான் ஒரு நாட்டை ஆளமுடியும். அன்பை விட மேலானது ஒன்று உள்ளது எனில் அது அச்சம்தான். இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் எனும் சூழலில்- நேசிக்கபடுவனாக இருப்பதை விட பயமுறுத்தும் தன்மை கொண்டவனாக இருப்பதே அரசனுக்கு நல்லது"
"It is better to be feared than to be loved" - Niccolo Machiavelli
கருத்துகள்