முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Attention friends who use ear buds காது குடையும் பழக்கம் உள்ள நண்பர்கள் கவனத்திற்கு

Subbiahpatturajan

Cinartamilan

Attention friends who use ear buds காது குடையும் பழக்கம் உள்ள நண்பர்கள் கவனத்திற்கு

ஆரோக்கிய   குறிப்பு*

*காதுகள் ஒரு மனிதனுக்கு  சரியாக கேட்க வேண்டும்* *என்றால்*
*காதுகளின் உள்ளே* *இருக்கும்* *செவிப்பறை ( Ear* *drum) சுத்தமாகவும்* *சேதமடையாமலும்* *இருக்க வேண்டும்*.

*இதற்கு இயற்கை மனிதனுக்கு* *தந்துள்ள* *பாதுகாப்பான ஒரு* *அம்சம்தான்* *காதுக்குரும்பி. இது ஆங்கிலத்தில் இயர் வேக்ஸ் (Ear wax) என்றும் மருத்துவ பெயரில் 'செருமென்' ( Cerumen)  என்றும் அழைக்கப்படுகிறது*. 

*நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands)  எனப்படும்* *சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் '  திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து  செவிப்பறையை பாதுகாக்கின்றன.*

*காதுக்குள்  பூச்சிகள், ஒவ்வாமை  தூசி  போன்ற அந்நிய பொருட்கள்  உள்ளே நுழைந்து   *செவிப்பறையை பதம் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே* 
*இந்த செருமென்   குரும்பி ஒரு காவல் வீரனைப் போன்ற பணியை 24 மணி நேரமும் செய்து* *கொண்டிருக்கிறது.

எந்த பூச்சி உள்ளே* *போனாலும்* *அதற்குஆயுள் சிலவிநாடிகள்தான்.* எனவே*
 *இந்த குரும்பியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. 
புது குரும்பி* *உருவாகும் போது பழைய குரும்பி*
 *தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியே வந்துவிடும்.இதற்கு* *ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்*
*(Auto cleaning system) என்று பெயர்*

*ஆனால் சிலர் இதை வலுக்கட்டாயமாக* *அகற்ற இயர் பட்ஸை *உபயோகிப்பார்கள்*


*இது மிகவும்* *தவறான ஒன்று*
*அப்படி அகற்றும்* *போது இரண்டு *பெரிய ஆபத்துகள்*
*உள்ளன*
*ஒன்று.....*
*எவ்வளவு பெரிய* *தரம் வாய்ந்த கம்பெனியாக இருந்தாலும் அவர்கள் தயாரித்த* *இயர் பட்ஸ் பஞ்சில் *பூஞ்சை காளான்கள் *போன்ற கிருமிகள் *இருக்கும்*
*அவை* *செவிப்பறையில் நோய் தொற்றை உண்டாக்கும். 

நோய் தொற்றை சரி செய்யாவிட்டால் செவிப்பறையில் கிழிசல் ஏற்பட்டு காதுகேளாத நிலை உண்டாகும்*

*இரண்டாவது.....*


*இயர் பட்ஸை* *காதுக்குள் நுழைத்து குரும்பியை*  *வெளியே எடுக்க முயற்சிக்கும் போது சில நேரங்களில் தவறுதலாக அந்த குரும்பி இன்னும் உள்ளே போய் செவிப்பறையில் அழுத்தமாக* *ஒட்டிக்கொண்டு வெளியே வர *முடியாமல்*
*செவிப்பறையை* *வீங்க வைக்கும்.அதன் *பிறகு பல்வேறு *பிரச்சினைகளை*
*உண்டாக்கும்*

*காதைக் குடையும் போது சுகமாகத்தான் இருக்கும்....
*ஆனால் பிரச்னை ஏற்பட்ட பின் அது கொடுக்கும்* *குடைச்சலை நம்மால் தாங்கமுடியாது. லட்சக் கணக்கில் மருத்துவ செலவு வைத்துவிடும்*

*அப்புறம்........இன்னொரு முக்கியமான விஷயம்*


*காதுகள்  கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை*
*நாம் நேராக நிற்கவும்,  *தடுமாற்றம் *இல்லாமல் நடந்து *செல்லவும்*
*காதுகளில் உள்ள* *என்டோலிம்ப், (Endolymph) பெரிலிம்ப் ( Perilymph) என்கிற* *இரண்டு  திரவங்கள் சமநிலையில்* *வைக்கப்படுவதால்தான்  என்கிற* 
*உண்மையையும்* *தெரிந்து கொள்ளுங்கள்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...