முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NEET Exam 2021 For the attention of parents of students waiting to write

Subbiahpatturajan


NEET Exam 2021 For the attention of parents of students waiting to write



"உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி  குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு. 

நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம். 
 
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100ற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? 

அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR  செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். 
நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது. 

1ST YEAR -1 ஆண்டு
2ND YEAR -1½ ஆண்டுகள்
3RD YEAR -1 ஆண்டு
FINAL YEAR -1 ஆண்டு
HOUSE SURGEON -1 ஆண்டு , 

 FAIL ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே ஆக மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். நடுவுல FAIL ஆனா, 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும்.

ஒரு MBBS மாணவன் 3RD YEAR படிக்கும் போது, அவனோடு 12படித்த நண்பன் TIER 1 கல்லூரிகளில் B.E , B. TECH இல் சேர்ந்தவன் "மச்சி நா கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டேன். மாசம் 50,000 சம்பளம் " என்று போன் பண்ணி சொல்லி depression ஆக்கி விடுவான். " நாம தப்பா MBBS எடுத்துட்டோமோனோ "நினைக்க வைத்து விடுவான். 

ஒரு வழியா MBBS முடிச்சு degree வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது ?
பெரிய மருத்துவமனைகளில் duty doctor ஆக பணியில் சேரலாம். மாசம் 25,000-30,000 கிடைக்கும். 
கிளினிக் ஆரமிச்சா "அவன் வெறும் MBBS டாக்டர், அவன்கிட்ட போவாத. MD டாக்டர் கிட்ட போ" னு ஒரு கேசும் வராது. 

சரி. MD படிக்கணும்னா, அதுக்கும் NEET நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு  2-3 வருஷம் PREPARE பண்ணனும். அதுக்கப்புறம் MD  சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். ( அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் rare) 

அதுக்குள்ள அந்த கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆன என்ஜினீயரிங் நண்பன், 10 வருஷம் நல்லா சம்பாரிச்சு, EMI ல கார் வாங்கிருப்பான். HOME LOAN போட்டு வீடு கட்டிருப்பான். இல்லனா USA/AUSTRALIA ல செட்டில் ஆயிருப்பான். 

சரி பரவால்ல, லேட் ஆனா என்ன ? அதான் MD முடிச்சாச்சே இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கும் னு நீங்க நினைக்கலாம். அங்க தான் ட்விஸ்ட். 

1.அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசு பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, " அதான் கிளினிக் ல நல்லா சம்பாரிக்கிராங்களே. இவனுங்க பாக்குற  வேலைக்கு இந்த சமபளம் போதாதா ?" என்று மருத்துவர்களை  திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்

2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால் அங்கே நாம் 12ஆவது முடித்தவுடன் குடுக்கும் பேட்டியில் செய்வதாக சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. HOSPITAL  POLICIES மற்றும் PROTOCOL களுக்கு கட்டுப்பட்டு தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது. 

3.இன்றைய கால கட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, கிளினிக் கட்டுவது ரொம்ப சிரமம். அப்படியே புதுசா கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒன்னு அரசு மருத்துவமனைக்கு போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள்.  கிளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5-10 வருடங்கள் ஆகி விடும் .

கிளினிக்கில் வெற்றி பெற,  புத்தக அறிவு மட்டும் போதாது, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செஞ்சாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி" 
அது இல்லைனு முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். கிளினிக் ல ஒக்காந்து ஈ தான் ஓட்டனும்.

அவ்வளவு ஏன் ? சாதாரண மக்களுக்கு கொரோனா இறப்பு சதவீதம் 2% . டாக்டர்களின் இறப்பு சதவீதம் 15%

எனவே பெற்றோர்களே,  நீங்கள் நினைப்பது போல மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது தினிக்காதீர்கள். " என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேணா என்று தெரியவில்லை " என்று NEET தேர்வுக்கு முதல் நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவச்செல்வங்கள்  இறப்பது மிகவும் வேதனையான விஷயம். 
வீட்டிலேயே உட்கார்ந்து 2 ஆண்டுகளாக NEET தேர்வுக்கு படிப்பதெல்லாம் மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்க கூடியவை. MBBS கிடைக்கலைனா, Genetic engineering, Robotics, Microbiology, Embryology, Agri போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிரகாலத்தில் மிகவும் most wanted படிப்புகளாக இருக்கப்போகிறது. 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, வானத்தை போல பிரபுதேவா போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள்.  ஆதித்ய வர்மா/அர்ஜுன் ரெட்டிய  நினைச்சுகோங்க. அதான் இன்றைய நிலை.

நன்றி... டாக்டர்

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS, MD
மன்னார்குடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...