Subbiahpatturajan
#சினார்தமிழன் #cinartamilan #kuttystory
நான் எப்போதும் மோடி ஜி யை விமர்சிப்பவனாகவே இருந்து வருகிறேன், ஆனால் இன்று அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு தெரியுமா..!!!
மோடி இரண்டு முறை பிறந்தவர் - முதலில் ஆகஸ்ட் 29, 1949 (அவரது டிகிரி சான்றிதழில் உள்ளது) மற்றும் இரண்டாவது செப்டம்பர் 17, 1950 (பொதுவாக அறியப்படுவது). 1950 இல் பிறந்த மோடி, தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,
ஆனால் அந்த காலக்கட்டத்தில் வாட்நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973 இல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.
மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார், ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே 1983 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்.
Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே.
குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதை 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்.
Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார்.
இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும் பேராசிரியரும் கண்டுபிடிக்கபடவில்லை.
இந்தியாவில் கணினிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது.
1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன்பிறகான 10 ஆண்டுகளுக்கு பின்பும், சான்றிதழ்கள் பல்கலைகழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன.
1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font) 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப்பட்டது.
அலுவலங்கங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் மோடியின் சான்றிதழ் அச்சிடப்பட்டுள்ளது.
மோடிஜியின் வாழ்க்கையில் தான் எத்துனை ஆச்சரியங்கள், எத்தனை அதிசயங்கள்..
இப்பேற்பட்ட அதிசயப்பிறவி பிரதமராய் கிடைக்க ஏழேழு ஜென்மத்திலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும், அப்பேற்பட்ட மகானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதமடைகிறேன்...
கருத்துகள்