Subbiahpatturajan
🌿🌿🌿
🌿🌿🌿தென்னை மட்டை உலர்ந்துவிட்டால் மரத்தில் வெறும் சுவடுமட்டுமே காணப்படும். அதுபோல், இறையனுபூதி பெற்றவனிடம் பெயரளவிற்கு மட்டுமே அகங்காரம், காமம்,கோபம் எல்லாம் இருக்கும்.அவனுக்கு குழந்தையின் நிலை ஏற்பட்டுவிடும்
தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும்,
பல புற்கள் ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம்
வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலானின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்!
🌿🌿🌿
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு
🌿🌿🌿
🌿🌿🌿
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது
🌿🌿🌿
🌿🌿🌿
எப்படி எங்கும் வியாபித்துள்ள ஆகாசம் சூட்சுமமாயிருப்பதால் களங்கமடைவதில்லையோ,அப்படியே எங்கும், உடல்முழுவதும் நிறைந்திருக்கின்ற ஆத்மா களங்கமடைவதில்லை
🌿🌿🌿
🌿🌿🌿
கீதையில் கண்ணன் சொல்வது போல் எதிலும் சமநோக்கு ஏற்படும் நிலை வந்தால்தான், மனநிம்மதி சாத்தியமாகும்.
எனது வாழ்க்கையிலேயே இதற்கான அனுபவங்கள் உண்டு.
முதலில் நான் மனதாரக் காதலித்த பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் கவலைப்பட்டேன்.
நிம்மதி இழுந்தேன்.
பிறகு திருமணம் பேசும்போது, நான் குறிப்பிட்ட பெண் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் மீண்டும் நம்பிக்கை இழந்தேன்.
‘விரும்பியது கிடைக்காததால், கிடைத்ததை விரும்புய என்ற பழமொழிபடி கிடைத்ததை விரும்பத் தொடங்கி, செயற்கையான நிம்மதியைத் தேடிக்கொண்டேன்.
நான் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் ஓர் இடத்தில் வேலை பார்த்தபோது, அது எழுபத்தைந்து ஆகாதா என்று ஏங்கினேன்; ஆயிற்று.
.🌸 🌸 🌸..
.🌸 🌸 🌸..
கருத்துகள்