Subbiahpatturajan
சென்னைக்கு அவசரமாக புறப்படும் பயணிகளுக்கு உபயோகமான செய்தி...!!!
*ரயிலுக்கு
முன்பதிவு இல்லை.. சென்னைக்கு
டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்*
ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி..
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது..
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்..
ஆனால் அந்தோத்யா ரயிலில்
23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு
முன்பதிவு இல்லை.. சென்னைக்கு
டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய்..
நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி(5.10pm), மதுரை(8.30pm), திருச்சி (10.45pm), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது.
பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள்,குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திகொள்ளவும்...
தனியார் பேருந்து மாபியாக்கள் மூலம் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி.
மக்கள் கூட்டம் ,வரவேற்பு இல்லை என கருதி ரயிலை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது..
முடிந்தவரை share செய்து நம் மாவட்ட மக்களுக்கு பயன்பெற செய்வோம்..
கருத்துகள்