முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

How many times have you laughed today ...?! இன்று நீங்கள் எத்தனை முறை சிரித்திருப்பீர்கள்...?!

Subbiahpatturajan

Cinartamilan

இன்று நீங்கள் எத்தனை முறை சிரித்திருப்பீர்கள்...?!


23 வயதில் ஏற்படும்.... நகைச்சுவை உணர்வு.... சிரிப்பதை இழக்கிறோம்.

மனித வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு, சிரிப்பு, அழுகை போன்றவை முக்கியப் பங்கு வகிப்பதால் மன இறுக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒருவித பதற்றத்துடனேயே வாழ்க்கை செல்வதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நகைச்சுவை உணர்வு, சிரிப்பு ஆகியவற்றை நாம் இழப்பது தான் இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வணிக பள்ளி கல்வியாளர்கள் ஜெனிபர் ஆகர், நவோமி பாக் டோனஸ் நடத்திய ஆய்வில்

23 வயதை அடையும் போது ஒவ்வொரு நாளும் சிரிக்கும் நேரம் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும், 166 நாடுகளில் 1.4 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரித்தீர்கள் என்று கேட்டால் விரல்விட்டு என்னும் அளவிற்கு இருக்கிறது.

இதில் 23 வயதில் இருந்து சிரிப்பது குறையத் தொடங்கியதிற்கு, வேலை செய்யும் சூழல் மற்றும் பல காரணங்களால் நகைச்சுவை உணர்வு- சிரிப்பதை இழந்து விடுகிறோம்.

சராசரியாக 4 வயது குழந்தை ஒரு நாளுக்கு 300 முறை சிரிக்கிறது. அதே நேரத்தில் சராசரியாக 40 வயது உடையவர் 10 வாரங்களில் 300 முறை சிரிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பகிர்வு

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இன்று என்றும் சிரிப்பதற்கு இல்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...